Tuesday, February 24, 2026

 

வி- 7

                          ரமலான் வினா -விடை                 

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

7. அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்கு வோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ள வில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும். (27:82)

الحمدلله

 

Q-7                                                                      

                                  Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

7. And when the word [i.e., decree] befalls them, We will bring forthfor them a creature from the earth speaking to them, [saying] that the peoplewere, of Our verses, not certain [in faith]. [27:82] What is that beast?


الحمدلله

 

 

வி-6                                                       

                     ரமலான் வினா - விடை

السلام عليكم ورحمة الله وبركاتة   

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

6. ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் இறைவன் அல்லாஹ்வே தான்!” என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா?  (40:28)  இவ்வாறு கேட்ட நபர் யார்?

இந்த முஃமின் ஃபிர்அவ்னின் குடும்பத்தைச் சேர்ந்த எகிப்தியர். ஃபிர்அவ்னின் தந்தைவழி ஒன்று விட்ட சகோதரர் இவர், தனது விசுவாசத்தை தனது மக்களிடமிருந்து மறைத்தார்.  ஃபிர்அவ்ன், "மூசா (அலை) அவர்களைக் கொல்ல என்னை விட்டுவிடு" என்று கூறிய நாளில் ஃபிர்அவுனுக்கும் அவனுடைய அரசியல் பிராதானிகளுக்கும் உபதேசித்தார்.

சூரா முஃமின் 26 வானத்திலிருந்து 45-வது வசனத்தின் சாரம்:

அவர் ஃபிர்அவுனின் அவையோரிடம் கேட்டார்: "என் இறைவன் அல்லாஹ் என்று ஒரு மனிதன் கூறியதற்காக நீங்கள் அவனைக் கொல்வீர்களா?"  மேலும் விளக்கினார், "மூசா (அலை) பொய்யர் என்றால், அவர் பொய் அவருக்கு பாவத்தை விளைவிக்கும்; ஆனால் அவர் உண்மையைச் சொன்னால், அவர் அச்சுறுத்தும் சில துன்பங்கள் உங்கள் மீது ஏற்படும். எனவே நீங்கள் அவரையும் அவரது மக்களையும் தனியாக விட்டுவிட வேண்டும், அவர்களுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள்." என கேட்டுக் கொண்டார்.

அவர் மேலும் தொடர்ந்தார், "அல்லாஹ் இந்த ராஜ்ஜியத்தையும், பூமியில் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும்உங்களுக்கு அருளியுள்ளான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதன் மூலமும், அவருடைய தூதரை நம்புவதன் மூலமும், அல்லாஹ்வின் தண்டனையைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பதன் மூலமும் இந்த அருளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்."

இவ்வாறு அவர் ஃபிர்அவ்னின் பக்கம் சேர்ந்தவர் போலவும், தனது மக்களுக்கு நல்வாழ்வை மட்டுமே விரும்புவது போலவும் பேசினார்.

ஃபிர்அவ்ன் தனது மக்களிடம், "எனக்கு நல்லது என்று நான் நினைப்பதை மட்டுமே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்" என்று கூறினார். ஆனால் ஃபிர்அவ்ன் ஒரு பொய்யை இட்டுக்கட்டிவிட்டான். அவன் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்ப மறுத்து, மேலும் தனது மக்களை நேர்மையாக அறிவுரை கூறாமல் நேர் வழி செல்லவிடாமல் தடுத்தான்.

அவர்களது செயல்களின் தீமை அவர்களை சரியான பாதையிலிருந்து தடுத்தது. மேலும் ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அவர்களுக்கு இழப்பு மற்றும் அழிவைத் தவிர வேறொன்றையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால் ஃபிர்அவ்னும் அவரது பிரமுகர்களும், மக்களும் பிடிவாதமாக நடந்து கொண்டபோது, அவர் தான் மறைத்த நம்பிக்கையை  வெளிப்படுத்தினார்.

அவர் கூறினார்: “என் மக்களே! என்னைப் பின்பற்றுங்கள், நான் உங்களுக்கு நன்னெறியின் பாதையில் வழிகாட்டுவேன். இந்த உலக வாழ்க்கை ஒரு இன்பத்தைத் தவிர வேறில்லை, ஆனால் மறுமை நிரந்தரமான வீடு. நல்ல விசுவாசிகள் சொர்க்கத்தில் நுழைவார்கள்."

அவர் அவர்களை இரட்சிப்பின் பக்கம் அழைத்தார். வல்லமையுள்ள, மன்னிப்பவனின் பக்கம் அழைத்தார், ஏனெனில் நாம் எல்லோரும் அல்லாஹ்விடமே திரும்புவோம்.

இறுதியாக அவர் அவர்களிடம், "நான்  என் காரியத்தை  அல்லாஹ்விடம் விட்டுவிடுகிறேன். நிச்சயமாக, அல்லாஹ் (தன்) அடியார்களைப் பார்ப்பவனாக இருக்கின்றான்." என்றார்.

அவர்கள் (அவருக்கு எதிராக) சூழ்ச்சி செய்த தீமைகளிலிருந்து அல்லாஹ் அவரைக் காப்பாற்றினான், அதே நேரத்தில் ஒரு தீய வேதனை ஃபிர்அவ்னின் மக்களைச் சூழ்ந்தது.

"ஜிஹாதில் சிறந்தது ஒரு அநீதியான ஆட்சியாளருக்கு முன் நீதியான வார்த்தையைப் பேசுவதாகும்" என்று கூறும் ஹதீஸின் சிறந்த எடுத்துக்காட்டு இந்த விசுவாசி. மூஸா  (அலை) முடன் காப்பாற்றப்பட்ட பாரா (Pharah) அவர்தான்.

குர்ஆனில் அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை.  சில இஸ்லாமிய மரபுகள் மற்றும் அறிஞர்கள் அவர் பெயர்  ஹிஸ்கீல் அல்லது ஹெஸகீல் (حزقيل) என்று குறிப்பிடுகின்றனர்.

الحمدلله   

                                                                                   

 

Q-5                                                                      

                                Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

6. And a believing man of Firaun’s family, who hid his faith said: “Would you kill a man because he says: My Lord is Allah, and he has come to you with clear signs from your Lord? (40:28). Who is he?

This believing man was a Egyptian belonging to Pharah's family, a paternal cousin of Firaun. He concealed his Faith from his people, till a day when Firaun said, "Leave me to kill Musa (AS)"

He asked, "Would you kill a man because he says: My Lord is Allah? He further explained, "If Musa (AS) is a liar, upon him will be his lie; but if he is telling the truth, some calamity he threatens will befall on you. So you should leave him and his people alone, and not harm them."

He continued, "Allah has blessed you with this kingdom, dominance in the land, power and authority, so take care of this blessing by giving thanks to Allah and believing in his Messenger, and beware of the punishment of Allah." He thus spoke as if he also belonged to Pharaoh’s side, and was only wishing his people well.

Firaun said to his people, in response to this advice of "I only tell you and advise you to do that which I think is good for myself.' But Firaun has fabricated a lie. He betrayed Allah and His Messenger, and cheated his people by not advising them sincerely. The evil of his deeds has hindered from the Right Path, and the plot of Fir’aun led to nothing but loss and destruction for them.

But when Pharaoh and his courtiers behaved stubbornly, he disclosed the secret of his belief. He said: “O my people! Follow me, I will guide you to the way of right conduct. This life of the world is nothing but a enjoyment, but Hereafter is the eternal home. The righteous believer will enter Paradise." He called them to salvation. He invited them to the All-Mighty, the Oft-Forgiving as our return will be to Allah.

Finally he addressed them, "I am telling you, and my affair I leave it to Allah. Verily, Allah is the All-Seer of (His) slaves.” So Allah saved him from the evils that they plotted (against him), while an evil torment encompassed Fir’aun’ people.

He was the best example of hadith which says, "The best of Jihad is to speak a just word before an unjust ruler." He was the one who was saved along with Musa, (AS)

الحمدلله

 

Sunday, February 22, 2026

 




Q-5                                                                        

 Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

5. Allah Subhanahuthala says, "We will certainly drag him by the forelock, a lying, sinful forelock. [96: 15 & 16} Who is he?

Answer: Abu Jahal

He was a most powerful and a great tyrant of Makkah. An arrogant, heartless, most ungrateful transgressor and a strong opposer of Islam. He developed unflinching enmity and hatered towards Islam and Allah's Messanger (SAW)

As a man of wisdom, Abu Jahl was mesmerized and touched by the eloquence of Quran. He liked to hear it during Tahajjud prayers of Prophet (SAW). Though he realized the truth about Islam, his prestige and tribal pride prevented him from becoming a believer.

The Banu Makhzum (Abu Jahl’s clan)  competed with Banu Hashim (Prophet's clan) in everything to attain status and nobility.  ‘A Prophet has come from Banu Hashim, receiveing revelations from the heaven’  By Allah, we will never believe in him and we will never accept his message!” He considers himself self-sufficient and attempts to prevent others from prayer.

Allah says by way of warning and threatening, if he ceases not, We will scorch his forehead a lying, sinful forehead! He was sealed as a lier by Allah Subhanahuthala.

In Arabic culture to pull the hair of forehead is a humiliating and authoritative or a fully controlling act. In two other places Allah mentions forelock in Quran. "...There is no creature but that He holds its forelock [i.e., has full control over it]...".(11:56) ;"The criminals will be known by their marks, and they will be seized by the forelocks and the feet". (55:41).

A Creator knows what He creates. Studies on Neuroscience shows that brain behind the forehead called frontal lobe is the centre of decision making, planning, and initiating voluntary and cognitive behaviors. MRI scans shows that this region is highly active when a person is engaged in lying or deceiving.

That's why Allah made prostration compulsary in Salah, especially two, in every rakath. Every time a person perform prostration Allah guides them to right thinking, become humble and submissive

الحمدلله

 

 





வி-5

                    ரமலான் வினா - விடை

السلام عليكم ورحمة الله وبركاتة   

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

5. நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம். தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை. (96:15 &16). யார் அவன்?

விடை: அபூ ஜஹல்

அபு ஜஹல் மக்காவின் மிகவும் சக்திவாய்ந்த, செல்வாக்கு மிக்க  தலைவன். ஆணவம் கொண்டவன்.  கருணை என்பதே அறவே அற்றவரன். இஸ்லாத்தின் மீதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மீது கடும் பகைமையையும் வெறுப்பையும் வளர்த்து தன் கொடூரத்தை அவ்வப்போது காட்டி பிறரையும் அவ்வாறே கட்டளையிடும் குணம் கொண்டவன்.

அறிவிலும் ஞானத்திலும் சிறந்த அபூ ஜஹல் குர்ஆனின் சொல் நயத்தில் மயங்கிஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகையின் போது குர்ஆன் வாசிப்பதை ஒளிந்து நின்று ரசிப்பான்.  இஸ்லாத்தைப் பற்றிய உண்மையை அவன் உணர்ந்திருந்தாலும், அவனது கௌரவமும், தன் குலப் பெருமையும் அவனை ஒரு விசுவாசியாக மாறவிடாமல் தடுத்தது.

பனூ மக்ஸும் (அபூ ஜஹலின் குலம்) அந்தஸ்தையும், உன்னதத்தையும் அடைய எல்லாவற்றிலும் பனூ ஹாஷிமுடன் (நபியின் குலம்) போட்டியிட்டனர். ‘பனூ ஹாஷிமிலிருந்து ஒரு நபி வந்துள்ளார், வானத்திலிருந்து வெளிப்பாடுகளை இறக்கப் பெறுகிறார். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் அவரை ஒருபோதும் நம்ப மாட்டோம், அவருடைய உபதேசத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!"

என அடிக்கடி தங்கள் இயலாமையை காட்டிக் கொள்வான். தன்னைத் தானே போதுமானவன் என்று கருதி, மற்றவர்களின் தொழுகையைத் தடுக்க பல தடவை முயற்சித்தான். அல்லாஹ் எச்சரிக்கை மற்றும் அச்சுறுத்தல் மூலம், அவன் தனது கொடூர செய்கைகளை நிறுத்தா விட்டால், அவனது நெற்றியை ஒரு பொய்யான, பாவமுள்ள நெற்றியாக மாற்றுவோம் என்ற வசனத்தை இறக்கினான்! அல்லாஹ் அஸ்வஜல் அவனை பொய்யர் என்று குர்ஆனில் பதிவு செய்து விட்டான்.

அரபு கலாச்சாரத்தில் நெற்றி முடியை பிடித்து இழுப்பது என்பது ஒரு அவமானகரமான மற்றும் அதிகாரபூர்வமான அல்லது ஒருவனை முழுமையாகக் கட்டுப்படுத்தும் செயலாகும். வேறு இரண்டு இடங்களிலும் அல்லாஹ் குர்ஆனில் நெற்றி முடியை இழுப்பது பற்றி குறிப்பிடுகிறான்.:"எந்த உயிர்ப் பிராணியா யினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; (11:56). "குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள் (55:41)

ஒரு படைப்பாளன் தான் ஒன்றை படைக்கும் போது எதற்காக, எப்படி  படைக்கிறான் என்பதை அறிவாரன். நரம்பியல் பற்றிய ஆய்வுகள்நெற்றிக்குப் பின்னால் உள்ள மூளை முடிவெடுப்பது, திட்டமிடுவது மற்றும் தன்னார்வ மற்றும் அறிவாற்றல் நடத்தைகளைக் கட்டுபடுத்துவதற்கான மையமாகும். ஒரு நபர் பொய் அல்லது ஏமாற்றுவதில் ஈடுபடும்போது இந்த பகுதி மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதை MRI ஸ்கேன் காட்டுகிறது.

அதனால்தான் அல்லாஹ் நம்மை  ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு சிரம் பணிதலை கட்டாயம் ஆக்கியுள்ளான. ஒருவர் ஒவ்வொரு முறை ஸஜ்தா செய்யும்போதும் அல்லாஹ் அவர்களை சரியான சிந்தனைக்கு வழிநடத்துகிறான். பணிவாகவும் தம்மையே சமர்பிப்பவராகவும்  ஆக்குகிறான்.

 الحمدلله                                                                                                                       

Saturday, February 21, 2026

 

வி-4

                ரமலான் வினா - விடை

السلام عليكم ورحمة الله وبركاتة   

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

4. உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்க வில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் (வெற்று) வார்த்தை, அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான்." (33:4). இந்த வசனம் யாரை குறிப்பிடுகிறது?

விடை: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன் ஜைது இப்னு ஹாரிதா (ரலி)

ஜைது (ரலி) அவர்களின் கதை:

ஒருமுறை ஜைதின் தாய் தனது மகனுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவர்களின் எதிரிகளால்  தாக்கப்பட்டனர். அவர்கள் அந்தச் சிறுவனைப் பிடித்து உகாத் சந்தையில் விற்றனர். பீபி கதீஜா (ரலி) அவர்களின் மருமகன் ஹக்கீம் இப்னு ஹுஸாம்  இந்த இளம் பையனை வாங்கி பீபி கதீஜா (அலை) அவர்களுக்கு பரிசளித்தார்.   பீபி கதீஜா(அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பரிசாக தந்தார்.

நபி (ஸல்) அவர்கள் அவரை அடிமைத்தனத் திலிருந்து விடுவித்து, தனது சொந்த மகனாகவே நடத்தினர். அவர்கள் எப்போதும் ஒன்றாகவே இருந்தனர். ஜைத் "முகம்மது (ஸல்) அவர்களின் அன்பானவர் (ஹபிபி)" என்று அழைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்களுக்கு வெளிப்பாடு வந்தபோது,  முஸ்லிமாக மாறிய முதல் இளைஞர் அவர்.

பல ஆண்டுகளாக ஜைதின் தந்தை ஹாரிதா தனது மகனைத் தேடிக் கொண்டிருந்தார். அவரது குல மக்கள் வருடாந்திர புனித யாத்திரைக்காக மக்காவிற்கு வருகை தந்த போது, ஜைது (ரலி) அவர்களை அடையாளம் கண்டுகொண்டு, அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். ஹாரிதா தனது சகோதரருடன் மக்காவிற்கு வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, தனது மகனை ஒரு பணயமாக திருப்பித் தருமாறு  கேட்டுக் கொண்டார்.


ஜைத் (ரலி) தனது தந்தையுடன் செல்ல விரும்பி னால், அவர் பணயமாக அனுப்பப்படுவார் என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். இருப்பினும், அவர் அவருடன் தங்க விரும்பினால், ஹாரிதா அவரை தங்க அனுமதிக்க வேண்டும். ஜைத் (ரலி) அழைக்கப்பட்டார். அவர் தனது தந்தையை யும் சித்தப்பாவையும் அடையாளம் கண்டு கொண்டார். ஆனால் அவர் உறுதியாக, "நான் இந்த உலகில் எதற்கும் முஹம்மது (ஸல்) அவர்களை விட்டுவிட மாட்டேன்." என கூறினார்


நபி (ஸல்) ஜைது (ரலி) அவர்களை காபாவிற்கு அழைத்துச் சென்று, அவரை தனது மகனாகவும் வாரிசாகவும் தத்தெடுத்ததாக பகிரங்கமாக அறிவித்தார். அவர் ஜைது இப்னு முஹம்மது என்று அழைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தனது மகன் குரைஷிகளின் கௌரவமான குடும்பத்துடன்  இருப்பதாக ஹாரிதா திருப்தி அடைந்தார்.


மேற்கண்ட வசனத்தோடு அல்லாஹுதாலா  இதையும் இறக்கியருளினான்: "வளர்ப்பு மகன்களை அவர்களின் தந்தையின் பெயர்களைக் கொண்டு அழையுங்கள்; இது அல்லாஹ்விடம் மிகவும் நீதியானது; ஆனால் நீங்கள் அவர்களின் தந்தையர்களை அறியாவிட்டால், அவர்கள் உங்கள் விசுவாச சகோதரர்களும் உங்கள் நண்பர்களுமாவார்கள்; நீங்கள் தவறு செய்ததில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை, உங்கள் இதயங்கள் வேண்டுமென்றே செய்வதைத் தவிர (குற்றம் உங்கள் மீது இருக்கலாம்), மேலும் அல்லாஹ் மன்னிப்பவன், கருணையுள்ள வன்." (33:5). அன்றிலிருந்து ஜைத் (ரலி) ஜைத் இப்னு ஹாரிதா (ரலி) என்று அவரது உண்மை யான தந்தையின் பெயரால் அறியப்பட்டார்.

எனவே இந்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டபோது, அல்லாஹ் ஒரு மனிதன் தனது வளர்ப்பு மகனின் முன்னாள் மனைவியை திருமணம் செய்து கொள்ள அனுமதி அளித்தார். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜைது பின் ஹாரிதா (ரலி) அவர்களின் விவாகரத்து பெற்ற மனைவி ஜைனாப் பின்த் ஜஹ்ஷை மணந்தார்கள்.

இஸ்லாத்தில், தத்தெடுக்கப் பட்ட மகனுக்கு, தாய்ப்பால் கொடுத்தால் மட்டுமே மஹ்ரம்களாகவும், வாரிசாகவும் எல்லா வகையிலும் தங்கள் சொந்த மகனாகக் கருத முடியும்.
  

الحمدلله                                                                                                                       

                 

  வி - 7                            ரமலான் வினா -விடை                  السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ...