Friday, June 26, 2026

 

'ஆஷூரா' நாளில் நோன்பை   விரும்பியவர்  நோற்கலாம்; விரும்பியவர் விட்டுவிடலாம்

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில் குறைஷிகள் 'ஆஷூரா' நாளில் நோன்பு நோற்று வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, அந்நாளில் தாமும் நோன்பு நோற்றார்கள்; (பிறரையும்) நோன்பு நோற்குமாறு கட்டளை யிட்டார்கள். ரமலான் (நோன்பு) கடமையாக்கப்பட்டபோது, ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதை விட்டுவிட்டார்கள். எனவே, விரும்பியவர் அதை நோற்கலாம்; விரும்பியவர் அதை விட்டுவிடலாம்." ஹதீஸ் தரம் : ஸஹீஹ்; ஸஹீஹுல் புகாரி : 2002

الحمدلله


Fasting on the day of 'Ashura’ is optional

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

Narrated Aisha (RA): Quraish used to fast on the day of 'Ashura' in the Pre-Islamic period, and Allah's Messenger (SAW) too, used to fast on that day. When he came to Madhina, he fasted on that day and ordered others to fast, too. Later when the fasting of the month of Ramadan was prescribed, he gave up fasting on the day of 'Ashura' and it became optional for one to fast on it or not. [Sahih al-Bukhari 2002]

الحمدلله

                                   

 

முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம் நாள் மற்றும் பத்தாம் நாள் ஆஷூரா நோன்பு

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: "ஆஷூரா (எனும்) பத்தாவது நாளில் நோன்பு நோற்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்." அபூ ஈஸா (இமாம் திர்மிதி) கூறுகிறார்: இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் இந்த ஹதீஸ் 'ஹஸன் ஸஹீஹ்' (தரமுடையது) ஆகும். ஆஷூரா நாள் குறித்து அறிஞர்களிடத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. அவர்களில் சிலர் அது (முஹர்ரம் மாதத்தின்) ஒன்பதாம் நாள் என்றும், வேறு சிலர் அது பத்தாம் நாள் என்றும் கூறியுள்ளனர். மேலும், "ஒன்பதாம் நாளிலும் பத்தாம் நாளிலும் நோன்பு நோருங்கள்; யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்" என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இமாம் ஷாஃபிஈ, அஹ்மத் மற்றும் இஸ்ஹாக் ஆகியோர் இக்கருத்தையே (அதாவது, ஒன்பதாம் மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பதையே) கூறுகின்றனர்.
ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு); [ஜாமிஉத் திர்மிதீ : 755]

الحمدلله

 

Fasting on Muharram 9th and 10th

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

Ibn 'Abbas (RA) narrated: "The Messenger of Allah [SAW] ordered fasting the tenth day for the Day of Ashürã'." Abu 'Eisa said: The Hadith of ibn Abbas is a Hasan Sahih Hadith. The people of knowledge differ over the Day of 'Ashürã', some of them said it is the ninth day, some of them said it is the tenth day. It has been reported that Ibn 'Abbãs said: "Fast the ninth and the tenth, and differ from the Jews." Ash-Shãfi'i, Abmad and Istiaq followed this Hadith. [Jami` at-Tirmidhi 755]

الحمدلله


 

ஆஷூரா நாள் நோபின் நன்மை

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஆஷூரா நாளின் நோன்பானது, அதற்கு முந்தைய வருடத்தின் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும் என்று நான் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்க்கிறேன் (அல்லது ஆதரவு வைக்கிறேன்)." ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)  ஜாமிஉத் திர்மிதீ : 752

الحمدلله

Thursday, June 25, 2026

 

Importance of fasting of Ashura

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

Abu Qatadah (RA) narrated that: the Prophet (SAW) said: "Fast the Day of Ashura, for indeed I anticipate that Allah will forgive (the sins of) the year before it." [Jami` at-Tirmidhi 752]

الحمدلله

                   

 

ஆஷூரா நாளில் நோன்பு

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றிருப்பதை கண்டார்கள். அப்போது, "இது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இது ஒரு நல்ல நாள். இந்நாளில் தான் அல்லாஹ் பனீ இஸ்ராயீலரை அவர்களின் எதிரிகளிடமிருந்து காப்பாற்றினான்.  எனவே, மூஸா (அலை) அவர்கள் இந்நாளில் நோன்பு நோற்றார்கள்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "உங்களை விட மூஸா (அலை) அவர்கள் மீது எனக்கு அதிக உரிமை உண்டு (அவரைப் பின்பற்றுவதற்கும், இந்நாளைக் கொண்டாடு வதற்கும்)" என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றார்கள்; மேலும் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்; ஸஹீஹுல் புகாரி : 2004

الحمدلله

  ' ஆஷூரா ' நாளில் நோன்பை     விரும்பியவர்   நோற்கலாம் ; விரும்பியவர் விட்டுவிடலாம் السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱل...