Thursday, September 17, 2026

 

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ



اَللّٰهُ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الَّيْلَ لِتَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًا  اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَ لٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لللَا يَشْكُرُوْنَ

நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ் தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர் களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (அல்குர்ஆன்: 40:61)

அல்லாஹ் தன் படைப்புகளுக்குத் தான் வழங்கிய இரவு – பகல் என்ற    அருட்கொடையை  பல வசனங்கள் மூலம் நினைவூட்டுகிறான். அதாவது, ஒன்று இருளையும் அமைதியையும் கொண்டது, மற்றொன்று ஒளியையும் மக்கள் நடமாட்டத்தை யும் கொண்டது. சில சமயம் ஒன்று நீளமாகவும் மற்றொன்று குறுகியதாகவும் அமையும், பின்னர் அவை மாறிக்கொள்ளும். இரவு பகல் மாறி மாறி வருவதில் [45:5, 21:33, 3:27, 39:5 மற்றும்  36:37] சிந்தித்துணரும் அறிவுடையோருக்கு [2:164, 13: மற்றும் 3 3:190],  பயபக்தியுள்ள மக்களுக்கு [10:6], திடமான அத்தாட்சி  உள்ளது.  நன்றி செலுத்த விரும்புபவருக்கும் [25:62],  சிந்தனை யுடையவர்களுக்கும் இதில் (தக்க) படிப்பினை இருக்கிறது. [24:44]. 

அல்லாஹ் தன் ரஹ்மத்தினால், "இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்  இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சி களாக ஆக்கினோம்" [22:61, 57:6, 31:29, and 35:13]. நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன [27:86]. பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம்” [17:12, 28:73, 78:10 and 11, 40:61, 79:29 and 25:47  மற்றும் 6:96]. ஆனால் மக்கள் இரவை பகலாக்கி - கேளிக்கைகளில் ஈடுபட்டு, பகலை இரவாக்கி பாதி பகலில் தூங்கி வீணடித்து,  இம்மை மறுமை பலன்களை இழந்து தமக்குத் தாமே தீங்கு விளைவித்து கொள்கின்றனர்.

அல்லாஹ் சுபஹானஹுதாலா தன் திருமறையில் இரவு - பகலின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தும் வகையில் அதன் மீது சத்தியம் செய்துள்ளான்:

  • இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும், சத்தியமாக [84:17],
  • செல்கின்ற இரவின் மீது, சத்தியமாக, [89:4]
  • (பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக [91: 4],
  • (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக - பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக- [92:1 and 2]

அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு கட்டளை யிடுகின்றான்: “இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக; அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு (துதி) செய்வீராக [76:26]. நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவ னின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக, இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக! [52:48 and 49]. நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது. [73:6]

இரவு பகலை முந்தமுடியாது [36:40]. “மற்றும், இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக் குரியதே! (அல்லாஹ் கேட்கின்றான்) (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா? {23: 80]. அல்லாஹ் தன் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளை யிடுகின்றான்: “(நபியே!) நீர் கூறுவீராக: “கியாம நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டு வரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர் களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா? “கியாம நாள்வரை உங்கள் மீது அல்லாஹ் பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு உங்களுக்கு இரவைக் கொண்டு வரக்கூடியவன் அல்லாஹ்வையன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர் களா? (இவ்வுண்மையை) நீங்கள் நோக்க வேண்டாமா?” என்று கூறுவீராக! [28: 71 and 72]

ஆகவே, இரண்டாம் இரவில் நன்கு தூங்கி, மூன்றாம் இரவில் சிறிது நேரம் கண் விழித்து அவனை துதி செய்வீராக! நன்றி செலுத்துவீராக!  பகலில் அவன் அருளை தேடி இம்மையிலும், மறுமையிலும் பயன் அடைவீராக! ‘காலத்தை எவ்வாறு செலவளித்தீர்கள்?’ என மறுமையில் கணக்கு கேட்கப்படும்.

الحمدلله


 

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


 

اَللّٰهُ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الَّيْلَ لِتَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًا  اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَ لٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُوْنَ

It is Allah who made for you the night that you may rest therein and the day giving sight. Indeed, Allah is the possessor of bounty for the people, but most of them are not grateful. [ Al Quran,40:61]

Allah reminds us of His Grace and Bounty towards His creation of night and day. Among the two, the one is with darkness and stillness, and the other with light and human interaction; sometimes the one is longer while the other is shorter, then they switch. Indeed, in the alternation of the night and the day [21:33, 3:27, 39:5 and 36:37] are signs for people of understanding [45:5, 2:164 and 3:190], who fear Allah [10:6], who reflect [13:3], a lesson for those who have insight {24:44] and who desires to remember or desires to show his gratitude [25:62].

Allah says, “We have made the night and day, the two signs, and We erased the sign of the night and made the sign of the day visible that you may seek bounty from your Lord and may know the number of years and the account [of time] [17:12]. Allah made out of His Mercy the night as a covering (through its darkness) that mankind may rest therein [28:73 and 6:96] and have made the day for rising and livelihood and to seek from His bounty and [that] perhaps man will be grateful. [78:10 and 11, 40:61, 79:29 and 25:47]. He merges the night into the day and the day into night [22:61, 57:6, 31:29, and 35:13] for the people who believe [27:86]

The Children of Adam are transgressing this great sign, by misusing the timing. They without sleeping involved themselves in entertainment and spend their time in social media etc. They sleep more than half of the day and do little beneficial work wasting their accountable time.

The importance of day and night is revealed by swearing it in the Quran by Allah Subhanahuthala several times.

  • By the night and whatever it gathers in its darkness [84:17]
  • By the night when it departs [89:4]
  • By the day as it shows up (the sun’s) brightness; and by the night as it conceals it [91:3 and 4]
  • By the night as it envelops; and by the day as it appears in brightness [92:1 and 2]

Allah commands the believers, to prostrate and glorify the One who created them during night [76:26 and 41:37] and glorify the Praises of the Lord getting up from sleep in the night-time and also glorify His Praises at the setting of the stars. [52:4 and 49]. Because Allah says the night is impactful and suitable for worship and Quran recitation [73:6]

The night cannot outrun the day [36:40], since “To Him belongs the alternation of the day and night, (Allah interrogates them}, “Will you not then understand?” {23: 80]. He commands the Prophet (SAW) to say: “Tell me! If Allah made night continuous for you till the Day of Resurrection, who is an ilah (a god) besides Allah who could bring you light? Will you not then hear?” and to say: “Tell me! If Allah made day continuous for you till the Day of Resurrection, who is an ilah (a god) besides Allah who could bring you night wherein you rest? Will you not then see?” [28: 71 and 72]

So go to bed early, sleep well till the second part of the night. In the third part of night praise and prostrate to your Lord. Be thankful for His favours. During day time engage yourself in getting the Mercy and Blessing of your Lord. So that you will be successful in both the worlds. On the Day of Judgement, you will be questioned about the way of spending your time.

لحمدلله

Thursday, September 10, 2026


21. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


 

لَا يَسْــٴَــمُ الْاِنْسَانُ مِنْ دُعَآءِ الْخَيْرِ وَاِنْ مَّسَّهُ الشَّرُّ فَيَــٴُــوْسٌ قَنُوْطٌ

மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்ல தைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை; ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமு டைந்து நிராசையுள்ளவனாகின்றான்.(அல்குர்ஆன் : 41:49)

அல்லாஹ் கூறுகிறான்: செல்வம், உடல் ஆரோக் கியம் போன்ற நன்மைகளைத் தனது இறைவனி டம் கேட்பதில் மனிதன் ஒருபோதும் சோர்வடை வதே இல்லை என்று . ஆனால் சோதனைகள், சிரமங்கள் அல்லது வறுமை போன்ற தீங்குகள் அவனைத் தீண்டும்போது அவன் பெரும் விரக்தி யடைந்து நம்பிக்கையற்றவன் ஆகிவிடுகிறான். அதாவது, தனக்கு இனி ஒருபோதும் நன்மைகள் ஏற்படாது என்று அவன் எண்ணுகிறான். ஆனால், அவனைத் தீமை தீண்டும்போது, அதாவது சிரமங் கள் ஏற்படும்போது, அவன் நீண்ட பிரார்த்தனை களைச் செய்கிறான்.

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: மனிதனைத் துன்பம் தீண்டும்போது, அவன் படுத்த நிலை யிலோ, உட்கார்ந்த நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ நம்மை அழைக்கிறான். ஆனால், அவனது துன்பத்தை நாம் நீக்கியபோது, தன்னைத் தீண்டிய துன்பத்திற்காக அவன் நம்மை அழைக் கவே இல்லை என்பது போல் கடந்து செல்கிறான்! (10:12)

அவனைத் தீண்டிய ஒரு துன்பத்திற்குப் பிறகு, நம்மிடமிருந்து ஒரு அருளை அவன் சுவைக்கும்படி நாம் செய்தால், அவன் நிச்சயமாக, "இது எனக் குரியது எனது தகுதியால் கிடைத்தது. இது எனக்குக் கிடைக்க வேண்டியது தான், என் இறை வனிடம் இதைப் பெற நான் தகுதியானவன்" என்று கூறுகிறான்.

அவன் கவனக்குறைவாகவும், ஆணவமாகவும், நன்றியற்றவனாகவும் மாறுகிறான். அல்லாஹ் கூறுவது போல்: "நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான். ஏனெனில், அவன் தன்னைத் தன்னி றைவு பெற்றவனாகக் கருதுகிறான்" (96:6-7).

அதாவது, 'மறுமை என்று ஒன்று இருந்தால், இவ்வு லகில் என் இறைவன் எனக்குத் தாராளமாகவும் கனிவாகவும் இருந்தது போலவே அங்கேயும் இருப்பான்' என்று அவன் கருதுகிறான். இவ்வா றாக, தனது தீய செயல்களையும் உறுதியான ஈமான் (நம்பிக்கை) இல்லாததையும் பொருட் படுத்தாமல், அல்லாஹ் தனக்கு அருளுவான் என்று அவன் எதிர்பார்க்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் சமயத்தில் (பின்வருமாறு) கூறுவார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்:'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் மகத்தா னவன், சகிப்புத்தன்மை மிக்கவன். 

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் வானங்களின் அதிபதி, பூமியின் அதிபதி, கண்ணியமிக்க அர்ஷின் அதிபதி.'[ஸஹீஹுல் புகாரி : 6346].

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சோதனை யின் கடுமையிலிருந்தும், துர்பாக்கியம் ஆட்கொள் வதிலிருந்தும், விதியின் கேட்டிலிருந்தும்.......... அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்கள்........" [ஸஹீஹுல் புகாரி, 6347]

الحمدلله

 

 

21 Quran verse and the related hadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


 

لَا يَسْــٴَــمُ الْاِنْسَانُ مِنْ دُعَآءِ الْخَيْرِ وَاِنْ مَّسَّهُ الشَّرُّ فَيَــٴُــوْسٌ قَنُوْطٌ

Man is not weary of supplication for good [things], but if evil touches him, he is hopeless and despairing. [Surah Fussilath, 41:49]

Allah tells us that man never gets bored of asking his Lord for good things, such as wealth, physical health, etc., but if evil touches him -- i.e., trials and difficulties or poverty -- he is full of extensive supplication. Then he gives up all hope and is lost in despair, i.e., he thinks that he will never experience anything good again.

And truly, if We give him a taste of mercy from Us, after some adversity has touched him, he is sure to say: "This is due to my merit". He turns away and distances himself. If something good happens to him or some provision comes to him after a period of difficulty, he says, `this is because of me, because I deserve this from my Lord.' So when he is given some blessing, he becomes careless, arrogant and ungrateful, as Allah says:

"Nay! Verily, man does transgress. Because he considers himself self-sufficient" (96:6).`If there is a Hereafter after all, then my Lord will be generous and kind to me just as He was in this world.' So he expects Allah to do him favors in spite of his bad deeds and lack of certain faith.

Narrated Ibn `Abbas (RA): Allah's Messenger (SAW) used to say at a time of distress, "La ilaha illal-lahu Rabbul-l-'arsh il-'azim, La ilaha illallahu Rabbu-s-samawati wa Rabbu-l-ard, Rabbu-l-'arsh-il-Karim." "There is no God but Allah, the Lord of the Magnificent Throne. There is no God but Allah, the Lord of the heavens and the Lord of the earth, the Lord of the Noble Throne."[Sahih al-Bukhari, 6346]

Narrated Abu Huraira (RA): Allah's Messenger (SAW) used to seek refuge with Allah from the difficult moment of a calamity and from being overtaken by destruction and from being destined to an evil end......" [Sahih al-Bukhari 6347]

لحمدلله

Tuesday, September 8, 2026

 

20. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


என்னுடைய அடியார்களே! இந்நாளில் உங்க ளுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்பட வும் மாட்டீர்கள்” (என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்). இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர். நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்த வர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்). (அல்குர்ஆன்: 43:68 - 70).

ஈமான் கொண்டவர்கள் உள்ளத்தாலும் உடலாலும் அல்லாஹ்வின் சட்டங்களுக்குப் பணிந்து நடந்தார்கள். அல்-முஃதமிர் பின் சுலைமான் அவர்கள் தம் தந்தை கூறியதாக அறிவிக்கி றார்கள்: "மறுமை நாள் வந்து மக்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படும்போது, அச்சத்தில் ஆழ்ந்து விடாத மனிதர்களே இருக்க மாட்டார்கள். அப்போது ஓர் அழைப்பாளர் இவ்வாறு அறிவிப் பார்: "என் அடியார்களே! இன்றைய தினம் உங்களுக்கு எந்தப் பயமும் இல்லை, நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்." இதைக் கேட்டதும்  முஃமின்கள் அனைவரும் நம்பிக்கையூட்டப் படுவார்கள். அல்லாஹ்வின் கருணைக்கு காத்திருப்பார்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறைவ னிடமிருந்து பின்வருமாறு கூறினார்கள்: "என் வல்லமையின் மீது சத்தியமாக, என் அடியானிடம் நான் ஒருபோதும் இரண்டு அச்சங்களையோ அல்லது இரண்டு பாதுகாப்புகளையோ இணைக்க மாட்டேன். அவன் இவ்வுலகில் எனக்கு அஞ்சியி ருந்தால், மறுமை நாளில் நான் அவனைப் பாது காப்பேன். அவன் இவ்வுலகில் என்னிடமிருந்து பாதுகாப்பாக உணர்ந்திருந்தால், மறுமை நாளில் நான் அவனை அஞ்சும்படி செய்வேன். (ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 640)

எவரும் தமது செயல்களினால் மட்டும் சொர்க்கத்தில் நுழைந்து விட முடியாது; அல்லாஹ் வின் கருணையினாலும் கிருபையினாலும் மட்டுமே அது சாத்தியம். இருப்பினும், சொர்க்கத் தின் பல்வேறு அந்தஸ்துகளும் நிலைகளும் ஒருவரது நற்செயல்களுக்கு ஏற்பவே அமையும்.

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள்: "நேர்மையுடன் இருங்கள் (மற்றும் செயல் படுங்கள்); (சரியானதை) நெருங்கிச் செல்லுங் கள். மேலும் அறிந்து கொள்ளுங்கள்: உங்களில் எவரையும் அவருடைய செயல் (மட்டும்) சொர்க் கத்தில் நுழைவிக்காது. அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல், அது சிறிதளவே ஆயினும், தொடர்ந்து செய்யப்படும் செயலே ஆகும்." [ஹதீஸ் தரம் : ஸஹீஹ் ஸஹீஹுல் புகாரி : 6464]. ஆகையால் நிறைய நற்செயல்களை தொடர்ந்து செய்யுங்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவான்.

الحمدلله

 

20. Quran verse and the related hadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


[To the righteous people, Allāh will say], "O My servants, no fear will there be concerning you this Day (of Judgement), nor will you grieve, [You] who believed in Our verses and were Muslims. Enter Paradise, you and your kinds, delighted."  (43:68 - 70)

Allah's righteous servants believed Him by their hearts and they submitted inwardly and outwardly to the Laws of Allah. Al-Mu`tamir bin Sulayman narrated that his father said: “When the Day of Resurrection comes and the people are resurrected, there will be no one left who will not be filled with terror. Then a caller will cry out: "No fear will there be concerning you this Day, nor will you grieve" Then all of mankind will be filled with despair apart from the true believers, who will be waiting filled with hope.

Abu Huraira (RA) reported: The Prophet (SAW) narrated from his Lord Almighty that He said, “By My might, I will never combine in My servant two fears or two securities. If he feared Me in the world, I will make him safe on the Day of Resurrection. If he felt secure from Me in the world, I will make him fearful on the Day of Resurrection.” [Ṣaḥīḥ Ibn Ḥibbān, 640 - Authentic according to Al-Albani]

Due to their righteous deeds Allah, the Merciful told them to enter Paradise. For no one will be admitted to Paradise by virtue of their deeds alone; that will be by the Mercy and Grace of Allah. But the varying ranks and degrees of Paradise will be attained according to one's righteous deeds.

Narrated `Ayesha (RA): Allah's Messenger (SAW) said, "Do good deeds properly, sincerely and moderately and know that your deeds will not make you enter Paradise, and that the most beloved deed to Allah is the most regular and constant even if it were little." [Sahih al-Bukhari, 6464]. So do righteous deeds, Allah will keep His Promise.

الحمدلله

Monday, September 7, 2026

 

19. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ



وَلَا تَقْفُ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ ؕ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰٓىِٕكَ كَانَ عَنْهُ مَسْـُٔوْلًا 

எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருத யமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். (அல்குர்ஆன் : 17:36)

அலி பின் அபீ தல்ஹா அவர்கள், இப்னு அப்பாஸ் (ரழி)  கூறிய தாக அறிவிக்கிறார்கள்: "உங்களுக் குத் தெளிவான அறிவு இல்லாத எதையும் சொல் லாதீர்கள் என்பதாகும்." அல்-அவ்ஃபீ அவர்கள் கூறினார்கள்: "உங்களுக்கு அறிவு இல்லாத ஒரு விஷயத்தைக் கொண்டு யாரையும் குற்றம் சாட் டாதீர்கள்." முஹம்மது பின் அல்-ஹனஃபிய்யா அவர்கள் கூறினார்கள்: "இதன் பொருள் பொய் சாட்சியம் அளிப்பதாகும்." கதாதா அவர்கள் கூறி னார்கள்: "நீங்கள் எதையும் பார்க்காத போது 'நான் பார்த்தேன்' என்றோ, எதையும் கேட்காத போது 'நான் கேட்டேன்' என்றோ, அல்லது உங்க ளுக்குத் தெரியாதபோது 'எனக்குத் தெரியும்' என்றோ சொல்லாதீர்கள். ஏனென்றால் அல்லாஹ் இவை அனைத்தைப் பற்றியும் உங்களிடம் விசாரிக்கிறான்." முடிவாக, அவர்கள் கூறியதன் பொருள் என்னவென்றால், அறிவு இல்லாமலும், வெறும் கற்பனைகளும் மாயைகளுமான சந்தே கத்தின் அடிப்படையில் மட்டும் பேசுவதை அல்லாஹ் தடை செய்கிறான்.

அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள் அபூ அப்துல்லாஹ் (ரழி) அவர்களிடமோ, அல்லது அபூ அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அபூ மஸ்ஊத் (ரழி) அவர்களி டமோ, "'ஸஃஅமூ' (உறுதிப்படுத்தப் படாத செய்தி) என்பது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறத் தாங்கள் என்ன செவியுற்றீர்கள்?" என்று கேட்டார்கள். அவர் பதிலளித்தார்கள்: "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: 'ஒரு மனிதன் 'ஸஃஅமூ' (உறுதியற்ற செய்திகளை) கூறுவது, ஒரு மோசமான சவாரி மிருகமாகும் (அதாவது, நம்பகத்தன்மையற்ற செய்திகளைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மோசமான வழிமுறை)'." ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ) [சுனன் அபீ தாவூத் 4972].

அல்-சகாவி (ரலி) அவர்கள் கூறினார்கள், “நிச்சய மாக, அவர்கள் வெறுமனே ஒரு கூற்றாகக் கூறிய ஒன்றை, அதன் மூலத்தையோ அல்லது சரிபார்ப் பையோ குறிப்பிடாமல், தங்கள் பேச்சில் ‘கற்ப னை செய்கிறார்கள்’ என்று கூறப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் இந்த வகையான பேச்சை வெறுத் தார்கள், மேலும் ஒருவர் கூறும் விஷயங்களில் நேர்மையையும் சரிபார்ப்பையும் கடைப்பிடிக்கு மாறு கட்டளையிட்டார்கள்.” [அல்-மகாஸித் அல்-ஹஸனா 1/244]

தங்களுக்குக் காதுகளையும், கண்களையும், இதயங்களையும் வழங்கிய படைப்பாளனின் முன்னிலையில், ஒவ்வொருவரையும் அவர்களின் கேட்டல், பார்த்தல் மற்றும் உணர்வுகளுக்குப் பொறுப்பாக்கி குர்ஆன் கடமையாக்குகிறது. இதுவே புலன்கள், இதயம் மற்றும் மனதின் நேர்மையும் உண்மையுமாகும்.

அல்லாஹ் கூறுகிறான், "அவன் உங்களை, அதாவது மனிதர்களை, அவர்களின் தாய்மார் களின் கருப்பைகளிலிருந்து எதையும் அறியாத வர்களாகப் பிரித்தெடுத்தான். மேலும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக, உங்களுக்குக் கேட்கும் திறனையும், பார்க்கும் திறனையும், இதயங்க ளையும் [அதாவது, அறிவையும்] அவன் ஏற்படுத் தினான்." [16:78]. மற்றொரு இடத்தில் அவன் கூறினான், "உங்களைப் படைத்து, உங்களுக்குக் கேட்கும் திறனையும், பார்க்கும் திறனையும், இதயங்களையும் வழங்கியவன் அவனே. நீங்கள் சிறிதளவே நன்றி செலுத்துகிறீர்கள்." (67:23)

ஒரு குழந்தை பிறக்கும்போது, அதனால் எதையும் அடையாளம் காண முடியாது. அது வளரும்போது, முதலில் குரல்களைக் கேட்டு அடையாளம் காண் கிறது, பின்னர் தன் கண்களால் பொருட்களைப் பார்க்கிறது. கேட்பதாலும் பார்ப்பதாலும், அதன் இதயமும் மனமும் வளர்ச்சியடைவதோடு அது படிப்படியாக வளர்கிறது. குடும்பம் மற்றும் சுற் றுப்புறங்களின் உதவியுடன், வளர்ந்த மனிதன் விஷயங்களைப் பகுத்தறிந்து, எது சரி எது தவறு என்பதை வேறுபடுத்தி அறிய முயற்சிக்கிறான். மனிதன் தன் இறைவனை வணங்குவதற்காகவே அல்லாஹ் இந்தத் திறன்களை அவனுக்குப் படைத்துள்ளான். அதுவே நாம் படைக்கப்பட்டதன் நோக்கமாகும். அவன் தன் படைப்பாளனுக்குக் கீழ்ப்படிவதற்கும் நன்றி செலுத்துவதற்கும் இந்த உறுப்புகள், திறன்கள் மற்றும் வலிமைகள் அனைத்தையும் பயன்படுத்துகிறான்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள், "அல்லாஹ் கூறினான், 'என் அடியான் என் னை நெருங்குவதற்கு மிகவும் விருப்பமான பொருள், நான் அவன் மீது கடமையாக்கிய (கட்டா யத் தொழுகை) செயலாகும்; மேலும் என் அடி யான் நஃபில் (தொழுதல் அல்லது கூடுதல் நற் செயல்கள்) செய்வதன் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே இருக்கிறான், நான் அவனை நேசிக்கும் வரை, அதனால் அவன் கேட்கும் செவியாகவும், அவன் பார்க்கும் பார்வையாகவும், அவன் பிடிக் கும் கையாகவும், அவன் நடக்கும் காலாகவும் நான் ஆகிறேன்; அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுப்பேன், அவன் என் பாதுகாப் பைக் கேட்டால், நான் அவனைக் காப்பேன்; (அதாவது, அவனுக்கு என் அடைக்கலத்தைக் கொடுங்கள்) மேலும், ஒரு முஃமினின் உயிரைப் பறிக்க நான் தயங்குவது போலவே, வேறு எதை யும் செய்ய நான் தயங்குவதில்லை. ஏனெனில், அவன் மரணத்தை வெறுக்கிறான், அவனை ஏமாற்றுவதை நான் வெறுக்கிறேன்.” [ஸஹீஹ் அல்-புகாரி, 6502]

الحمدلله

 

  السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ اَللّٰهُ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الَّيْلَ لِتَسْكُنُوْا فِي...