நஹ்ர்' (துல்ஹஜ் 10-ஆம்) நாளன்று நபி (ஸல்) அவர்கள் அளித்த பேருரை: [ஹதீஸ்]
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் 'நஹ்ர்' (துல்ஹஜ் 10-ஆம்) நாளன்று மக்களிடையே பேருரை நிகழ்த்தினார்கள். (அப்போது), "மக்களே! இது எந்த நாள்?" என்று கேட்டார்கள். மக்கள், "புனிதமான நாள்" என்றனர். நபி (ஸல்) அவர்கள், "இது எந்த நகரம்?" என்று கேட்டார்கள். மக்கள், "புனிதமான நகரம்" என்றனர். நபி (ஸல்) அவர்கள், "இது எந்த மாதம்?" என்று கேட்டார்கள். மக்கள், "புனிதமான மாதம்" என்றனர்.
(பிறகு) நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக உங்களின் இந்த நாள், உங்களின் இந்த நகரத்தில், உங்களின் இந்த மாதம் எவ்வாறு புனிதமானதோ, அவ்வாறே உங்களின் இரத்தங்களும், உங்களின் செல்வங்களும், உங்களின் மானங்களும் உங்களுக்குப் புனிதமானவையாகும்" என்று கூறினார்கள்.
இதை அவர்கள் பலமுறை திரும்பக் கூறினார்கள். பிறகு தம் தலையை (வானை நோக்கி) உயர்த்தி, "அல்லாஹும்ம ஹல் பல்லக்து? அல்லாஹும்ம ஹல் பல்லக்து?" (இறைவா! நான் உன் செய்தியைச் சேர்த்துவிட்டேனா? இறைவா! நான் சேர்த்துவிட்டேனா?) என்று கூறினார்கள்.
(இதை அறிவித்த) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! நிச்சயமாக இது அவர்கள் தமது சமுதாயத்திற்குச் செய்த 'வஸிய்யத்' (இறுதி உபதேசம்) ஆகும். (எனவே) இங்கு வந்திருப்பவர் வராதவருக்கு (இச்செய்தியைச்) சேர்த்துவிடட்டும். எனக்குப் பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் கழுத்தை வெட்டிக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்)." ஹதீஸ் தரம் : ஸஹீஹ்; ஹீஹுல் புகாரி : 1739
الحمدلله