4 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:
السلام عليكم
ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ
وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَا اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْم
நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 64:11)
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள்: "பலவீனமான இறைநம்பிக்கையாளரை விட வலிமையான இறைநம்பிக்கையாளர் (ஈமானி லும், உடலிலும், நற்செயல் களிலும்) சிறந்தவரும், அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானவரும் ஆவார். எனினும், இருவரிடமும் நன்மை இருக்கிறது. உங்களுக்குப் பயனளிப்பதில் (இம்மைக்கும் மறுமைக்கும்) முயற்சி செய்யுங்கள், அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள், மேலும் (எந்த ஒரு நற்செயலிலும்) தளர்ச்சி அடை யாதீர்கள். உங்களுக்கு ஏதேனும் (துன்பமோ, இழப்போ) ஏற்பட்டால், "நான் அப்படிச் செய்தி ருந்தால் (இது நடந்தி ருக்காதே)..." என்று கூறாதீர்கள், மாறாக "கத்(த்)தரல்லாஹு வமா ஷாஅ ஃபஅல (அல்லாஹ் விதித்துவிட்டான், அவன் நாடியதைச் செய்தான்)" என்று கூறுங்கள். ஏனெனில், '...இருந்தால்' என்ற சொல் ஷைத்தா னின் செயல்களுக்கு (வருத்தம், மனக்குறை, அல்லாஹ்வின் விதியை மறுத்தல் போன்ற வற்றுக்கு) வழி திறக்கிறது." [சுனன் இப்னுமாஜா : 79]
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சோதனையின் கடுமையிலிருந்தும், துர்பாக்கியம் (நம்மை) வந்தடைவதிலிருந்தும், விதியின் கெடுதியி லிருந்தும், எதிரிகள் (நம் துன்பத்தைக் கண்டு) மகிழ்வதிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்."[ஹதீஸ் தரம் : ஸஹீஹ்; ஸஹீஹுல் புகாரி : 6616]
الحمدلله