Thursday, August 27, 2026

 

15. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ


 

قُلْ اِنَّ رَبِّىْ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ

நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடிய வர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கி யும் விடுகிறான் - எனினும் மனிதரில் பெரும் பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.  (அல்குர்ஆன் : 34:36)

நபிமார்கள் ஒரு ஊருக்கு அனுப்பப்பட்டபோது, அங்கு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த மக்கள் அவர்களை நம்பவில்லை; மேலும் அவர்களின் செய்தியை பரிகசித்தனர். கத்தாதா கூறியது போல், "அவர்கள் கொடுங்கோலர்களாகவும்தலைவர்களாகவும், தீயவர்களாகவும்  இருந்தனர்."

ஆனால் அந்த ஊரின் நலிந்த ஏழை மக்கள் அவர்களை நம்பிப் பின்பற்றினர். நூஹ் (அலை) முதல் முஹம்மது (ஸல்) வரையிலான நபிமார்

களின் சமூதாயங்களில் இதுவே நிலைமையாக இருந்தது.

தங்கள் பெரும் செல்வத்தையும், ஏராளமான பிள்ளைகளையும் குறித்துப் பெருமிதம் கொண்ட செல்வந்தர்கள், "நாங்கள் உங்கள் தூதுச் செய்தி யை நம்பவில்லை, அதைப் பின்பற்றவும் மாட் டோம்" என்று கூறுனார்கள். அவர்கள் அல்லாஹ் விடமிருந்து கிடைத்த அருட்கொடைகளால் வழி தவறி, "நாங்கள் செல்வத்திலும் பிள்ளைகளிலும் மேலானவர்கள், நாங்கள் தண்டிக்கப்படப் போவ தில்லை" என்று கூறுகிறார்கள். அதிக செல்வமும் நிறைய பிள்ளைகளும் அல்லாஹ்வின் அன்புக்கும் அக்கறைக்கும் ஓர் அடையாளம் என்றும்   மறுமை யில் அவன் அவர்களைத் தண்டிக்க மாட்டான் எனவும் நம்பினார்கள். அவர்களின் மறுமைஇவ் வுலக வாழ்க்கையை விடச் சிறந்ததாக அமையும் என்றும் கூறினர்.

அல்லாஹ் கேட்கிறான்: "நாம் அவர்களுக்கு அளித்த செல்வத்தினாலும் பிள்ளைகளினாலும் நன்மைகளை விரைந்து அளிக்கிறோம் என்று அவர்கள் நினைக்கிறார்களா? இல்லை, அவர்கள் அதை உணர்வதில்லை." (23:55-56)

அல்லாஹ் சுப்ஹானஹுதாலா கூறுகிறான்: "ஒரு மனிதனை நம்மிடம் நெருக்கமாக்குவது அவனது செல்வமோ, பிள்ளைகளோ அல்ல; மாறாக, அவனது ஈமானும், நற்செயல்களும், உள்ளத்தின் நல்நோக்கங்களுமே ஆகும். அத்தகையவர் களுக்கு, அவர்கள் செய்த நற்செயல்களுக்காக இருமடங்கு நற்கூலி கிடைக்கும்; மேலும், அவர்கள் உயர்ந்த வாசஸ்தலங்களில் (சொர்க்கத்தில்) அமைதியுடனும் பாதுகாப்படனும் வசிப்பார்கள்." (34:37)

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள், “நிச்சயமாக, அல்லாஹ் உங்கள் தோற்றத் தையோ செல்வத்தையோ பார்ப்பதில்லை; மாறாக, அவன் உங்கள் உள்ளங்களையும் செயல் களையும் பார்க்கிறான்.” [[ஸஹீஹ் முஸ்லிம் 2564 c]

அல்லாஹுதாலா அளிக்கும் வாழ்வாதாரம் இவ் வுலகில் ஒரு வகையான சோதனையாகும். செல்வம் தனக்குரியதல்ல, அது அல்லாஹ்வின் கருணையிலிருந்து வருகிறது என்பதையும், மனிதன் ஒரு பொறுப்பாளர் மட்டுமே என்பதையும் அவன் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் ஒரு செல்வந்தரை அவருடைய வாழ்க்கை முறையைக் கொண்டு சோதிப்பான் - செலவு செய்வதில் கஞ்சத்தனம்/மிதவாதம்/அளவுக்கு மீறிய செலவு செய்பவரா; அவருடைய அணுகுமுறையில் பணிவு/பெருமை உள்ளவரா, அவர் தேவையுள்ள வர்களுக்கு எவ்வாறு உதவுகிறார், பகிர்ந்து கொள்கிறார், மற்றும் அவர் தனது ஜகாத்தை எவ்வாறு செலுத்துகிறார்? என்பனவற்றைக் கொண்டு சோதிப்பான்.

ஏழைகளை விட செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை சம்பாதிக்கும், நிர்வகிக்கும் மற்றும் செலவழிக்கும் விதத்தில் அதிக பொறுப்புள்ள வர்களாக இருக்கிறார்கள்.

அபூ பர்ஸா அல்-அஸ்லாமி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் அடியா னின் பாதங்கள் (மறுமை நாளில்) ஐந்து விஷயங் களைக் குறித்து விசாரிக்கப்படும் வரை நகராது: அவனது வாழ்க்கையைப் பற்றியும், அதை அவன் என்ன செய்தான் என்பதைப் பற்றியும்; அவனது அறிவைப் பற்றியும் அதை அவன் என்ன செய் தான் என்பதைப் பற்றியும்; அவனது செல்வத்தைப் பற்றியும், அதை அவன் எவ்வாறு சம்பாதித்தான், எங்கே செலவழித்தான் என்பதைப் பற்றியும்; அவனது உடலைப் பற்றியும், அதை அவன் எதற் காகப் பயன்படுத்தினான் என்பதைப் பற்றியும். (ஜாமி` அத்-திர்மிதி, 2417)

அம்ர் பின் அவ்வுல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "..........அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் உங்களுக்கு வறுமையைக் குறித்து அஞ்சவில்லை, மாறாக, உங்களுக்கு இவ்வுலகச் செல்வம் வழங்கப்பட்டு, அது அவர் களை அழித்தது போலவே உங்களையும் அழித்து விடுமோ என்று அஞ்சுகிறேன்." [ஸஹீஹ் அல்-புகாரி 3158].

ஏழை மக்களுக்கு, வரையறுக்கப்பட்ட வாழ்வா தாரம் என்பது அவர்களின் பொறுமை/தியாகம்/இயலாமை/சகிப்புத்தன்மைக்கான ஒரு சோதனை யாகும்.

உஸாமா (ரலி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நான் சொர்க்கத்தின் வாசலில் நின்றேன். அதில் நுழைந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழைகளாக இருந்த தைக் கண்டேன். செல்வந்தர்கள் (ஏழைகளுடன்) நுழையத் தடுக்கப்பட்டிருந்தனர், ஏனெனில் அவர்கள் தங்கள் கணக்குகளுக்காகக் காத்தி ருந்தனர்....." [ஸஹீஹ் அல்-புகாரி 6547].

அபூ ஸயீத் (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:"ஏழை முஹாஜிரீன்கள், தங்களில் உள்ள செல்வந்தர் களுக்கு முன்பாக ஐநூறு ஆண்டுகள் சொர்க்கத் தில் நுழைவார்கள்." [ஜாமி` அத்-திர்மிதி 2351].

உண்மையான செல்வம் இதயத்தில் உள்ளது. உண்மையான செல்வம் என்பது ஆன்மீக மன நிறைவு. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார் கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:"யார் மறுமையைத் தனது இலக்காகக் கொள்கிறாரோ, அல்லாஹ் அவரது இதயத்தைச் செல்வந்தனாக்குகிறான்." அவன் தன் காரியங் களை ஒழுங்கமைத்துக் கொள்கிறான், உலகம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனிடம் வருகிறது. மேலும், எவர் இவ்வுலகைத் தன் இலக்காகக் கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் வறுமையை அவர் கண்களுக்கு முன்பாகவே வைக்கிறான், மேலும் அவருடைய காரியங்களைக் குழப்பிவிடுகிறான், அவருக்கு விதிக்கப்பட்டதைத் தவிர இவ்வுலகம் அவரிடம் வருவதில்லை.” [ஜாமி` அத்-திர்மிதி, 2465]

அல்லாஹ் 33:21-ஆம் வசனத்தில் கூறுவது போல, "நிச்சயமாக அல்லாஹ் வின் தூதரிடம் உங்க ளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி இருக்கிறது; எவர் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை அடிக்கடி நினைவு கூர்கிறாரோ அவருக்கு அது பொருந்தும்", நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். பின்வரும் ஹதீஸ் இந்தக் கருத்தை எடுத்துக்காட்டுகிறது.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். அப்போது வானத்தை நோக்கியபோது, ஒரு வானவர் இறங்கினார். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “நிச்சயமாக, இந்த வானவர் படைக்கப்பட்ட நாள் முதல் இறங்கியதில்லை” என்று கூறினார்கள். அதற்கு அந்த வானவர், “முஹம்மதே! உம்மை ஒரு நபியாகவோ அரசனாகவோ அல்லது அடியாரா கவோ ஆக்கும் வாய்ப்புடன் உம் இறைவன் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “முஹம்மதே! உம் இறைவனுக்கு முன் பணிவுடன் இருங்கள்!” என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “மாறாக, நான் ஒரு அடியான்-தூதனாக இருப்பேன்.” [முஸ்னத் அஹ்மத் 7120]                                                                                  

الحمدلله

 

15. Quran verse and the related Ahadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


قُلْ اِنَّ رَبِّىْ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ

Say, "Indeed, my Lord extends provision for whom He wills and restricts [it], but most of the people do not know." [Al Quran, 34:36].

When the Prophets were sent to a township, its people who lived a luxurious life disbelieved them and transgressed their message. As Qatadah said, "They were their tyrants, chiefs and leaders in evil."

But the weaker people of the town believed them and followed them. This was the case with the societies of prophets from Nuh (AS) to Mohammad (SAW).

The wealthy people, who were proud of their great wealth and great numbers of children say, "We do not believe your message and we will not follow it." They were misled by their

provisions from Allah and say: "We are more in wealth and in children, and we are not going to be punished." They believed that that was a sign of Allah's love and care. He would not punish them in the Hereafter. Their Hereafter will be better than their worldly life.

Allah ask them: "Do they think that in wealth and children with which We enlarge them We hasten unto them with good things? Nay, but they perceive not." (23:55-56)

Allah Subhanahuthala says: "And it is not the wealth, nor the children that bring a man nearer to Us but only the faith, righteous deeds and good intentions of heart; as for such, there will be twofold reward for what they did, and they will reside in the high dwellings (Paradise) in peace and security.' (34:37)

Abu Huraira (RA) reported: The Messenger of Allah (SAW) said, “Verily, Allah does not look at your appearance or wealth, but rather He looks at your hearts and actions.” [Sahih Muslim 2564 c]

Provision from Allahuthala is a kind of test/ trail in this word. The man has to understand that wealth is not theirs, it is from the mercy of Allah and man is only a trustee. Allah will test a wealthy man with their way of life - whether stingy/moderate/ extravagant in spending; humble/proud in their attitude, how he helps and shares the needy and how he pays his Zakath etc.

Wealthy people are more accountable in the way they earn, manage and spend their wealth than the poor.

Abu Barzah Al-Aslami narrated that the Messenger of Allah (SAW) said:“The feet of the slave of Allah shall not move [on the Day of Judgement] until he is asked about five things: about his life and what he did with it, about his knowledge and what he did with it, about his wealth and how he earned it and where he spent it on, about his body and for what did he wear it out.” (Jami` at-Tirmidhi, 2417)

Narrated `Amr bin `Auf Al-Ansari (RA), the Prophet told, "..........By Allah, it is not poverty that I fear for you, but rather I fear you will be given the wealth of the world... and it will ruin you just as it ruined them." [Sahih al-Bukhari 3158].

For the poor people, restricted provision is a test/trail for their patience/sacrifice/inability/endurance

Narrated Usama (RA): The Prophet (SAW) said, "I stood at the gate of Paradise and saw that the majority of the people who had entered it were poor people, while the rich were forbidden (to enter along with the poor, because they were waiting the reckoning of their accounts) .... [Sahih al-Bukhari 6547].

Abu Sa'eed (RA) narrated that the Messenger of Allah (SAW) said: "The poor Muhajirin will enter Paradise before the rich among them by five hundred years." [Jami` at-Tirmidhi 2351].

True richness is in the heart. True wealth is spiritual contentment. Anas bin Malik (RA) narrated that the Messenger of Allah (SAW) said:"Whoever makes the Hereafter his goal, Allah makes his heart rich, and organizes his affairs, and the world comes to him whether it wants to or not. And whoever makes the world his goal, Allah puts his poverty right before his eyes, and disorganizes his affairs, and the world does not come to him, except what has been decreed for him." [Jami` at-Tirmidhi, 2465]

As Allahuthala says in ayath 33:21 "There has certainly been for you in the Messenger of Allāh an excellent example for anyone whose hope is in Allāh and the Last Day and [who] remembers Allāh often", Prophet Mohammad (SAW) led a simple life. The following hadith highlighted this Concept.

Abu Huraira (RA)reported: The Angel Jibriel (AS) was with the Prophet (SAW), and he looked towards the sky as an angel descended. Jibriel (AS) said, “Verily, this angel has not come down since the day he was created.” The angel said, “O Muhammad, your Lord has sent me to you with the offer that I make you a prophet-king or a servant-messenger.” Jibriel (AS) said, “Be humble before your Lord, O Muhammad!” The Prophet (SAW) said, “Rather, I will be a servant-messenger.” [Musnad Aḥmad 7120]

الحمدلله

Tuesday, August 25, 2026

 

14. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ

   


 وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا‏○ اِنَّمَا نُطْعِمُكُمْ لِـوَجْهِ اللّٰهِ لَا نُرِيْدُ  مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا‏

                  

நல்லோர்கள், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத் தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.

உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் திருமுகத்தை (திருப்பொருத்தத் திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென் பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்). (அல்குர்ஆன்:76: 8 & 9)

முந்தைய வசனத்தில், நல்லோர்களின் குணங்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:

 அவர்கள் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்று வார்கள்,

அல்லாஹ் தங்களுக்குத் தடைசெய்த காரியங் களைக் கைவிடுவார்கள்,.

அல்லாஹ்வின் வணக்கத்திற்குக் கீழ்ப்படிதலு டன் தங்களை அர்ப்பணிப்பார்கள்,

மறுமை நாளில் வரவிருக்கும் தீய விசாரணை யைக் குறித்து அவர்கள் அஞ்சுவார்கள்,

தாங்களே அந்த உணவை விரும்பினாலும், அதை மற்றவர்களுக்கு கொடுப்பார்கள்,

அல்லாஹ்வின் திருமுகத்தை மட்டுமே நாடி, அவனது வெகுமதியையும் திருப்தியையும் எதிர்பார்த்து உணவளிப்பதாகக் கூறுவார்கள்,

அவர்கள் தங்களுக்குப் பிரதிபலனாக வெகுமதி யையோ நன்றியையோ எதிர்பார்க்க மாட்டார்கள்.

முஜாஹித் மற்றும் ஸயீத் பின் ஜுபைர் இருவரும் கூறினார்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் இதைத் தங்கள் நாவுகளால் கூறுவ தில்லை; மாறாக, அல்லாஹ் அதை அவர்களின் உள்ளங்களில் அறிந்து, அதற்காக அவர்களைப் புகழ்கிறான்."

குர்ஆனில் அல்லாஹ் கூறியது போல், அவர்கள் நன்னெறி அடையவும், மனிதகுலத்தைக் காப் பாற்றவும் செய்கிறார்கள்:

நீங்கள் விரும்பும் பொருளைச் செலவழிக்கா விட்டால், நீங்கள் அல்-பிர் (நன்னெறி) அடையவே மாட்டீர்கள். (3:92)

'யார் ஒரு உயிரைக் காப்பாற்றுகிறாரோ, அவர் மனிதகுலம் அனைத்தையும் காப்பாற்றியதற்குச் சமம்'. [அல் குர்ஆன், 5:32].

இஸ்லாத்தில் சிறந்தது ஏழைகளுக்கு உணவ ளிப்பது:

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவித் தார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "இஸ்லாத்தில் சிறந்தது எது?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(பசித்தோருக்கு) உணவளிப்பதும், நீங்கள் அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் (எந்தப் பாகுபாடுமின்றி) ஸலாம் கூறுவதும் ஆகும்" என்று பதிலளித்தார் கள். [ஸஹீஹுல் புகாரி: 12 & 28 and ஸஹிஹ் முஸ்லிம், 39).

பிறருக்கு உணவளிப்பது ஸதகா ஆகும்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள், 'நீங்கள் உங்களுக்கு உணவளிப்பது உங்க ளுக்கு ஸதகாவாகும். நீங்கள் உங்கள் குழந்தைக் கு உணவளிப்பது உங்களுக்கு ஸதகாவாகும். நீங்கள் உங்கள் மனைவிக்கு உணவளிப்பது உங்களுக்கு ஸதகாவாகும். நீங்கள் உங்கள் அடியானுக்கு உணவளிப்பது உங்களுக்கு ஸதகாவாகும்'. [அல்-அதாப் அல்-முஃப்ராத் 82]

பிறருக்கு உணவளிப்பவர்களே சிறந்த மனிதர்கள்:

ஸுஹைப் இப்னு ஸினன் (ரலி) அவர்கள் அறிவித் தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உங்களில் சிறந்தவர்கள் பிறருக்கு உணவளிப்பவர்களே.” [முஸ்னத் அஹ்மத் 23926]

அண்டை வீட்டாருக்கு உணவளிப்பது பரக்கத் தையும்  நல்லுறவையும் உறுதி செய்கிறது:

அபூ தர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள், ‘நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அபூ தர்ரே, நீங்கள் குழம்பு சமைக்கும்போது, குழம்பில் அதிக தண்ணீர் ஊற்றுங்கள், மேலும் உங்கள் அண்டை வீட்டாரைக் கவனித்துக் கொள்ளுங்கள்”’. [ஸஹீஹ் முஸ்லிம் 2625b]

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இப்னு அஸ்-ஸுபைர் (ரலி) அவர்களிடம் அறிவித்தார்கள், "நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன், 'தன் அண்டை வீட்டுக்காரர் பசியுடன் இருக்கும்போது, யாருடைய வயிறு நிரம்பியிருக்கிறதோ, அவர் முஃமின் அல்ல.'" [அல்-அதாப் அல்-முஃப்ராத், 112]

பிறருக்கு உணவளிப்பது சுவர்க்கத்தை உறுதி செய்கிறது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள், 'அர்-ரஹ்மானை வணங்குங்கள், பிறருக்கு உணவளியுங்கள், ஸலாம் (வாழ்த்துச் செய்தியை) பரப்புங்கள், அப்போது நீங்கள் பாதுகாப்பாக (ஸலாம்) சுவர்க்கத்தில் நுழைவீர்கள்'. [ஜாமி` அத்-திர்மிதி 1855]

அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் கூறினார் கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: "எந்தவொரு நம்பிக்கையாளர், பசியுடன் இருக்கும் ஒரு நம்பிக்கையாளருக்கு உணவளிக் கிறாரோ, மறுமை நாளில் அல்லாஹ் அவருக்குச் சுவனத்தின் கனிகளிலிருந்து உணவளிப்பான். [ஜாமிஉத் திர்மிதீ : 2449]

அலி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக சொர்க்கத்தில் அறைகள் உள்ளன; அவற்றின் வெளிப்புறத்தை அவற்றின் உள்ளிருந்தும், அவற்றின் உட்புறத்தை அவற்றின் வெளியிலிருந்தும் காணமுடியும்." ஒரு கிராமவாசி (அல்லது பாலைவனவாசி) எழுந்து நின்று, "அல்லாஹ்வின் தூதரே! அவை யாருக்காக?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அவை, நல்ல வார்த்தை களைப் பேசுவோர் (மற்றும் நற்செயல்களைக் கூறுவோர்), (தேவையுடையோருக்கு) உணவளிப் போர், (விருப்பமான) நோன்புகளைத் தொடர்ச் சியாக நோற்போர், மேலும் மக்கள் உறங்கும் போது இரவில் அல்லாஹ்விற்காகத் தொழுவோர் ஆகியோருக்காக உள்ளன." [ஜாமிஉத் திர்மிதீ, 1984]

தீர்ப்பு நாளின் தீமையிலிருந்து அல்லாஹ் உணவு அளிப்பவர்களைப் பாதுகாப்பான்:

உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் கூறினார்கள், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: "எவருக்கு மூன்று மகள்கள் இருந்து, அவர்களிடம் அவர் பொறுமையாக (அவர்களை வளர்ப்பதில் ஏற்படும் சிரமங்களைச் சகித்து, அவர்களின் உரிமைகளை நிறைவேற்றுவதில்) நடந்து, தனது வசதிக்கு ஏற்ப அவர்களுக்கு உணவளித்து, குடிநீர் வழங்கி, ஆடை அணிவிக் கிறாரோ, அம்மகள்கள் மறுமை நாளில் அவருக்கு நரக நெருப்பிலிருந்து ஒரு கேடயமாக இருப்பார் கள்." [சுனன் இப்னுமாஜா : 3669]

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள்: 'அல்லாஹ், வல்லமையும் மேன்மையும் மிக்கவன், மறுமை நாளில் கூறுவான் […] “ஆதமின் மகனே, நான் உன்னிடம் உணவு கேட்டேன், நீ எனக்கு உணவளிக்கவில்லை“. அவன் கூறுவான், “இறைவா, நீயே அகிலங்களின் அதிபதியாக இருக்கும்போது, நான் உனக்கு எப்படி உணவளிக்க முடியும்?” அல்லாஹ் கூறுவான், “என் அடியான் இன்னார் உன்னிடம் உணவு கேட்டான், நீ அவனுக்கு உணவளிக்கவில்லை என்பதை நீ அறியவில்லையா? நீ அவனுக்கு உணவளித்திருந் தால், நிச்சயமாக நீ அதற்கான கூலியை என்னி டமே கண்டிருப்பாய் என்பதை நீ அறியவில் லையா?” [ஸஹீஹ் முஸ்லிம் 2569]

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு பெண் தன் வீட்டு உணவிலிருந்து வீண்விரயம் செய்யாமல் (அதாவது, கணவனின் அனுமதி யுடன், குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில்) தர்மம் செய்தால், அவள் தர்மம் செய்ததற்காக அவளுக்கு நற்கூலி கிடைக்கும். மேலும் அவளுடைய கணவனுக்கும் அவன் சம்பாதித்ததற்காக நற்கூலி கிடைக்கும். மேலும் பண்டகசாலைக் காப்பாளருக்கும் அதே போன்ற நற்கூலி கிடைக்கும். அவர்களில் எவருடைய நற்கூலியும் மற்றவர்களின் நற்கூலியில் எதையும் குறைத்துவிடாது." [ஸஹீஹுல் புகாரி: 2065]

ஒருவர் ஒரு மரத்தை நட்டு, அதிலிருந்து ஒரு பறவை/ மனிதன்/ பிராணி உண்டால், அது அவருக்கு ஒரு தர்மம்:

அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள்: "எந்த ஒரு முஸ்லிமும் ஒரு மரத்தை நட்டா லோ அல்லது ஒரு பயிரை விதைத்தாலோ, அதிலி ருந்து ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால், அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்." [ஸஹீஹுல் புகாரி: 2320]

மனிதனுக்கோ அல்லது விலங்குக்கோ உணவ ளிக்காமல் இருப்பது  நரக நெருப்பில் நுழையச் செய்கிறது:

உணவளிப்பது ஒரு முஸ்லிமின்  முக்கிய பண்பா கும் - அவ்வாறு செய்யாமல் இருப்பது ஒரு நிராக ரிப்பவனின் குணமாக குர்ஆனில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான், 'அவர்களிடம், “அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய வற்றிலிருந்து செலவிடுங்கள்” என்று கூறப்படும் போது, நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்ட வர்களிடம், “அல்லாஹ் நாடியிருந்தால், அவன் உணவளித்திருப்பானே, அவனுக்கு நாம் உணவ ளிக்க வேண்டுமா? நீங்கள் தெளிவான வழிகேட் டில் இருக்கிறீர்கள்” என்று கூறுகிறார்கள்' [அல் குர்ஆன், 36:47]. அல்லாஹ் மேலும் கூறுகிறான், 'அவர்களைப் பிடித்து விலங்கிடுங்கள் என்று கூறப்படும்... ஏனெனில் அவர்கள் மிகப் பெரிய வனான அல்லாஹ் மீது ஒருபோதும் நம்பிக்கை கொள்ளவில்லை, ஏழைகளுக்கு உணவளிப்பதை யும் ஊக்குவிக்கவில்லை'' [அல் குர்ஆன் 69:33-34].

அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித் தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பெண், ஒரு பூனையின் காரண மாக வேதனை செய்யப்பட்டாள். அப்பூனை பசி யால் சாகும் வரை அவள் அதை அடைத்து வைத் திருந்தாள்; அதனால் அவள் நரகத்தில் நுழைந் தாள்.” மேலும் (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்: “(அல்லாஹ்வே மிக அறிந்தவன்!) ‘நீ அதை அடைத்து வைத்திருந்தபோது, அதற்கு நீ உணவ ளிக்கவுமில்லை; அதற்குத் தண்ணீர் புகட்டவு மில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்பதற் காவது அதை நீ விடுவிக்கவுமில்லை’ (என்று அல்லாஹ் கூறினான்).” [ஸஹீஹுல் புகாரி: 2365]

الحمدلله

 

 

14. Quran verses and the related Ahadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا‏○ اِنَّمَا نُطْعِمُكُمْ لِـوَجْهِ اللّٰهِ لَا نُرِيْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا‏ ○

They (Abrar - the righteous people) give food in spite of love for it - to the needy, the orphan, and the captive, [Saying], "We feed you only for the face [i.e., approval] of Allāh. We wish not from you reward or gratitude. [Al Quran, 76:8 &9]

Allah says in previous aayath, about the qualities of righteous people:

★ they fulfill their vows,

★ abandon those forbidden things which Allah has prohibited for them,

★ devote to worship Allah with obedience,

★ they fear about the evil reckoning on the Day of Return,

★ they give food while they themselves love it and desire it'

★ saying they feed, seeking Allah's Face only, hoping for the reward of Allah and His pleasure and

★ they wish  neither reward, nor thanks  in return from them.

Mujahid and Sa`id bin Jubayr both said, "By Allah! They do not say this with their tongues, but rather, Allah knows it in their hearts and He commends them for it."

As Allah said in Quran they attain righteousness and save humanity:

By no means shall you attain Al-Birr (righteousness) unless you spend of that which you love. (3:92) Whoever saves one (life) - it is as if he had saved all of humanity’. [Al Qur’an, 5:32]

Feeding the poor is the best deed in Islam:

Narrated 'Abdullah bin 'Amr (RA): A man asked the Prophet (SAW) , "What sort of deeds or (what qualities of) Islam are good?" The Prophet (SAW) replied, 'To feed (the poor) and greet those whom you know and those whom you do not Know (Sahih al-Bukhari 12 & 28 and Sahih Muslim, 39).

Feeding is  Sadaqah:

The Messenger of Allah (saw) said, ‘What you feed yourself is Sadaqah for you. What you feed your child is Sadaqah for you. What you feed your wife is Sadaqah is for you. What you feed your servant is Sadaqah for you’ [Al-Adab Al-Mufrad 82]

Those who feed others are the best persons:

Suhayb ibn Sinan (RA) reported: The Messenger of Allah (SAW), said, “The best of you are those who feed others.” [Musnad Aḥmad 23926]

Giving food to neighbours brings barakah & ensures good relationship:

Abu Dharr (RA) reported, ’The Prophet (SAW) said, “O Abu Dharr, when you cook a stew, put more water in the broth and take care of your neighbours“’. [Sahih Muslim 2625b]

Ibn 'Abbas (RA) informed Ibn az-Zubayr (RA), "I heard the Prophet (SAW), say, 'He is not a believer whose stomach is filled while his neighbor goes hungry.'" [Al-Adab Al-Mufrad, 112]

Feeding others ensures Paradise:

The Messenger of Allah (saw) said, ’Worship Ar-Rahman, feed others, spread the (greeting of) peace, then you will enter Paradise with security (salam)’. [Jami` at-Tirmidhi 1855]

On another occasion, he ( SAW) mentioned:  Whichever believer feeds a hungry believer, Allah feeds him from the fruits of Paradise on the Day of Resurrection…[Jami` at-Tirmidhi 2449]

In addition to this immense reward, Ali (RA) said that the Messenger of Allah (SAW) said, ’“Indeed, in Paradise there are chambers whose outside can be seen from their inside, and their inside can be seen from their outside”. A Bedouin stood and said, “Who are they for, O Messenger of Allah?” He said, “For those who speak well, feed others, fast regularly, and perform Salah during the night while the people sleep”’ [Jami` at-Tirmidhi 1984].

Allah will protect them from the evil of that Day of Judgement:

'Whoever has three daughters and is patient towards them, and feeds them, gives them to drink, and clothes them from his wealth - they will be a shield for him from the Fire on the Day of Resurrection’ [Sunan Ibn Majah 3669].

The Messenger of Allah (saw) said, 'Allah, Mighty and Sublime be He, will say on the Day of Resurrection […] “O son of Adam, I asked you for food and you did not feed Me“. He will say, “O Lord, how can I feed You when You are the Lord of the worlds?” He (Allah) will say, “Did you not know that My servant so-and-so asked you for food and you did not feed him? Did you not know that had you fed him you surely would have found that (the reward for doing so) with Me?" [Sahih Muslim 2569]

Ayesha (RA) reported that the Messenger of Allah (SAW) said, ‘When a woman spends (and Ayesha [RA] added that herfather had specified ’when a woman feeds ‘) from her husband’s house, without spending too much, she will have her reward, and he will be rewarded likewise because he earned it, and she will be rewarded for what she spent…’ [Sahih Bukhari, 2065]

Planting a fruit bearing tree is kind of Charity:

Narrated Anas bin Malik: Allah's Messenger (SAW) said, "There is none amongst the Muslims who plants a tree or sows’ seeds, and then a bird, or a person or an animal eats from it, but is regarded as a charitable gift for him." [Sahih al-Bukhari 2320]

Not feeding human or an animal makes them to enter fire:

Giving food is an important part of being a Muslim - and not doing so is specifically mentioned in the Qur’an as a quality of a disbeliever. Allah says, 'And when it is said to them, “Spend from that which Allah has provided for you”, those who disbelieve say to those who believe, “Should we feed one whom, if Allah had willed, He would have fed? You are not but in clear error”’ [The Noble Qur’an, 36:47]. Allah also says, 'It will be said, “Seize and shackle th¹em...For they never had faith in Allah, the Greatest, nor encouraged the feeding of the poor"' [The Noble Qur'an 69:33-34].

The Messenger of Allah (saw) said, 'A woman punished her cat by imprisoning it until it died of hunger and because of it, she entered the Fire. It was said - and Allah knows best - ”You did not feed it nor give it water when you imprisoned it, nor did you release it and let it eat from the creatures which creep on the earth”’ [Sahih al-Bukhari, 2365].

الحمدلله



Friday, August 21, 2026

 

13. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ

  


     

الْهٰٮكُمُ التَّكَاثُرُۙ‏ حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَ

செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) திசை திருப்பி விட்டது- நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. (அல்குர்ஆன் : 102:1 & 2)

அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்கள் அனைவரும் இவ்வுலகின் இன்பங்கள், அலங்காரங்கள், செல்வங்கள், பொருட்கள், பதவி, அந்தஸ்து, பிற மனிதர்கள் மீதான நேசத்தில் மூழ்கியிருக்கி றார்கள். இதனால் அவர்கள் மறுமையைத் தேடுவ திலிருந்தும் அதை விரும்புவதிலிருந்தும் திசை திருப்பப் படுகிறார்கள்.  மரணம் அவர்களை வந்தடைந்து, அவர்கள் மண்ணறை வாசிகளாக மாறும் வரை  அலட்சியத்திலேயே இருந்து மறுமைக்காக சம்பாதிப்பதைத்  தாமதப்படுத்து கிறார்கள், தவிர்க்கிறார்கள். 

ஆஹதீஸ்:

அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார் கள்:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: "மனிதனுக்கு (ஆதமின் மகனுக்கு) தங்கம் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கு இருந்தாலும், தனக்கு இரண்டு பள்ளத்தாக்குகள் இருக்க வேண்டும் என்றே அவன் விரும்புவான். மண்ணைத் தவிர வேறு எதுவும் அவனது வாயை நிரப்பாது (அவனது பேராசையை மரணம் மட்டுமே முடிவுக்குக் கொண்டுவரும்). மேலும், பாவமன்னிப்புக் கோருபவரை அல்லாஹ் மன்னிக்கிறான் (அவனது தவ்பாவை ஏற்றுக் கொள்கிறான்)." [ஸஹீஹுல் புகாரி : 6439]

அபு ஹுரைரா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: "அடியான் 'எனது செல்வம், எனது செல்வம்' என்கிறான். உண்மையில் அவனது செல்வத்தில் அவனுக்குரியவை மூன்றே மூன்றுதான்: அவன் உண்டு முடித்தது, அல்லது உடுத்திக் கிழித்தது, அல்லது தர்மம் செய்து அனுப்பி வைத்தது.[சுனநுந் நஸாயி, 3613 & ஜாமிஉத் திர்மிதீ, 2342 & 3354] அவை அல்லாத மற்றவை அனைத்தும் அவனை விட்டு நீங்கிவிடக் கூடியவை; அவற்றை அவன் மக்களுக்காக விட்டுச் சென்றுவிடுவான். 

[ஸஹீஹுஹ் முஸ்லிம், 2959 a and 1047 a]

அனஸ் பின் மாலிக் (ரழி)   அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்)  கூறியதாக பதிவு செய்துள் ளார்கள்: "இறந்தவரை மூன்று விஷயங்கள் பின்தொடர் கின்றன. அவற்றில் இரண்டு திரும்பி விடுகின்றன; ஒன்று மட்டும் அவருடன் தங்கிவிடு கிறது. அவரது குடும்பம், செல்வம் மற்றும் அவரது  அமல ஆகியவையே அவரைப் பின்தொடர் கின்றன. அவரது குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன; அவரது செயல் மட்டும் அவருடன் தங்கிவிடுகிறது. [ஸஹீஹுல் புகாரி 6514 மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் 2960]

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக  அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: “ஆதமு டைய மகன் முதுமையடைகிறான்; அவனுடன் இரண்டு (ஆசைகள்) வளர்கின்றன: செல்வத்தின் மீதான அன்பு மற்றும் நீண்ட ஆயுள் (மீதான ஆசை).” [ஸஹீஹுல் புகாரி : 6421 மற்றும் சுனன் இப்னுமாஜா,4234]

الحمدلله

 

 

13. Quran verse and the related Ahadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

                           


الْهٰٮكُمُ التَّكَاثُرُۙ‏ حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَ                                                  

The mutual rivalry for piling up of worldly things diverts you, until you visit the grave [Al Quran, 102: 1& 2]

Allah says that every human being is preoccupied with love of this materialistic world, its delights and its adornments, his position and status and love for other human beings. It distains and distracts him till he gets his death and goes to grave. This attitude delays and prevents him from seeking the benefits of Hereafter.

Ahadhees:

Narrated Anas bin Malik (RA) who reported that Ubayy bin Ka`b (RA), hearing from the Allah's Messenger (SAW) said, "If Adam's son had a valley full of gold, he would like to have two valleys, for nothing fills his mouth except dust. And Allah forgives him who repents to Him." [Sahih al-Bukhari, 6439 and Sahih Muslim 1048 c]

It was narrated from Mutarrif (RA), from his father, that the Prophet (SAW) said: "The mutual rivalry (for piling up of worldly things) diverts you, 'Until you visit the graves (i.e. till you die).' The son of Adam says: 'My wealth, my wealth,' but your wealth is what you eat and consume, or what you wear and it wears out, or what you give in charity and send on ahead (for the Hereafter).'" [Sunan an-Nasa'i, 3613 & Jami` at-Tirmidhi 2342 &  3354] and what is beyond this (it is of no use to you) because you are to depart and leave it for other people. [Sahih Muslim, 2959 a and 1047 a]

Narrated Anas bin Malik (RA): Allah's Messenger (SAW) said, "When carried to his grave, a dead person is followed by three, two of which return (after his burial) and one remains with him: his relative, his property, and his deeds follow him; relatives and his property go back while his deeds remain with him." [Sahih al-Bukhari 6514 & Sahih Muslim 2960]

It was narrated from Anas (RA) that the Messenger of Allah (SAW) said: “The son of Adam grows old but two things remain young in him: His craving for wealth and his craving for a long life.” [Sahih al-Bukhari, 6421 & Sunan Ibn Majah, 4234]

الحمدلله

Wednesday, August 19, 2026

 

12. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ


                                                        

 وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوْا بِهَا‌ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ  بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ اِذَا هُمْ يَقْنَطُوْنَ

இன்னும் நாம் மனிதர்களை (நம்) அருளை அனுப விக்கச் செய்தால். அவர்கள் அதைக் கொண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிரா சைப்பட்டு விடுகிறார்கள். (அல் குர்ஆன் :30:36)

இத்தகைய மனித இயல்பு கண்டிக்கத்தக்கதாகும். ஏனெனில், "மனிதனுக்கு அருட்கொடைகள் வழங் கப்படும்போது அவன் மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டு,என்னை விட்டுத் துன்பங்கள் நீங்கி விட்டன.  (அல் குர்ஆன்:11:10) என்று கூறுகிறான். ஆனால், அல்லாஹ் பாதுகாத்து உதவி செய்தவர் கள் இதற்கு விதிவிலக்கானவர்கள்.

ஆனால், மனிதனுக்குச் சிரமங்கள் ஏற்படும்போது, இனி எக்காலத்திலும் தனக்கு நல்லவை நடக்காது என்று நம்பிக்கையிழந்து விடுகிறான். அல்லாஹ் கூறுகிறான்: எவர் பொறுமை காத்து, நற்செயல் கள் புரிகிறார்களோ அவர்களைத் தவிர. அவர்கள் கஷ்ட காலங்களில் பொறுமை காக்கிறார்கள் மற்றும் நிம்மதியான காலங்களில் நற்செயல்கள் செய்கிறார்கள்.

ஆஹதீஸ் 

"ஒரு முஃமினின் நிலை எவ்வளவு ஆச்சரியமானது! அவனுடைய அனைத்து நிலைகளிலும் அவனுக்கு நன்மை இருக்கிறது. இது ஒரு முஃமினுக்கு மட்டுமே உரியது. அவனுக்கு ஒரு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால், அவன் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துகிறான்; அது அவனுக்கு நன்மையாக அமைகிறது. அவனுக்கு ஒரு துன்பகரமான நிலை ஏற்பட்டால், அவன் பொறுமையாக இருக்கிறான்; அது அவனுக்கு நன்மையாக அமைகிறது." [ரியாதுஸ் ஸாலிஹீன், 27]

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஓர் அடியான், விதியை அதன் நன்மை தீமைகளுடன் நம்பி, தனக்கு ஏற்பட்ட ஒன்று தன்னைத் தவறியிருக்காது என்பதையும், தன்னைத் தவறிய ஒன்று தனக்கு ஏற்பட்டிருக்காது என்பதையும் அறியும் வரை, அவன் (முழுமையான) ஈமான் கொண்டவனாக ஆகமாட்டான்.' [ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ் ஸலாம் பதிப்பு) ஜாமிஉத் திர்மிதீ : 2144]

الحمدلله

  15. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்: السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ   قُلْ اِ...