Sunday, March 15, 2026

 

                    தராவியா தொழுகை தோன்றிய விதம்


السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

அப்துர் ரஹ்மான் பின் அப்துல் காரீ (ரஹ்) கூறினார்கள்: "நான் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் உமர் பின் அல்-கத்தாப் (ரலி) அவர்க ளுடன் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் வெவ்வேறு குழுக்களாகச் சிதறிக் காணப்பட்டனர். ஒருவர் தனியாகத் தொழுது கொண்டிருப்பார்; மற்றொருவர் தொழுவார், அவருடன் ஒரு சிறு குழுவினர் சேர்ந்து தொழுவர்.

அப்போது உமர் (ரழி) அவர்கள், 'இவர்களை ஒரே காரி (குர்ஆன் ஓதுபவர்) அவர்களின் தலைமையில் ஒன்று சேர்த்தால் அது மிகச் சிறப்பாக அமையும் என்று நான் கருதுகிறேன்' என்று கூறினார்கள். பிறகு உறுதியான முடிவெடுத்து, உபை பின் கஅப் (ரழி) அவர்களின் தலைமையில் மக்களை ஒன்று திரட்டினார்கள்.

பிறகு மற்றொரு இரவில் நான் அவர்களுடன் சென்றேன். மக்கள் தங்கள் காரியைப் (குர்ஆன் ஓதுபவரைப்) பின்பற்றித் தொழுது கொண்டி ருந்தார்கள். (அப்போது) உமர் (ரலி) அவர்கள், 'இது எத்துணை சிறந்த பித்அத் (புதுமையான செயல்)! அவர்கள் (இப்போது) நின்று தொழுவதை விட, அவர்கள் உறங்கும் (நேரத்திற்குப் பிறகு, இரவின் கடைசிப் பகுதியில் தொழும்) தொழுகையே சிறந்தது' என்று கூறினார்கள்.

(உமர் (ரழி) அவர்கள் உறங்கும் நேரம் என்று) நாடியது இரவின் கடைசிப் பகுதியாகும். மக்களோ இரவின் ஆரம்பப் பகுதியில் தொழுது கொண்டி ருந்தார்கள்." [ஸஹீஹுல் புகாரி : 2010]

الحمدلله

               

No comments:

Post a Comment

  Good (righteous) deeds السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ Narrated Ibn `Umar (RA): Allah...