Tuesday, March 3, 2026

 

வி- 13

ரமலான் வினா -  விடை

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

13. 'அவனை நான் “ஸகர்” (என்னும்) நரகில் புகச் செய்வேன்'. (74:26). யார் அவன்?

விடை:

الحمدلله




 

Q-13                                                                  

Ramzan Quiz


السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ2.

13. Allah Subhanahuthala said, "I will drive him into Saqar". [74:26] Who is he?

 

الحمدلله

Monday, March 2, 2026

வி- 12

ரமலான் வினா -  விடை


السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

12. அல்லாஹ் (அவருக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பி யவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்கா விட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) (2:251) யார் அவர்?

விடைதாவூத் (அலை)

தாவூத் அவரது குடும்பத்தில் நான்காவது மகனாக பிறந்தார். அவரது தந்தை தனது மூன்று மகன்களையும் கோலியாத்துடன் சண்டையிட  ஸால் அரசரின் படைக்கு அனுப்பினார். தாவூத்தை அனுப்பும் போது போரில் பங்கேற்காமல், படையில் உள்ள வீரர்களுக்கு சேவை செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

இரண்டு படைகளும் ஒன்றையொன்று எதிர் கொண்டபோது, கோலியாத் தன்னை எதிர்த்து போரிட ஒரே ஒரு  வீரனை அனுப்பும் படி  சவால் விடுத்தான். யாருக்கும் போதுமான தைரியம் இல்லை. கோலியாத்தை எதிர்த்துப் போராடும் வீரனுக்கு தன் அழகான மகளை மணமுடிக்க அரசர் முன்வந்தார். இந்த  சலுகைக்கு கூட எந்த வீரனும் முன்வரவில்லை.

அனைவரும் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியடையும் வகையில், இளைஞர் தாவூத் முன்வந்தார். அரசர் கூறினார்: "உன் தைரியத்தை நான் பாராட்டு கிறேன், ஆனால் நீ அந்த வலிமை மிக்க வீரனுக்கு இணையான வன் அல்ல." என்று. ஆனால் அவர் தான்ஒரு சிங்கத்தையும் கரடியையும் கொன்றதா கவும், மேலும் அவரது தோற்றத்தைக் கொண்டு அவரை மதிப்பிட வேண்டாம் என்றும் பணிவுடன் கூறினார்,

அரசர் ஒப்புக்கொண்டு அவருக்கு கவசம் அணி வித்து வாளைக் கொடுத்தார். அவரது இயக்கங் களைத் தடுக்கும் கவசம் அவருக்கு சங்கடமாக இருந்தது. அவர் கவசத்தை கழற்றி விட்டுஒரு சில கூழாங்கற்களையும், கவணையும் எடுத்து, எதிரியை நோக்கி நடக்க ஆரம்பித்தார், "அல்லாஹ் நிச்சயமாக இந்த வீரனிடமிருந்து என்னைப் பாதுகாப்பான்!"

கோலியாத் இளம் தாவூதைப் பார்த்து சத்தமாக சிரித்து கர்ஜித்தான்: "நீ விளையாடுகிறாயா? அல்லது உன் வாழ்க்கை சோர்வடைந்துவிட்டதா? என் வாளை ஒரே ஒரு முறை எடுத்து உன் தலையை வெட்டுவேன்!" தாவூத் பதிலுக்குக் கத்தினார்: "நான் அல்லாஹ்வின் பெயரால் உன்னை எதிர்கொள்கிறேன். கொல்லுவது வாள் அல்ல, அல்லாஹ்வின் சக்தியும் விருப்பமும்  தான்!" என்று.

அப்படிச் கூறி, அவர் தன் கவணை எடுத்து, கூழாங்கல்லால்  கோலியாத்தின் நெற்றிக்கு குறிவைத்தார். அவன் வாளை உருவுவதற்கு  முன்பே, இரத்தம் சிந்த, உயிரற்ற நிலையில் வீழ்ந்தான். இதைப் பார்த்ததும், அவனுடைய ஆட்கள் ஓட்டம் எடுத்தனர். தன்னாட்சி கண்ட அரசர் தன் வார்த்தையைக் காப்பாற்றி, தன் மகளை கொடுத்து, அவரைத் தன் முக்கிய ஆலோசகர்களில் ஒருவராக எடுத்துக் கொண்டார்.

எனவே, அல்லாஹ் ஒரு கூட்டத்தினரை இன்னொரு கூட்டம் மூலம் தடுக்காவிட்டால், பூமி உண்மையில் தீமையால் நிறைந்திருக்கும்.

பின்னர், ஆட்சி தாவூத் (அலை) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, மேலும் அல்லாஹ் நபித்துவத்தை அவருக்கு வழங்கினான், தான் விரும்பியதை அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.

அவர் தனது இனிமையான குரலால் அல்லாஹ் வைப் புகழ்ந்தார். மலைகளும் பறவைகளும் அவருடன் சேர்ந்து துதித்தன. ருக்கு ஞானத்தைக் கொடுத்து, ஜபூரை அவர் மூலமாக இறக்கி வைத்தான்  அல்லாஹ் அவருக்கு இரும்பை மென்மையாக்கி. நெருப்பின்றி பாதுகாப்பு கவசத்தை உருவாக்க கற்றுக் கொடுத்தான்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (அலை) அவர்கள் அறிவித்தார்: "நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வுக்கு நோன்பு வைப்பதில் மிகவும் விருப்பமானது தாவூத் (அலை) அவர்களின் நோன்பு ஆகும். அவர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என வருட முழுவதும் நோன்பு நோற்பார். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத்தின் தொழுகையாகும். அவர் பாதி இரவில் தூங்குவார், இரவில் மூன்றில் ஒரு பங்கு வணக்கத்தில் செலவிடுவார், பின் ஆறில் ஒரு பங்கு தூங்குவார்." [சாஹிஹ் அல்-புகாரி, 3420. சுனன் அன்-நஸாயி 1630]

الحمدلله



 

 

Q-12                                                                     

Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

12. Allah gave him the kingship and prophethood and taught him fromthat which He willed. And if it were not for Allah checking [some] people bymeans of others, the earth would have been corrupted. (2: 251). Who is thatProphet?

Answer: Dawud (AS).

Dawud was the fourth son in his family. His father sent all his three sons to King Saul's army to fight with Goliath. He asked Dawud not to participate in fighting but do services to soldiers in the army.

When the two armies faced each other, Goliath challenged any soldier from King Saul's army to single combat. No one had enough courage to volunteer. The king offered his pretty daughter in marriage to the man who would fight Goliath.  Even with this tempting offer no soldier volunteered.

To everyone's surprise, youth Dawud stepped forward. Everybody was shocked. Saul said: "I admire your courage, but you are no match for that mighty warrior." But he told the king that he had killed a lion and bear and said humbly not to judge him by his appearance,

King Saul agreed and dressed him with armour and gave sword. He felt uncomfortable with armour that obstructed his movements. He removed the armor, then collected a few pebbles and his sling, he began to walk towards the enemy saying "Allah will certainly protect me from this brute!"

Goliath laughed loudly by seeing young Dawud, he roared: "Are you out to playing?  Or are you tired of your life? I will simply cut off your head with one swipe of my sword!" Dawud shouted back: "I face you in the name of Allah. It is not the sword that kills but the Will and Power of Allah!"

So saying, he took his sling and pebble aimed it at Goliath's forehead. He thumped to the ground, bleeding, lifeless, before he had a chance to draw his sword. Seeing this, his men took to their heels.  Saul kept his word and married his daughter and took him as one of his chief advisors.

Thus the earth would indeed be full of mischief if Allah did not check one set of people by means of another.

Later, the kingship was transferred to Dawud (AS) and Allah granted Prophet hood taught him of that which He willed.

With his sweet voice he glorified Allah. Mountains and birds also glorified along with him. He gave the wisdom and revealed the Zaboor (Psalms) to him. He made iron soft to him so that he can make protective armour without fire.

Narrated `Abdullah bin `Amr: "The Prophet (SAW) said: 'The most beloved of fasting to Allah is the fasting of Dawud (AS)  He used to fast one day and not the next through out the year. And the most beloved of prayer to Allah is the prayer of Dawud. He used to sleep half the night, spend one-third of the night in prayer and sleep for one-sixth of it.'" [Sahih al-Bukhari, 3420. Sunan an-Nasa'i 1630] 

الحمدلله

 

 

வி- 11

ரமலான் வினா -  விடை

 

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

11.  அல்லாஹ் தன் திருக்குர்ஆனில், "அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்". (21:78) என்று குறிப்பிட்டுள்ளான். யார் அந்த இருவர்?

விடை: தாவூத் (அலை) மற்றும் சுலைமான் (அலை).

இப்னு காதிர் தனது தஃப் ஸீரில் இந்த வழக்கைக் குறிப்பிடுகிறார்: இப்னு மஸ்`ஊத் கூறியதாக இப்னு ஜரீர் பதிவு செய்துள்ளார்: "திராட்சைகள் காய்த்து தொங்கிய தோட்டத்தில் பக்கத்து வயலின் செம்மறி ஆடுகள் இரவில் மேய்ந்து வீணாக்கி விட்டன. இருவரும் தாவூத் (அலை) வந்து தீர்ப்பு கேட்டனர். திராட்சை வயலின் உரிமையாளருக்கு அந்த  ஆடுகளை கொடுக்க வேண்டும் என்று தாவூத் (அலை) தீர்ப்பளித்தார்".

வயலில் ஏற்பட்ட இழப்பு ஆடுகளின் மதிப்புக்கு சமம். ஆனால் ஆடுகளின் உரிமையாளருக்கு ஆடுகளைத் தவிர வேறு எந்த வருமானமும் இல்லை. அவர், "எந்த வருமானமும் இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்?" என்றார்.

பக்கத்தில் இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சுலைமான் (அலை)  தனது தந்தையிடம், 'இப்படி இல்லை, அல்லாஹ் வின் தூதரே!' என்று பணிவுடன் கூறினார். தாவூத் (அலை) 'அப்படியானால் எப்படி?' என்று கேட்டார்.

சுலைமான் (அலை) கூறினார்: 'ஆடுகளின் உரிமையாளரிடம் வயலைக் கொடுத்து, அதை கண்காணித்து உழைத்து மீண்டும் பழைய நிலைக்கு வரும் வரை திராட்சை கொடிகளை வளர்த்து வர வேண்டும். ஆடுகளை அவர் வயலின் உரிமையாளரிடம் கொடுத்து, திராட்சைகள் மீண்டும் வளரும் வரை ஆடுகளிலிருந்து அத்தோட்டக்காரர் பயனடையட்டும். பின்னர் நிலத்தை, காய்த்த திராட்சைகளோடு அவற்றின் உரிமை யாளரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும், அவர் ஆடுகளை அவற்றின் உரிமையாளரிடம்  திருப்பிக் கொடுக்கவேண்டும்'.  இதனால் இரு தரப்பினரும் தங்கள்  நிரந்தர சொத்தை இழக்காமல் மீட்டுக் கொண்டார்கள்.

அல்லாஹ் கூறினான்: "(வழக்கை) சுலைமான் (அலை) அவர்களுக்குப் புரிய வைத்தோம்; மேலும் அவர்கள் இருவரில் ஒவ்வொருவருக்கும் ஞானத்தையும் அறிவை யும் வழங்கினோம். (21:79) அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களைப் புகழ்ந்தான். ஆனால் தாவூத் (அலை) அவர்களைக் கண்டிக்க வில்லை.

இந்தத் தீர்ப்பு சுலைமான் (அலை) அவர்களை ஒப்பில்லா, ஞானம் மற்றும் நீதியின் உருவமாக நிறுவியது. இது  "சுலைமான் ஞானி"  (Sulaiman the Wise) என்ற பட்டத்தை அவருக்கு தந்தது. 

ஆனால் அல்லாஹ் தாவூத் (அலை) அவர்களுக்கு பிரிதொரு இடத்தில் கூறினான்: "ஓ தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்;

மேலும் அல்லாஹ் கூறினான்: "நிச்சயமாக தாவூத் (அலை) மிற்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு" என்று (38:25).  ஸுலைமான் (அலை)  கூறினார்:  "நாங்கள் எல்லா விதப் பொருள்களி லிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும். (27:16)

الحمدلله

 

Q-11                                                                     

                             Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

11. Allahuthala says in Quran, "We were witness to their judgement." [21:78] This statement refers to whom?

Answer: Dawud (AS) & Sulaiman (AS).

Ibn Khathir in his tafsir referred the case:

Ibn Jarir recorded that Ibn Mas`ud said: "Grapes which had grown and their bunches were spoiled by the sheep in night. Dawud (AS) ruled that the owner of the grapes should keep the sheep". The loss in the field is equalent to the value of sheep. But the owner of the sheep had no other income other than sheep. He said, "How will I live without any income?"

So Sulaiman (AS) humbly said to his father, `Not like this, O Prophet of Allah!' Dawud (AS) said, `How then?' Sulaiman (AS) said: `Give the field to the owner of the sheep and let him tend them until they grow back as they were, and give the sheep to the owner of the field  and let him benefit from them until the grapes have grown back as they were. Then the grapes should be given back to their owner, and the sheep should be given back to their owner.' So both the parties recover their losses without permanent loss of property.

This judgment established Sulaimon (AS) as a, figure of, unparalleled, wisdom and justice, often referred to as "Sulaiman the Wise".

Allah said: "We made Sulaiman (AS) to understand (the case); and to each of them We gave wisdom and knowledge. (21:79) Allah praised Suleiman (AS) but He did not condemn Dawud (AS).'' He advised Dawud (AS): "O Dawud! Verily, We have placed you as a successor on the earth; so judge you between men in truth and follow not your desire -- for it will mislead you from the path of Allah" (38:26). This verse is a guidance and warning to all Judges.

Allah bestowed Dawud (AS) "Nearness to Us and a good place of return." (38:25). Dawud and Sulaimon (AS’) said with gratitude, “Praise [is due] to Allah, who has favored us over many of His believing servants." (27:16).

الحمدلله


வி- 10

                 ரமலான் வினா -  விடை                 

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

10. நூஹ் தன் இறைவனிடம் “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களில்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்” எனக் கூறினார். (11:45) யார் அந்த தந்தை தன் இறைவனிடம் தன் மகனுக்காக முறையிட்டது?

விடை: தந்தை நூஹ் (அலை)

நிச்சயமாக நாம் நூஹ் (அலை) அவர்களை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம், அவர் ஐம்பது ஆண்டுகள் குறைய ஆயிரம் ஆண்டுகள் அவர்களிடையே இருந்தார் (29:14). அவர் தனது சமூகத்தாரை ஈமானின் பக்கம் அழைத்தபோது, அவர்கள் தங்கள் காதுகளில் விரல்களை வைத்துக்கொண்டு, அவரைக் கேட்பதையோ அல்லது பார்ப்பதையோ தவிர்க்க தங்கள் ஆடைகளால் தங்களை மூடிக்கொண்டனர். பின்னர், நிச்சயமாக, அவர் அவர்களை வெளிப்படையாக அழைத்தார்; அந்தரங்கமாக அவர்களிடம் முறையிட்டார், ஆனால் அவரது அழைப்பு (அவர்கள்) (சத்தியத்திலிருந்து) வெளியேறுவதைத் தவிர வேறொன்றையும் அதிகரிக்கவில்லை. (71:5 & 9)

அவர்கள் கூறினார்கள்: “ஓ நூஹ்! நீ எங்களுடன்  அதிகமாக நீ தகராறு செய்துள்ளீர். இப்போது நீ உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால், நீர்  அச்சுறுத்துவதை எங்களிடம் கொண்டு வாரும். (11:32 & 33)

எனவே அல்லாஹுதாலா நூஹ் (அலை)யிடம், அவனது அருளாலும் வழிகாட்டுதலாலும் ஒரு கப்பலை உருவாக்கும்படி கட்டளையிட்டார். (11:37). கப்பல் கட்டி முடித்ததும், நூஹ் (அலை) ஒவ்வொரு இன உயிரினங்களையும் (ஆண் மற்றும் பெண்), அவரது குடும்பத்தினர் மற்றும் எண்பது விசுவாசிகளை  அக்கப்பலில் ஏற்றினார். அல்லாஹ்வின் கட்டளைப்படி பூமியிலிருந்து அடுப்பு பொங்கி எழுந்தது, வானத்திலிருந்து தண்ணீர் கொட்டியது, கப்பல் மலைகள் போன்ற அலைகளுக்கு மத்தியில் அல்லாஹ்வின் கட்டளையுடன் பயணித்தது. நூஹ் (அலை) தன்னைப் பிரிந்து சென்ற தனது மகனை அழைத்து, “ஓ என் மகனே! எங்களுடன் ஏறிக்கொள், அக்கிரமக்காரர்களுடன் இருக்காதே” (11:42)

மகன் பதிலளித்தார்: “நான் ஒரு மலையில் ஏறுவேன், அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்.” நூஹ் (அலை) அவர்கள் கூறினார்கள்: “இன்று அல்லாஹ்வின் கட்டளை யிலிருந்து தப்பிபபவர்  வேறு யாரும் இல்லை, அவன் கருணை காட்டுகிறவனைத் தவிர” அவர்களிடையே ஒரு அலை வந்து, அவன் (அந்த மகன்) மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகிவிட்டான். (11;43)

நூஹ் (அலை) அவர்கள் தம் இறைவனை அழைத்து, “ஓ என் இறைவா! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன்! நிச்சயமாக உன் வாக்குறுதி உண்மையானது, நீயே நீதிமான்.” (11:45)

எல்லாம் அறிந்த அல்லாஹ் கூறினான்: “ஓ நூஹ் (அலை)! நிச்சயமாக அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல; நிச்சயமாக அவன் செயல் அநீதியானது, எனவே உமக்குத் தெரியாததை என்னிடம் கேட்காதீர்! நீர் அறியாதவர்களில் ஒருவனாகிவிடாதபடிக்கு நான் உம்மை உபதேசிக்கிறேன்.” (11:46).

நூஹ் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் வருந்தி பச்சாதபட்டு, “ஓ என் இறைவா! எனக்கு அறிவு இல்லாததை உன்னிடம் கேட்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து என் மீது கருணை காட்டா விட்டால், நான் நஷ்டமடைந்த வர்களில் ஒருவ னாகிவிடுவேன்” என்று பிரார்த்தித்தார்கள். (11:47)

الحمدلله



 

  வி - 13 ரமலான் வினா -   விடை السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ 13. ' அவனை நான் “ஸகர்” ...