5. குர்ஆன் & ஹதீஸ்: குர்ஆனை
வாசிக்கும் போது ஸஜ்தா செய்தல்:
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
திருக்குர்ஆனை ஓதுபவர்கள், அவனுடைய சான்று களையும், அத்தாட்சிகளையும் கேட்கும் போது, அவர்கள் தங்கள் இறைவனை புகழ்ந்து பணிவுடன் தங்களுக்குக் கிடைத்த மகத்தான அருட்கொடை களுக்குப் நன்றி தெரிவித்து, அவரை வணங்குகின்றனர்.
குர்ஆன் கூறுகிறது:
(நபியே!) “அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் (வேத) ஞானம் கொடுக்கப்பட்டிருந் தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக (பணிந்து) விழுவார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.(17:107)
நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினை வூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள். (32:15)
மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக் கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை. (84:21)
இவ்வசனங்களில் முதல் வசனத்தை தவிர மற்ற மூன்றும் ஸஜ்தா வசனங்கள்.குர்ஆனில் 14 ஸஜ்தா வசனங்கள் உள்ளன. அவற்றை ஓதும் போது, ஸஜ்தா திலாவத் செய்வது வாஜிப்/முஸ்தஹாப் ஆகும்.
ஹதீஸ்கள்:
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின் றார்கள்: ஆதமுடைய மகன் ஸஜ்தா ஆயத்தை ஓதி, பின்னர் ஸஜ்தா செய்யும்போது ஷைத்தான் தனிமைக்குச் சென்று அழுது கூறுவான்: அந்தோ!ஆதமுடைய மகனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிடப்பட்டது, அவனும் ஸஜ்தா செய்தான், அதனால் அவன் சுவர்க்கத்திற்கு உரியவனா னான்; மேலும் எனக்கும் ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிடப்பட்டது, ஆனால் நான் மறுத்து விட்டேன், அதனால் நான் நரகத்திற்குரியவனா னேன்." (ஸஹீஹ் முஸ்லிம் :81 a)
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா (வசனம்) உள்ள அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தா செய்வார் கள். அப்போது நாங்களும் ஸஜ்தா செய்வோம். எங்களில் ஒருவருக்குத் தமது நெற்றியை வைப்ப தற்குக்கூட இடம் கிடைக்காது. [ஸஹீஹ் புகாரி, 1079]
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சூரா) அந்-நஜ்மில் ஸஜ்தா செய்தார்கள். அவர்களுடன் முஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், ஜின்களும், மனிதர் களும் ஸஜ்தா செய்தார்கள். [ஸஹீஹ் புகாரி, 1071]
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் மக்காவில் 'சூரத்துந் நஜ்ம்' அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தா செய்தார்கள். அவர்களுடன் இருந்தவர் களும் ஸஜ்தா செய்தார்கள். ஆனால், ஒரு முதியவர் மட்டும் (ஸஜ்தா செய்யாமல்), ஒரு கைப்பிடி சிறு கற்களையோ அல்லது மண்ணை யோ எடுத்து, அதைத் தம் நெற்றிக்கு உயர்த்தி, "இது எனக்குப் போதும்" என்று கூறினார். பின்னர், அவர் ஒரு இறைமறுப்பாளராகக் கொல்லப் பட்டதை நான் கண்டேன். (ஸஹிஹ் புகாரி, 1067)
ஸஜ்தா திலாவத்தின் துவா:
என் முகத்தைப் படைத்து அதில் தனது அறிவாலும் ஆற்றலாலும் செவிப் புலனையும் பார்வைத் திறனையும் ஏற்படுத்திய (இறை)வனுக்கு என் முகம் பணிகிறது" [திர்மிதீ, 3425]
الحمدلله