Wednesday, August 19, 2026

 

12. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ


                                                        

 وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوْا بِهَا‌ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ  بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ اِذَا هُمْ يَقْنَطُوْنَ

இன்னும் நாம் மனிதர்களை (நம்) அருளை அனுப விக்கச் செய்தால். அவர்கள் அதைக் கொண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிரா சைப்பட்டு விடுகிறார்கள். (அல் குர்ஆன் :30:36)

இத்தகைய மனித இயல்பு கண்டிக்கத்தக்கதாகும். ஏனெனில், "மனிதனுக்கு அருட்கொடைகள் வழங் கப்படும்போது அவன் மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டு,என்னை விட்டுத் துன்பங்கள் நீங்கி விட்டன.  (அல் குர்ஆன்:11:10) என்று கூறுகிறான். ஆனால், அல்லாஹ் பாதுகாத்து உதவி செய்தவர் கள் இதற்கு விதிவிலக்கானவர்கள்.

ஆனால், மனிதனுக்குச் சிரமங்கள் ஏற்படும்போது, இனி எக்காலத்திலும் தனக்கு நல்லவை நடக்காது என்று நம்பிக்கையிழந்து விடுகிறான். அல்லாஹ் கூறுகிறான்: எவர் பொறுமை காத்து, நற்செயல் கள் புரிகிறார்களோ அவர்களைத் தவிர. அவர்கள் கஷ்ட காலங்களில் பொறுமை காக்கிறார்கள் மற்றும் நிம்மதியான காலங்களில் நற்செயல்கள் செய்கிறார்கள்.

ஆஹதீஸ் 

"ஒரு முஃமினின் நிலை எவ்வளவு ஆச்சரியமானது! அவனுடைய அனைத்து நிலைகளிலும் அவனுக்கு நன்மை இருக்கிறது. இது ஒரு முஃமினுக்கு மட்டுமே உரியது. அவனுக்கு ஒரு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால், அவன் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துகிறான்; அது அவனுக்கு நன்மையாக அமைகிறது. அவனுக்கு ஒரு துன்பகரமான நிலை ஏற்பட்டால், அவன் பொறுமையாக இருக்கிறான்; அது அவனுக்கு நன்மையாக அமைகிறது." [ரியாதுஸ் ஸாலிஹீன், 27]

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஓர் அடியான், விதியை அதன் நன்மை தீமைகளுடன் நம்பி, தனக்கு ஏற்பட்ட ஒன்று தன்னைத் தவறியிருக்காது என்பதையும், தன்னைத் தவறிய ஒன்று தனக்கு ஏற்பட்டிருக்காது என்பதையும் அறியும் வரை, அவன் (முழுமையான) ஈமான் கொண்டவனாக ஆகமாட்டான்.' [ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ் ஸலாம் பதிப்பு) ஜாமிஉத் திர்மிதீ : 2144]

الحمدلله

 

12. Quran verse and the related Ahadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


                                                          

وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوْا بِهَا‌ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ  بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ اِذَا هُمْ يَقْنَطُوْنَ

If We give people a taste of mercy, they become prideful ˹because˺ of it. But if they are afflicted with an evil for what their hands have done, they instantly fall into despair. [30:36]

This is a denunciation of man for the way he is, except for those whom Allah protects and helps, for when man is given blessings, he is proud, and says: "Ills have departed from me." Surely, he is exultant, and boastful. (Al Quran, 11:10).

He rejoices over himself and boasts to others, but when difficulties befall him, He despairs of ever having anything good again. Allah says: Except those who show patience and do righteous good deeds). They are patient during times of difficulty and do good deeds at times of ease.

Ahadith

Abu Yahya Suhaib bin Sinan (RA) reported that: The Messenger of Allah (SAW) said, "How wonderful is the case of a believer; there is good for him in everything and this applies only to a believer. If prosperity attends him, he expresses gratitude to Allah and that is good for him; and if adversity befalls him, he endures it patiently and that is better for him". [Riyad as-Salihin 27 And Sahih Muslim 2999]

Jabir bin 'Abdullah narrated that the Messenger of Allah (s.a.w) said: 'A slave (of Allah) shall not believe until he believes in Al-Qadar, its good and its bad, such that he knows that what struck him would not have missed him, and that what missed him would not have struck him. [ Jami At Tirmidhi, 2144]

الحمدلله

Monday, August 17, 2026

 

11. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ


 

وَيَدْعُ ٱلْإِنسَـٰنُ بِٱلشَّرِّ دُعَآءَهُۥ بِٱلْخَيْرِ ۖ وَكَانَ ٱلْإِنسَـٰنُ عَجُولًۭا

மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த் திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக் காரனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 17:11)

எல்லாம் வல்ல அல்லாஹ் எப்போதும் அனைவரின் பிரார்த்தனை களையும் செவியுறுகின்றான், ஆனால் அவனிடம் செய்யப்படும் பிரார்த்த னைகளை அதிகமாக ஏற்றுக்கொள்ளும் சில நேரங்களை அவன் நிர்ணயித்துள்ளான். எனவே, ஒருவர் தன்னையோ, தன் பிள்ளைகளையோ, தன் தொழிலையோ சபிக்கக் கூடாது. ஏனெனில், அல்லாஹ்வால் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப் படும் நேரத்தில் அவ்வாறு செய்தால், ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் அதற்காக வருந்த நேரிடும்.

மனிதன் சில நேரங்களில் தனக்கு எதிராகவோ, தனது பிள்ளைகளுக்கு எதிராகவோ அல்லது தனது செல்வத்திற்கு எதிராகவோ தீமை வேண்டிப் பிரார்த்திக்கிறான். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேரிட வேண்டும் என்றோ, அவர்கள் இறந்துவிட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும் என்றோ அவன் சாபமிட்டுப் பிரார்த்திக்கிறான். அல்லாஹ் அவனது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டால், அதன் காரணமாக அவன் அழிக்கப் பட்டுவிடுவான்.

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களுக்கு எதிராகவோ, உங்கள் பிள்ளைக ளுக்கு எதிராகவோ, அல்லது உங்கள் செல்வங்க ளுக்கு எதிராகவோ (கேடு கேட்டுப்) பிரார்த்திக் காதீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் ஒரு நேரத்துடன் ஒத்துப்போய்விடாதீர்கள், அதில் (அவனிடம்) அருட்கொடைகள் கேட்கப்பட்டு (அவை) ஏற்றுக் கொள்ளப்படும். (அப்போது) அவன் உங்களுக்கும் (உங்கள் தீய பிரார்த்தனைக்கு) பதிலளித்துவிடக் கூடும்.” [ரியாதுஸ் ஸாலிஹீன், 1497

முஸ்லிமின் அறிவிப்பில் உள்ளதாவது: "ஒரு அடியான் பாவமான காரியத்திற்கோ அல்லது உறவுகளைத் துண்டிக்கும் காரியத்திற்கோ பிரார்த்தனை செய்யாமலும், அவன் அவசரப் படாமலும் இருக்கும் வரை அவனது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கொண்டே இருக்கும்." "அல்லாஹ்வின் தூதரே! அவசரப்படுதல் என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்: "(பிரார்த்தனை செய்பவர்) 'நான் பிரார்த்தனை செய்தேன், மீண்டும் பிரார்த்தனை செய்தேன்; ஆனால் எனக்குப் பதிலளிக்கப் பட்டதை நான் காணவில்லை' என்று கூறி, அந்த நிலையில் விரக்தியடைந்து பிரார்த்தனை செய்வதைக் கைவிடுவதாகும்." [ரியாதுஸ் ஸாலிஹீன், 1499] (தஃப்சீர் இப்னு கஸீர் : 17:11)

ஆதமின் மகனை இவ்வாறு செய்யத் தூண்டுவது அவனது பதற்றமும் அவசரமுமே ஆகும்  : மேலும் அல்லாஹ் கூறுகிறான், மனிதன் அவசரக்கார னாக இருக்கிறான்.

சல்மான் அல்-ஃபாரிஸி (ரழி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் ஆதம் (அலை) அவர்களின் வரலாற்றைக் குறிப்பிட்டுள்ளனர். ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டபோது, ஆதம் (அலை) அவர்களின் ஆன்மா கால்களை அடைவதற்கு முன்பே அவர்கள் எழுந்திருக்க முயன்றார்கள். அவர்களுக்குள் ஆன்மா ஊதப் பட்டபோது, அது தலையிலிருந்து கீழ்நோக்கி உடலுக்குள் நுழைந்தது. அது மூளையை எட்டிய போது அவர்கள் தும்மினார்கள்; பிறகு "அல்ஹம்து லில்லாஹ்" (புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே) என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ், "ஆதமே! உமது இறைவன் உமக்குக் கருணை புரிவானாக" என்று கூறினான். ஆன்மா கண்களை எட்டிய போது அவர்கள் சுவர்க்கத்தின் கனிகளைப் பார்த்தார்கள். அது வயிற்றை எட்டியபோது உணவை விரும்பினார்கள். ஆன்மா கால்களை அடைவதற்கு முன்பே அவர்கள் சுவர்க்கத்தின் கனிகளைப் பறிப்பதற்காக அவசரமாக எழுந் திருக்க முயன்றார்கள், ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையே அல்லாஹ், "மேலும், மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்" என்று கூறுகிறான்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நன்மைக்காக நாம் செய்யும் துஆக்களுக்குப் பதிலளிப்பது போல், தீமைக்காக நாம் செய்யும் துஆக்களுக்கு அல்லாஹ் பதிலளிப்பதில்லை என்பது அவனது கருணையே. ஏனெனில், அவ்வாறு செய்தால் நாம் அழிக்கப்படுவோம்.

الحمدلله


 

11. Quran verse and the related Ahadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


وَيَدْعُ ٱلْإِنسَـٰنُ بِٱلشَّرِّ دُعَآءَهُۥ بِٱلْخَيْرِ ۖ وَكَانَ ٱلْإِنسَـٰنُ عَجُولًۭا

And man supplicates for evil [when angry] as he supplicates for good, and man is ever hasty. (Al Quran, 17:11)

Almighty Allah always listens to everyone's prayer but He has fixed certain times when He grants more prayers addressed to Him. Therefore, one should never curse oneself or one's own children or one's own business, etc., lest this is done at the time when prayers are accepted by Allah and then one has to regret it all his life.

Allah tells us about how he sometimes prays against himself or his children or his wealth, praying for something bad to happen for them, or for them to die or be destroyed, invoking curses, etc. If Allah were to answer his prayer, he would be destroyed because of  it.

Jabir (RA) narrated that the Messenger of Allah (SAW) said, “Do not supplicate against yourselves, do not supplicate against your children, and do not supplicate against your property, lest it coincides with an hour in which Allah is asked for something and He answers you.” [Riyad as-Salihin, 1497]

The narration of Muslim is: "The supplication of a slave continues to be granted as long as he does not supplicate for a sinful thing or for something that would cut off the ties of kinship and he does not grow impatient." It was said: "O Messenger of Allah! What does growing impatient mean?" He (SAW) said, "It is one's saying: 'I supplicated again and again but I do not think that my prayer will be answered.' Then he becomes frustrated (in such circumstances) and gives up supplication altogether." [Riyad as-Salihin, 1499]

What makes the son of Adam do that is his anxiety and haste. Allah says: “Man is ever hasty”.

Salman Al-Farisi and Ibn `Abbas mentioned the story of Adam, when he wanted to get up before his soul reached his feet. When his soul was breathed into him, it entered his body from his head downwards. When it reached his brain he sneezed, and said, "Al-Hamdu Lillah" (praise be to Allah), and Allah said, "May your Lord have mercy on you, O Adam." When it reached his eyes, he opened them, and when it reached his body and limbs he started to stare at them in wonder. He wanted to get up before it reached his feet, but he could not. He said, "O Lord, make it happen before night comes."

Ibn Abbas said that it is a mercy from Allah that He does not answer our du’as for evil as He does our du’as for good, because otherwise we would be destroyed.

الحمدلله

Tuesday, August 11, 2026

 

10. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ


 

فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَٱعْتَصِمُوا۟ بِٱللَّهِ هُوَ مَوْلَىٰكُمْ ۖ  فَنِعْمَ ٱلْمَوْلَىٰ وَنِعْمَ ٱلنَّصِيرُ

நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன். [22:78]

இது  ஸூரதுல் ஹஜ்ஜின் கடைசி வசனம், ஸஜ்தா வசனம். உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்ததாகக் கூறப்படுகிறது, “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஸூரதுல் ஹஜ் இரண்டு ஸஜ்தாக்களைக் கொண்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, எவர் அவ்விரண்டையும் செய்யவில்லையோ அவர் அந்த வசனங்களை ஓத வேண்டாம்.ஜாமிஉத் திர்மிதீ, 578]

அல்லாஹ் உங்களை மற்ற எல்லா சமுதாயங்களை விடவும் தேர்ந்தெடுத்துள்ளான்; மேலும் உன்னதமான தூதரையும் மகத்தான சட்டங்களையும் கொண்டு உங்களை மேன்மைப்படுத்தி, ஆசீர்வதித்து, கண்ணியப் படுத்தியுள்ளான். அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அவனுக்கு அஞ்சுங்கள்.

உங்களால் தாங்க முடியாத எதையும் உங்கள் மீது அல்லாஹ் சுமத்தவில்லை. உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எதையும் அவன் கடமையாக்க வில்லை; அதிலிருந்து வெளியேற ஒரு வழியை அவன் உங்களுக்கு ஏற்படுத்தித் தந்தாலே தவிர. மிக முக்கியமான கடமைகளான தொழுகையை முறையாக நிலைநாட்டுவதும் ஜகாத் வழங்குவதும் ஆகும்.

தொழுகை (ஸலாஹ்), ஒருவர் ஊரில் இருக்கும் போது நான்கு ரக்அத்களாகக் கடமையாக்கப் பட்டுள்ளது; ஆனால் பயணத்தின்போது இது இரண்டு ரக்அத்களாகச் சுருக்கப்படுகிறது. அச்சமான நேரங்களில் ஒரு ரக்அத் மட்டுமே கடமையாகும். ஒருவர் நடக்கும்போதோ அல்லது சவாரி செய்யும்போதோ, கிப்லாவை நோக்கியோ அல்லது வேறு திசையிலோ தொழலாம். பயணத் தின்போது உபரியான (சுன்னத்) தொழுகை களைத் தொழும்போது, கிப்லாவை நோக்கியோ அல்லது நோக்காமலோ தொழலாம். ஒரு நோயாளி தொழுகையின் போது நிற்க வேண்டிய கட்டாயமில்லை; அவர் உட்கார்ந்து தொழலாம், அதையும் செய்ய முடியாவிட்டால் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு தொழலாம். கடமையான தொழுகைகள் மற்றும் பிற கடமைகளில் இது போன்ற இன்னும் பல விதிவிலக்குகளும் சலுகைகளும் உள்ளன.

எனவே தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் எளிமையான ஹனீஃபிய்யா மார்க்கத்துடன் அனுப்பப்பட்டுள் ளேன். மேலும், நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரழி) மற்றும் அபூ மூஸா (ரழி) ஆகியோரை யமனுக்கு ஆளுநர்களாக அனுப்பியபோது அவர்களிடம் கூறினார்கள்: நற்செய்தி கூறுங்கள், மக்களை விரட்டியடிக் காதீர்கள். எளிதாக்குங்கள், கடினமாக்காதீர்கள்.

ஜகாத் என்பது அல்லாஹ்வின் படைப்புகளுக்குச் செய்யும் ஒரு பேருதவியாகும். ஏழைகளுக்கும் பலவீனமானவர்களுக்கும் உதவுவதற்காக செல்வந்தர்கள் தங்கள் செல்வத்திலிருந்து ஒரு சிறு பகுதியை ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். ஜகாத் என்னும் தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப் படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர் களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் [9:60]

அல்லாஹ்வின் உதவியையும் ஆதரவையும் தேடுங்கள், அவன் மீது முழு நம்பிக்கை வையுங் கள், அவனிடமிருந்து வலிமையைப் பெறுங்கள். அவன் உங்கள் பாதுகாவலன் மற்றும் உதவியா ளன்; உங்கள் எதிரிகளுக்கு எதிராக உங்களை வெற்றிபெறச் செய்பவன் அவனே.

الحمدلله

 

 

10. Quran verse and the related Ahadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

  


فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَٱعْتَصِمُوا۟ بِٱللَّهِ هُوَ مَوْلَىٰكُمْ ۖ فَنِعْمَ ٱلْمَوْلَىٰ وَنِعْمَ ٱلنَّصِيرُ

So establish prayer and give zakāh and hold fast to Allāh. He is your protector; and excellent is the protector, and excellent is the helper. (22:78)                                                                  

This ayath is the last ayath of Surathul Hajj. It was reported from `Uqbah bin `Amir (RA) that the Prophet (SAW) said: ‘Surat Al-Hajj has been blessed with two Sajdahs, so whoever does not prostrate them should not read them’.[ Jami` at-Tirmidhi 578]

Allah says, `O Ummah of Islam, Allah has selected you and chosen you over all other nations, and has favored you and blessed you and honored you with the noblest of Messengers and the noblest of Laws.'

Allahuthala has not laid upon you in religion any hardship. He has not given you more than you can bear and He has not obliged you to do anything that will cause you difficulty except that He has created for you a way out. So fear Allah, in the way He deserves. The Salah, which is the most important pillar of Islam after the two testimonies of faith, is obligatory, four Rak`ahs when one is settled, which are shortened to two Rak`ah when one is traveling. According to some Imams, only one Rak`ahs is obligatory at times of fear, as was recorded in the Hadith. A person may pray while walking or riding, facing the Qiblah or otherwise. When praying optional prayers while traveling, one may face the Qiblah or not. A person is not obliged to stand during the prayer if he is sick; the sick person may pray sitting down, and if he is not able to do that then he may pray lying on his side. And there are other exemptions and dispensations which may apply to the obligatory prayers and other duties. So the Prophet said: “I have been sent with the easy Hanifi way. And he said to Mu`adh (RA) and Abu Musa (RA) when he sent them as governors to Yemen: “Give good news and do not repel them. Make things easy for the people and do not make the things difficult for them’

Zakath is a form of beneficence towards Allah's creatures, whereby He has enjoined upon the rich to give a little of their wealth to the poor each year, to help the weak and needy. Zakāth expenditures are only for the poor and for the needy and for those employed for it1 and for bringing hearts together [for Islām] and for freeing captives [or slaves] and for those in debt and for the cause of Allāh and for the [stranded] traveler - an obligation [imposed] by Allāh [9:60]

Seek the help and support of Allah and put your trust in Him, and get strength from Him. He is your Protector and your Helper, He is the One Who will cause you to prevail against your enemies.

الحمدلله

Monday, August 10, 2026

 

9. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான  விளக்கம் :

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ


وَكَمْ أَهْلَكْنَا مِنَ ٱلْقُرُونِ مِنۢ بَعْدِ نُوحٍۢ ۗ وَكَفَىٰ بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًۢا بَصِيرًۭا 

நூஹுக்குப்பின் எத்தனை தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்? இன்னும், தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிபவனாகவும், பார்ப்பவனாகவும் உமது இறைவன் போதுமானவன்

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "ஆதம் (அலை) அவர்களுக்கும் நூஹ் (அலை) அவர்களுக்கும் இடையே பத்து தலைமுறைகள் இருந்தன. அந்த எல்லாக் காலத்திலும் மனிதர்கள் இஸ்லாத்தையே பின்பற்றினார்கள்." " நிராகரிப்பாளர்(குறைஷி)களே! நீங்கள் அவர்களை விட அல்லாஹ்வுக்கு அதிகப் பிரியமானவர்கள் அல்ல. மேலும் நீங்கள் தூதர்களிலேயே மிகவும் கண்ணியமான வரையும், படைப்புகளிலேயே மிகச் சிறந்தவரையும் நிராகரித்து விட்டீர்கள். எனவே, நீங்கள் தண்டனைக்கு மிகவும் தகுதியானவர்கள்" என்பதே (இந்த வசனத்தின்) பொருளாகும்.

الحمدلله

  12. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்: السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ            ...