Tuesday, August 25, 2026

 

14. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ

   


 وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا‏○ اِنَّمَا نُطْعِمُكُمْ لِـوَجْهِ اللّٰهِ لَا نُرِيْدُ  مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا‏

                  

நல்லோர்கள், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத் தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.

உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் திருமுகத்தை (திருப்பொருத்தத் திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென் பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்). (அல்குர்ஆன்:76: 8 & 9)

முந்தைய வசனத்தில், நல்லோர்களின் குணங்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:

 அவர்கள் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்று வார்கள்,

அல்லாஹ் தங்களுக்குத் தடைசெய்த காரியங் களைக் கைவிடுவார்கள்,.

அல்லாஹ்வின் வணக்கத்திற்குக் கீழ்ப்படிதலு டன் தங்களை அர்ப்பணிப்பார்கள்,

மறுமை நாளில் வரவிருக்கும் தீய விசாரணை யைக் குறித்து அவர்கள் அஞ்சுவார்கள்,

தாங்களே அந்த உணவை விரும்பினாலும், அதை மற்றவர்களுக்கு கொடுப்பார்கள்,

அல்லாஹ்வின் திருமுகத்தை மட்டுமே நாடி, அவனது வெகுமதியையும் திருப்தியையும் எதிர்பார்த்து உணவளிப்பதாகக் கூறுவார்கள்,

அவர்கள் தங்களுக்குப் பிரதிபலனாக வெகுமதி யையோ நன்றியையோ எதிர்பார்க்க மாட்டார்கள்.

முஜாஹித் மற்றும் ஸயீத் பின் ஜுபைர் இருவரும் கூறினார்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் இதைத் தங்கள் நாவுகளால் கூறுவ தில்லை; மாறாக, அல்லாஹ் அதை அவர்களின் உள்ளங்களில் அறிந்து, அதற்காக அவர்களைப் புகழ்கிறான்."

குர்ஆனில் அல்லாஹ் கூறியது போல், அவர்கள் நன்னெறி அடையவும், மனிதகுலத்தைக் காப் பாற்றவும் செய்கிறார்கள்:

நீங்கள் விரும்பும் பொருளைச் செலவழிக்கா விட்டால், நீங்கள் அல்-பிர் (நன்னெறி) அடையவே மாட்டீர்கள். (3:92)

'யார் ஒரு உயிரைக் காப்பாற்றுகிறாரோ, அவர் மனிதகுலம் அனைத்தையும் காப்பாற்றியதற்குச் சமம்'. [அல் குர்ஆன், 5:32].

இஸ்லாத்தில் சிறந்தது ஏழைகளுக்கு உணவ ளிப்பது:

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவித் தார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "இஸ்லாத்தில் சிறந்தது எது?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(பசித்தோருக்கு) உணவளிப்பதும், நீங்கள் அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் (எந்தப் பாகுபாடுமின்றி) ஸலாம் கூறுவதும் ஆகும்" என்று பதிலளித்தார் கள். [ஸஹீஹுல் புகாரி: 12 & 28 and ஸஹிஹ் முஸ்லிம், 39).

பிறருக்கு உணவளிப்பது ஸதகா ஆகும்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள், 'நீங்கள் உங்களுக்கு உணவளிப்பது உங்க ளுக்கு ஸதகாவாகும். நீங்கள் உங்கள் குழந்தைக் கு உணவளிப்பது உங்களுக்கு ஸதகாவாகும். நீங்கள் உங்கள் மனைவிக்கு உணவளிப்பது உங்களுக்கு ஸதகாவாகும். நீங்கள் உங்கள் அடியானுக்கு உணவளிப்பது உங்களுக்கு ஸதகாவாகும்'. [அல்-அதாப் அல்-முஃப்ராத் 82]

பிறருக்கு உணவளிப்பவர்களே சிறந்த மனிதர்கள்:

ஸுஹைப் இப்னு ஸினன் (ரலி) அவர்கள் அறிவித் தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உங்களில் சிறந்தவர்கள் பிறருக்கு உணவளிப்பவர்களே.” [முஸ்னத் அஹ்மத் 23926]

அண்டை வீட்டாருக்கு உணவளிப்பது பரக்கத் தையும்  நல்லுறவையும் உறுதி செய்கிறது:

அபூ தர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள், ‘நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அபூ தர்ரே, நீங்கள் குழம்பு சமைக்கும்போது, குழம்பில் அதிக தண்ணீர் ஊற்றுங்கள், மேலும் உங்கள் அண்டை வீட்டாரைக் கவனித்துக் கொள்ளுங்கள்”’. [ஸஹீஹ் முஸ்லிம் 2625b]

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இப்னு அஸ்-ஸுபைர் (ரலி) அவர்களிடம் அறிவித்தார்கள், "நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன், 'தன் அண்டை வீட்டுக்காரர் பசியுடன் இருக்கும்போது, யாருடைய வயிறு நிரம்பியிருக்கிறதோ, அவர் முஃமின் அல்ல.'" [அல்-அதாப் அல்-முஃப்ராத், 112]

பிறருக்கு உணவளிப்பது சுவர்க்கத்தை உறுதி செய்கிறது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள், 'அர்-ரஹ்மானை வணங்குங்கள், பிறருக்கு உணவளியுங்கள், ஸலாம் (வாழ்த்துச் செய்தியை) பரப்புங்கள், அப்போது நீங்கள் பாதுகாப்பாக (ஸலாம்) சுவர்க்கத்தில் நுழைவீர்கள்'. [ஜாமி` அத்-திர்மிதி 1855]

அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் கூறினார் கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: "எந்தவொரு நம்பிக்கையாளர், பசியுடன் இருக்கும் ஒரு நம்பிக்கையாளருக்கு உணவளிக் கிறாரோ, மறுமை நாளில் அல்லாஹ் அவருக்குச் சுவனத்தின் கனிகளிலிருந்து உணவளிப்பான். [ஜாமிஉத் திர்மிதீ : 2449]

அலி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக சொர்க்கத்தில் அறைகள் உள்ளன; அவற்றின் வெளிப்புறத்தை அவற்றின் உள்ளிருந்தும், அவற்றின் உட்புறத்தை அவற்றின் வெளியிலிருந்தும் காணமுடியும்." ஒரு கிராமவாசி (அல்லது பாலைவனவாசி) எழுந்து நின்று, "அல்லாஹ்வின் தூதரே! அவை யாருக்காக?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அவை, நல்ல வார்த்தை களைப் பேசுவோர் (மற்றும் நற்செயல்களைக் கூறுவோர்), (தேவையுடையோருக்கு) உணவளிப் போர், (விருப்பமான) நோன்புகளைத் தொடர்ச் சியாக நோற்போர், மேலும் மக்கள் உறங்கும் போது இரவில் அல்லாஹ்விற்காகத் தொழுவோர் ஆகியோருக்காக உள்ளன." [ஜாமிஉத் திர்மிதீ, 1984]

தீர்ப்பு நாளின் தீமையிலிருந்து அல்லாஹ் உணவு அளிப்பவர்களைப் பாதுகாப்பான்:

உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் கூறினார்கள், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: "எவருக்கு மூன்று மகள்கள் இருந்து, அவர்களிடம் அவர் பொறுமையாக (அவர்களை வளர்ப்பதில் ஏற்படும் சிரமங்களைச் சகித்து, அவர்களின் உரிமைகளை நிறைவேற்றுவதில்) நடந்து, தனது வசதிக்கு ஏற்ப அவர்களுக்கு உணவளித்து, குடிநீர் வழங்கி, ஆடை அணிவிக் கிறாரோ, அம்மகள்கள் மறுமை நாளில் அவருக்கு நரக நெருப்பிலிருந்து ஒரு கேடயமாக இருப்பார் கள்." [சுனன் இப்னுமாஜா : 3669]

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள்: 'அல்லாஹ், வல்லமையும் மேன்மையும் மிக்கவன், மறுமை நாளில் கூறுவான் […] “ஆதமின் மகனே, நான் உன்னிடம் உணவு கேட்டேன், நீ எனக்கு உணவளிக்கவில்லை“. அவன் கூறுவான், “இறைவா, நீயே அகிலங்களின் அதிபதியாக இருக்கும்போது, நான் உனக்கு எப்படி உணவளிக்க முடியும்?” அல்லாஹ் கூறுவான், “என் அடியான் இன்னார் உன்னிடம் உணவு கேட்டான், நீ அவனுக்கு உணவளிக்கவில்லை என்பதை நீ அறியவில்லையா? நீ அவனுக்கு உணவளித்திருந் தால், நிச்சயமாக நீ அதற்கான கூலியை என்னி டமே கண்டிருப்பாய் என்பதை நீ அறியவில் லையா?” [ஸஹீஹ் முஸ்லிம் 2569]

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு பெண் தன் வீட்டு உணவிலிருந்து வீண்விரயம் செய்யாமல் (அதாவது, கணவனின் அனுமதி யுடன், குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில்) தர்மம் செய்தால், அவள் தர்மம் செய்ததற்காக அவளுக்கு நற்கூலி கிடைக்கும். மேலும் அவளுடைய கணவனுக்கும் அவன் சம்பாதித்ததற்காக நற்கூலி கிடைக்கும். மேலும் பண்டகசாலைக் காப்பாளருக்கும் அதே போன்ற நற்கூலி கிடைக்கும். அவர்களில் எவருடைய நற்கூலியும் மற்றவர்களின் நற்கூலியில் எதையும் குறைத்துவிடாது." [ஸஹீஹுல் புகாரி: 2065]

ஒருவர் ஒரு மரத்தை நட்டு, அதிலிருந்து ஒரு பறவை/ மனிதன்/ பிராணி உண்டால், அது அவருக்கு ஒரு தர்மம்:

அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள்: "எந்த ஒரு முஸ்லிமும் ஒரு மரத்தை நட்டா லோ அல்லது ஒரு பயிரை விதைத்தாலோ, அதிலி ருந்து ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால், அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்." [ஸஹீஹுல் புகாரி: 2320]

மனிதனுக்கோ அல்லது விலங்குக்கோ உணவ ளிக்காமல் இருப்பது  நரக நெருப்பில் நுழையச் செய்கிறது:

உணவளிப்பது ஒரு முஸ்லிமின்  முக்கிய பண்பா கும் - அவ்வாறு செய்யாமல் இருப்பது ஒரு நிராக ரிப்பவனின் குணமாக குர்ஆனில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான், 'அவர்களிடம், “அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய வற்றிலிருந்து செலவிடுங்கள்” என்று கூறப்படும் போது, நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்ட வர்களிடம், “அல்லாஹ் நாடியிருந்தால், அவன் உணவளித்திருப்பானே, அவனுக்கு நாம் உணவ ளிக்க வேண்டுமா? நீங்கள் தெளிவான வழிகேட் டில் இருக்கிறீர்கள்” என்று கூறுகிறார்கள்' [அல் குர்ஆன், 36:47]. அல்லாஹ் மேலும் கூறுகிறான், 'அவர்களைப் பிடித்து விலங்கிடுங்கள் என்று கூறப்படும்... ஏனெனில் அவர்கள் மிகப் பெரிய வனான அல்லாஹ் மீது ஒருபோதும் நம்பிக்கை கொள்ளவில்லை, ஏழைகளுக்கு உணவளிப்பதை யும் ஊக்குவிக்கவில்லை'' [அல் குர்ஆன் 69:33-34].

அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித் தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பெண், ஒரு பூனையின் காரண மாக வேதனை செய்யப்பட்டாள். அப்பூனை பசி யால் சாகும் வரை அவள் அதை அடைத்து வைத் திருந்தாள்; அதனால் அவள் நரகத்தில் நுழைந் தாள்.” மேலும் (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்: “(அல்லாஹ்வே மிக அறிந்தவன்!) ‘நீ அதை அடைத்து வைத்திருந்தபோது, அதற்கு நீ உணவ ளிக்கவுமில்லை; அதற்குத் தண்ணீர் புகட்டவு மில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்பதற் காவது அதை நீ விடுவிக்கவுமில்லை’ (என்று அல்லாஹ் கூறினான்).” [ஸஹீஹுல் புகாரி: 2365]

الحمدلله

 

 

14. Quran verses and the related Ahadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا‏○ اِنَّمَا نُطْعِمُكُمْ لِـوَجْهِ اللّٰهِ لَا نُرِيْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا‏ ○

They (Abrar - the righteous people) give food in spite of love for it - to the needy, the orphan, and the captive, [Saying], "We feed you only for the face [i.e., approval] of Allāh. We wish not from you reward or gratitude. [Al Quran, 76:8 &9]

Allah says in previous aayath, about the qualities of righteous people:

★ they fulfill their vows,

★ abandon those forbidden things which Allah has prohibited for them,

★ devote to worship Allah with obedience,

★ they fear about the evil reckoning on the Day of Return,

★ they give food while they themselves love it and desire it'

★ saying they feed, seeking Allah's Face only, hoping for the reward of Allah and His pleasure and

★ they wish  neither reward, nor thanks  in return from them.

Mujahid and Sa`id bin Jubayr both said, "By Allah! They do not say this with their tongues, but rather, Allah knows it in their hearts and He commends them for it."

As Allah said in Quran they attain righteousness and save humanity:

By no means shall you attain Al-Birr (righteousness) unless you spend of that which you love. (3:92) Whoever saves one (life) - it is as if he had saved all of humanity’. [Al Qur’an, 5:32]

Feeding the poor is the best deed in Islam:

Narrated 'Abdullah bin 'Amr (RA): A man asked the Prophet (SAW) , "What sort of deeds or (what qualities of) Islam are good?" The Prophet (SAW) replied, 'To feed (the poor) and greet those whom you know and those whom you do not Know (Sahih al-Bukhari 12 & 28 and Sahih Muslim, 39).

Feeding is  Sadaqah:

The Messenger of Allah (saw) said, ‘What you feed yourself is Sadaqah for you. What you feed your child is Sadaqah for you. What you feed your wife is Sadaqah is for you. What you feed your servant is Sadaqah for you’ [Al-Adab Al-Mufrad 82]

Those who feed others are the best persons:

Suhayb ibn Sinan (RA) reported: The Messenger of Allah (SAW), said, “The best of you are those who feed others.” [Musnad Aḥmad 23926]

Giving food to neighbours brings barakah & ensures good relationship:

Abu Dharr (RA) reported, ’The Prophet (SAW) said, “O Abu Dharr, when you cook a stew, put more water in the broth and take care of your neighbours“’. [Sahih Muslim 2625b]

Ibn 'Abbas (RA) informed Ibn az-Zubayr (RA), "I heard the Prophet (SAW), say, 'He is not a believer whose stomach is filled while his neighbor goes hungry.'" [Al-Adab Al-Mufrad, 112]

Feeding others ensures Paradise:

The Messenger of Allah (saw) said, ’Worship Ar-Rahman, feed others, spread the (greeting of) peace, then you will enter Paradise with security (salam)’. [Jami` at-Tirmidhi 1855]

On another occasion, he ( SAW) mentioned:  Whichever believer feeds a hungry believer, Allah feeds him from the fruits of Paradise on the Day of Resurrection…[Jami` at-Tirmidhi 2449]

In addition to this immense reward, Ali (RA) said that the Messenger of Allah (SAW) said, ’“Indeed, in Paradise there are chambers whose outside can be seen from their inside, and their inside can be seen from their outside”. A Bedouin stood and said, “Who are they for, O Messenger of Allah?” He said, “For those who speak well, feed others, fast regularly, and perform Salah during the night while the people sleep”’ [Jami` at-Tirmidhi 1984].

Allah will protect them from the evil of that Day of Judgement:

'Whoever has three daughters and is patient towards them, and feeds them, gives them to drink, and clothes them from his wealth - they will be a shield for him from the Fire on the Day of Resurrection’ [Sunan Ibn Majah 3669].

The Messenger of Allah (saw) said, 'Allah, Mighty and Sublime be He, will say on the Day of Resurrection […] “O son of Adam, I asked you for food and you did not feed Me“. He will say, “O Lord, how can I feed You when You are the Lord of the worlds?” He (Allah) will say, “Did you not know that My servant so-and-so asked you for food and you did not feed him? Did you not know that had you fed him you surely would have found that (the reward for doing so) with Me?" [Sahih Muslim 2569]

Ayesha (RA) reported that the Messenger of Allah (SAW) said, ‘When a woman spends (and Ayesha [RA] added that herfather had specified ’when a woman feeds ‘) from her husband’s house, without spending too much, she will have her reward, and he will be rewarded likewise because he earned it, and she will be rewarded for what she spent…’ [Sahih Bukhari, 2065]

Planting a fruit bearing tree is kind of Charity:

Narrated Anas bin Malik: Allah's Messenger (SAW) said, "There is none amongst the Muslims who plants a tree or sows’ seeds, and then a bird, or a person or an animal eats from it, but is regarded as a charitable gift for him." [Sahih al-Bukhari 2320]

Not feeding human or an animal makes them to enter fire:

Giving food is an important part of being a Muslim - and not doing so is specifically mentioned in the Qur’an as a quality of a disbeliever. Allah says, 'And when it is said to them, “Spend from that which Allah has provided for you”, those who disbelieve say to those who believe, “Should we feed one whom, if Allah had willed, He would have fed? You are not but in clear error”’ [The Noble Qur’an, 36:47]. Allah also says, 'It will be said, “Seize and shackle th¹em...For they never had faith in Allah, the Greatest, nor encouraged the feeding of the poor"' [The Noble Qur'an 69:33-34].

The Messenger of Allah (saw) said, 'A woman punished her cat by imprisoning it until it died of hunger and because of it, she entered the Fire. It was said - and Allah knows best - ”You did not feed it nor give it water when you imprisoned it, nor did you release it and let it eat from the creatures which creep on the earth”’ [Sahih al-Bukhari, 2365].

الحمدلله



Friday, August 21, 2026

 

13. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ

  


     

الْهٰٮكُمُ التَّكَاثُرُۙ‏ حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَ

செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) திசை திருப்பி விட்டது- நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. (அல்குர்ஆன் : 102:1 & 2)

அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்கள் அனைவரும் இவ்வுலகின் இன்பங்கள், அலங்காரங்கள், செல்வங்கள், பொருட்கள், பதவி, அந்தஸ்து, பிற மனிதர்கள் மீதான நேசத்தில் மூழ்கியிருக்கி றார்கள். இதனால் அவர்கள் மறுமையைத் தேடுவ திலிருந்தும் அதை விரும்புவதிலிருந்தும் திசை திருப்பப் படுகிறார்கள்.  மரணம் அவர்களை வந்தடைந்து, அவர்கள் மண்ணறை வாசிகளாக மாறும் வரை  அலட்சியத்திலேயே இருந்து மறுமைக்காக சம்பாதிப்பதைத்  தாமதப்படுத்து கிறார்கள், தவிர்க்கிறார்கள். 

ஆஹதீஸ்:

அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார் கள்:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: "மனிதனுக்கு (ஆதமின் மகனுக்கு) தங்கம் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கு இருந்தாலும், தனக்கு இரண்டு பள்ளத்தாக்குகள் இருக்க வேண்டும் என்றே அவன் விரும்புவான். மண்ணைத் தவிர வேறு எதுவும் அவனது வாயை நிரப்பாது (அவனது பேராசையை மரணம் மட்டுமே முடிவுக்குக் கொண்டுவரும்). மேலும், பாவமன்னிப்புக் கோருபவரை அல்லாஹ் மன்னிக்கிறான் (அவனது தவ்பாவை ஏற்றுக் கொள்கிறான்)." [ஸஹீஹுல் புகாரி : 6439]

அபு ஹுரைரா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: "அடியான் 'எனது செல்வம், எனது செல்வம்' என்கிறான். உண்மையில் அவனது செல்வத்தில் அவனுக்குரியவை மூன்றே மூன்றுதான்: அவன் உண்டு முடித்தது, அல்லது உடுத்திக் கிழித்தது, அல்லது தர்மம் செய்து அனுப்பி வைத்தது.[சுனநுந் நஸாயி, 3613 & ஜாமிஉத் திர்மிதீ, 2342 & 3354] அவை அல்லாத மற்றவை அனைத்தும் அவனை விட்டு நீங்கிவிடக் கூடியவை; அவற்றை அவன் மக்களுக்காக விட்டுச் சென்றுவிடுவான். 

[ஸஹீஹுஹ் முஸ்லிம், 2959 a and 1047 a]

அனஸ் பின் மாலிக் (ரழி)   அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்)  கூறியதாக பதிவு செய்துள் ளார்கள்: "இறந்தவரை மூன்று விஷயங்கள் பின்தொடர் கின்றன. அவற்றில் இரண்டு திரும்பி விடுகின்றன; ஒன்று மட்டும் அவருடன் தங்கிவிடு கிறது. அவரது குடும்பம், செல்வம் மற்றும் அவரது  அமல ஆகியவையே அவரைப் பின்தொடர் கின்றன. அவரது குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன; அவரது செயல் மட்டும் அவருடன் தங்கிவிடுகிறது. [ஸஹீஹுல் புகாரி 6514 மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் 2960]

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக  அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: “ஆதமு டைய மகன் முதுமையடைகிறான்; அவனுடன் இரண்டு (ஆசைகள்) வளர்கின்றன: செல்வத்தின் மீதான அன்பு மற்றும் நீண்ட ஆயுள் (மீதான ஆசை).” [ஸஹீஹுல் புகாரி : 6421 மற்றும் சுனன் இப்னுமாஜா,4234]

الحمدلله

 

 

13. Quran verse and the related Ahadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

                           


الْهٰٮكُمُ التَّكَاثُرُۙ‏ حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَ                                                  

The mutual rivalry for piling up of worldly things diverts you, until you visit the grave [Al Quran, 102: 1& 2]

Allah says that every human being is preoccupied with love of this materialistic world, its delights and its adornments, his position and status and love for other human beings. It distains and distracts him till he gets his death and goes to grave. This attitude delays and prevents him from seeking the benefits of Hereafter.

Ahadhees:

Narrated Anas bin Malik (RA) who reported that Ubayy bin Ka`b (RA), hearing from the Allah's Messenger (SAW) said, "If Adam's son had a valley full of gold, he would like to have two valleys, for nothing fills his mouth except dust. And Allah forgives him who repents to Him." [Sahih al-Bukhari, 6439 and Sahih Muslim 1048 c]

It was narrated from Mutarrif (RA), from his father, that the Prophet (SAW) said: "The mutual rivalry (for piling up of worldly things) diverts you, 'Until you visit the graves (i.e. till you die).' The son of Adam says: 'My wealth, my wealth,' but your wealth is what you eat and consume, or what you wear and it wears out, or what you give in charity and send on ahead (for the Hereafter).'" [Sunan an-Nasa'i, 3613 & Jami` at-Tirmidhi 2342 &  3354] and what is beyond this (it is of no use to you) because you are to depart and leave it for other people. [Sahih Muslim, 2959 a and 1047 a]

Narrated Anas bin Malik (RA): Allah's Messenger (SAW) said, "When carried to his grave, a dead person is followed by three, two of which return (after his burial) and one remains with him: his relative, his property, and his deeds follow him; relatives and his property go back while his deeds remain with him." [Sahih al-Bukhari 6514 & Sahih Muslim 2960]

It was narrated from Anas (RA) that the Messenger of Allah (SAW) said: “The son of Adam grows old but two things remain young in him: His craving for wealth and his craving for a long life.” [Sahih al-Bukhari, 6421 & Sunan Ibn Majah, 4234]

الحمدلله

Wednesday, August 19, 2026

 

12. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ


                                                        

 وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوْا بِهَا‌ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ  بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ اِذَا هُمْ يَقْنَطُوْنَ

இன்னும் நாம் மனிதர்களை (நம்) அருளை அனுப விக்கச் செய்தால். அவர்கள் அதைக் கொண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிரா சைப்பட்டு விடுகிறார்கள். (அல் குர்ஆன் :30:36)

இத்தகைய மனித இயல்பு கண்டிக்கத்தக்கதாகும். ஏனெனில், "மனிதனுக்கு அருட்கொடைகள் வழங் கப்படும்போது அவன் மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டு,என்னை விட்டுத் துன்பங்கள் நீங்கி விட்டன.  (அல் குர்ஆன்:11:10) என்று கூறுகிறான். ஆனால், அல்லாஹ் பாதுகாத்து உதவி செய்தவர் கள் இதற்கு விதிவிலக்கானவர்கள்.

ஆனால், மனிதனுக்குச் சிரமங்கள் ஏற்படும்போது, இனி எக்காலத்திலும் தனக்கு நல்லவை நடக்காது என்று நம்பிக்கையிழந்து விடுகிறான். அல்லாஹ் கூறுகிறான்: எவர் பொறுமை காத்து, நற்செயல் கள் புரிகிறார்களோ அவர்களைத் தவிர. அவர்கள் கஷ்ட காலங்களில் பொறுமை காக்கிறார்கள் மற்றும் நிம்மதியான காலங்களில் நற்செயல்கள் செய்கிறார்கள்.

ஆஹதீஸ் 

"ஒரு முஃமினின் நிலை எவ்வளவு ஆச்சரியமானது! அவனுடைய அனைத்து நிலைகளிலும் அவனுக்கு நன்மை இருக்கிறது. இது ஒரு முஃமினுக்கு மட்டுமே உரியது. அவனுக்கு ஒரு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால், அவன் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துகிறான்; அது அவனுக்கு நன்மையாக அமைகிறது. அவனுக்கு ஒரு துன்பகரமான நிலை ஏற்பட்டால், அவன் பொறுமையாக இருக்கிறான்; அது அவனுக்கு நன்மையாக அமைகிறது." [ரியாதுஸ் ஸாலிஹீன், 27]

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஓர் அடியான், விதியை அதன் நன்மை தீமைகளுடன் நம்பி, தனக்கு ஏற்பட்ட ஒன்று தன்னைத் தவறியிருக்காது என்பதையும், தன்னைத் தவறிய ஒன்று தனக்கு ஏற்பட்டிருக்காது என்பதையும் அறியும் வரை, அவன் (முழுமையான) ஈமான் கொண்டவனாக ஆகமாட்டான்.' [ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ் ஸலாம் பதிப்பு) ஜாமிஉத் திர்மிதீ : 2144]

الحمدلله

 

12. Quran verse and the related Ahadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


                                                          

وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوْا بِهَا‌ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ  بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ اِذَا هُمْ يَقْنَطُوْنَ

If We give people a taste of mercy, they become prideful ˹because˺ of it. But if they are afflicted with an evil for what their hands have done, they instantly fall into despair. [30:36]

This is a denunciation of man for the way he is, except for those whom Allah protects and helps, for when man is given blessings, he is proud, and says: "Ills have departed from me." Surely, he is exultant, and boastful. (Al Quran, 11:10).

He rejoices over himself and boasts to others, but when difficulties befall him, He despairs of ever having anything good again. Allah says: Except those who show patience and do righteous good deeds). They are patient during times of difficulty and do good deeds at times of ease.

Ahadith

Abu Yahya Suhaib bin Sinan (RA) reported that: The Messenger of Allah (SAW) said, "How wonderful is the case of a believer; there is good for him in everything and this applies only to a believer. If prosperity attends him, he expresses gratitude to Allah and that is good for him; and if adversity befalls him, he endures it patiently and that is better for him". [Riyad as-Salihin 27 And Sahih Muslim 2999]

Jabir bin 'Abdullah narrated that the Messenger of Allah (s.a.w) said: 'A slave (of Allah) shall not believe until he believes in Al-Qadar, its good and its bad, such that he knows that what struck him would not have missed him, and that what missed him would not have struck him. [ Jami At Tirmidhi, 2144]

الحمدلله

Monday, August 17, 2026

 

11. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ


 

وَيَدْعُ ٱلْإِنسَـٰنُ بِٱلشَّرِّ دُعَآءَهُۥ بِٱلْخَيْرِ ۖ وَكَانَ ٱلْإِنسَـٰنُ عَجُولًۭا

மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த் திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக் காரனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 17:11)

எல்லாம் வல்ல அல்லாஹ் எப்போதும் அனைவரின் பிரார்த்தனை களையும் செவியுறுகின்றான், ஆனால் அவனிடம் செய்யப்படும் பிரார்த்த னைகளை அதிகமாக ஏற்றுக்கொள்ளும் சில நேரங்களை அவன் நிர்ணயித்துள்ளான். எனவே, ஒருவர் தன்னையோ, தன் பிள்ளைகளையோ, தன் தொழிலையோ சபிக்கக் கூடாது. ஏனெனில், அல்லாஹ்வால் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப் படும் நேரத்தில் அவ்வாறு செய்தால், ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் அதற்காக வருந்த நேரிடும்.

மனிதன் சில நேரங்களில் தனக்கு எதிராகவோ, தனது பிள்ளைகளுக்கு எதிராகவோ அல்லது தனது செல்வத்திற்கு எதிராகவோ தீமை வேண்டிப் பிரார்த்திக்கிறான். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேரிட வேண்டும் என்றோ, அவர்கள் இறந்துவிட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும் என்றோ அவன் சாபமிட்டுப் பிரார்த்திக்கிறான். அல்லாஹ் அவனது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டால், அதன் காரணமாக அவன் அழிக்கப் பட்டுவிடுவான்.

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களுக்கு எதிராகவோ, உங்கள் பிள்ளைக ளுக்கு எதிராகவோ, அல்லது உங்கள் செல்வங்க ளுக்கு எதிராகவோ (கேடு கேட்டுப்) பிரார்த்திக் காதீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் ஒரு நேரத்துடன் ஒத்துப்போய்விடாதீர்கள், அதில் (அவனிடம்) அருட்கொடைகள் கேட்கப்பட்டு (அவை) ஏற்றுக் கொள்ளப்படும். (அப்போது) அவன் உங்களுக்கும் (உங்கள் தீய பிரார்த்தனைக்கு) பதிலளித்துவிடக் கூடும்.” [ரியாதுஸ் ஸாலிஹீன், 1497

முஸ்லிமின் அறிவிப்பில் உள்ளதாவது: "ஒரு அடியான் பாவமான காரியத்திற்கோ அல்லது உறவுகளைத் துண்டிக்கும் காரியத்திற்கோ பிரார்த்தனை செய்யாமலும், அவன் அவசரப் படாமலும் இருக்கும் வரை அவனது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கொண்டே இருக்கும்." "அல்லாஹ்வின் தூதரே! அவசரப்படுதல் என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்: "(பிரார்த்தனை செய்பவர்) 'நான் பிரார்த்தனை செய்தேன், மீண்டும் பிரார்த்தனை செய்தேன்; ஆனால் எனக்குப் பதிலளிக்கப் பட்டதை நான் காணவில்லை' என்று கூறி, அந்த நிலையில் விரக்தியடைந்து பிரார்த்தனை செய்வதைக் கைவிடுவதாகும்." [ரியாதுஸ் ஸாலிஹீன், 1499] (தஃப்சீர் இப்னு கஸீர் : 17:11)

ஆதமின் மகனை இவ்வாறு செய்யத் தூண்டுவது அவனது பதற்றமும் அவசரமுமே ஆகும்  : மேலும் அல்லாஹ் கூறுகிறான், மனிதன் அவசரக்கார னாக இருக்கிறான்.

சல்மான் அல்-ஃபாரிஸி (ரழி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் ஆதம் (அலை) அவர்களின் வரலாற்றைக் குறிப்பிட்டுள்ளனர். ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டபோது, ஆதம் (அலை) அவர்களின் ஆன்மா கால்களை அடைவதற்கு முன்பே அவர்கள் எழுந்திருக்க முயன்றார்கள். அவர்களுக்குள் ஆன்மா ஊதப் பட்டபோது, அது தலையிலிருந்து கீழ்நோக்கி உடலுக்குள் நுழைந்தது. அது மூளையை எட்டிய போது அவர்கள் தும்மினார்கள்; பிறகு "அல்ஹம்து லில்லாஹ்" (புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே) என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ், "ஆதமே! உமது இறைவன் உமக்குக் கருணை புரிவானாக" என்று கூறினான். ஆன்மா கண்களை எட்டிய போது அவர்கள் சுவர்க்கத்தின் கனிகளைப் பார்த்தார்கள். அது வயிற்றை எட்டியபோது உணவை விரும்பினார்கள். ஆன்மா கால்களை அடைவதற்கு முன்பே அவர்கள் சுவர்க்கத்தின் கனிகளைப் பறிப்பதற்காக அவசரமாக எழுந் திருக்க முயன்றார்கள், ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையே அல்லாஹ், "மேலும், மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்" என்று கூறுகிறான்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நன்மைக்காக நாம் செய்யும் துஆக்களுக்குப் பதிலளிப்பது போல், தீமைக்காக நாம் செய்யும் துஆக்களுக்கு அல்லாஹ் பதிலளிப்பதில்லை என்பது அவனது கருணையே. ஏனெனில், அவ்வாறு செய்தால் நாம் அழிக்கப்படுவோம்.

الحمدلله


  14. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்: السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ       وَيُط...