السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
اَللّٰهُ
الَّذِىْ جَعَلَ لَـكُمُ الَّيْلَ لِتَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًا اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَ
لٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لللَا يَشْكُرُوْنَ
நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும்,
நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ் தான்
படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது
அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர் களில் பெரும்பாலோர்
நன்றி செலுத்துவதில்லை. (அல்குர்ஆன்: 40:61)
அல்லாஹ் தன் படைப்புகளுக்குத் தான்
வழங்கிய இரவு – பகல் என்ற
அருட்கொடையை பல வசனங்கள் மூலம்
நினைவூட்டுகிறான். அதாவது, ஒன்று இருளையும் அமைதியையும் கொண்டது,
மற்றொன்று ஒளியையும் மக்கள் நடமாட்டத்தை யும்
கொண்டது. சில சமயம் ஒன்று நீளமாகவும் மற்றொன்று குறுகியதாகவும் அமையும், பின்னர் அவை மாறிக்கொள்ளும். இரவு பகல் மாறி மாறி வருவதில் [45:5,
21:33, 3:27, 39:5 மற்றும் 36:37] சிந்தித்துணரும்
அறிவுடையோருக்கு [2:164, 13: மற்றும் 3
3:190], பயபக்தியுள்ள
மக்களுக்கு [10:6], திடமான அத்தாட்சி உள்ளது.
நன்றி செலுத்த விரும்புபவருக்கும் [25:62], சிந்தனை யுடையவர்களுக்கும் இதில் (தக்க)
படிப்பினை இருக்கிறது. [24:44].
அல்லாஹ் தன் ரஹ்மத்தினால், "இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை
இரவில் புகுத்துகிறான் இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சி களாக ஆக்கினோம்" [22:61, 57:6,
31:29, and 35:13]. நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக
இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன [27:86]. பின்னர்
இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள்
இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின்
எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம்” [17:12, 28:73, 78:10
and 11, 40:61, 79:29 and 25:47
மற்றும் 6:96]. ஆனால் மக்கள் இரவை பகலாக்கி -
கேளிக்கைகளில் ஈடுபட்டு, பகலை இரவாக்கி பாதி பகலில் தூங்கி
வீணடித்து, இம்மை
மறுமை பலன்களை இழந்து தமக்குத் தாமே தீங்கு விளைவித்து கொள்கின்றனர்.
அல்லாஹ் சுபஹானஹுதாலா தன் திருமறையில் இரவு
- பகலின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தும் வகையில் அதன் மீது சத்தியம்
செய்துள்ளான்:
- இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும், சத்தியமாக [84:17],
- செல்கின்ற இரவின் மீது, சத்தியமாக, [89:4]
- (பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக [91: 4],
- (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக - பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக- [92:1 and 2]
அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு
கட்டளை யிடுகின்றான்: “இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக; அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு (துதி) செய்வீராக [76:26].
நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம்
இறைவ னின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக, இரவின்
ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும்
அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக! [52:48 and 49]. நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது
(அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த
வல்லது. [73:6]
இரவு பகலை முந்தமுடியாது [36:40].
“மற்றும், இரவும்
பகலும் மாறி மாறி வருவதும் அவனுக் குரியதே! (அல்லாஹ் கேட்கின்றான்) (இவற்றை)
நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா? {23: 80]. அல்லாஹ்
தன் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளை யிடுகின்றான்: “(நபியே!) நீர் கூறுவீராக: “கியாம
நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால்,
உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக்
கொண்டு வரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்)
பார்த்தீர் களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க
வேண்டாமா? “கியாம நாள்வரை உங்கள் மீது அல்லாஹ்
பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், நீங்கள்
அதில் ஓய்வு பெறும் பொருட்டு உங்களுக்கு இரவைக் கொண்டு வரக்கூடியவன் அல்லாஹ்வையன்றி
நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர் களா? (இவ்வுண்மையை) நீங்கள் நோக்க வேண்டாமா?” என்று
கூறுவீராக! [28: 71 and 72]
ஆகவே, இரண்டாம்
இரவில் நன்கு தூங்கி, மூன்றாம் இரவில் சிறிது நேரம் கண்
விழித்து அவனை துதி செய்வீராக! நன்றி செலுத்துவீராக! பகலில் அவன் அருளை தேடி இம்மையிலும், மறுமையிலும் பயன் அடைவீராக! ‘காலத்தை எவ்வாறு செலவளித்தீர்கள்?’
என மறுமையில் கணக்கு கேட்கப்படும்.
الحمدلله