Thursday, August 6, 2026

 

7 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ

 


ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَلَيْسَ بِضَآرِّهِمْ شَيْـًٔا إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ

அல்லாஹ்வுடையை அனுமதியின்றி (ஈமான் கொண்டவர்களுக்கு) ஷைத்தானால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது; எனவே முஃமின்கள் அல்லாஹ்வையே முற்றிலும் நம்பியிருக்க வேண்டும். (அல்குர்ஆன் : 58:10)

குர்ஆனில் ஷைத்தானைப் பற்றி அல்லாஹு தாலா கூறுகிறான்:

ஷைத்தான் பரிகாசம் செய்பவன் (2:14 ); ஆணவம்  கொண்டவன் (2:34);  துஷ்டன் (4:117); நன்றி கெட்டவன் (17: 27); அர்ரஹ்மானுக்கு மாறு செய்பவன் (19:44 &18:50 ); விரட்டப்பட்டவன் (16:98); சிறுமை அடைந்தவன் (7:13); வழிதவறியவன் (7:175); சதி செய்பவன் (25:29); மற்றும் மனிதகுலத்திற்கு  பகிரங்க விரோதி யாக இருக்கின்றான்.(2:168, 6:142, 12:5; 17:53, 28:15)

அவனுடைய செயல்கள்:

அவன் மக்களை மறக்கும்படிச் செய்கிறான் (6:68; 12:42 & 16:63); தன் சகாக்களைக் கொண்டு பயமுறுத்துகிறான் (3:175); மக்களுக்குள் பிணக்கை ஏற்யடுத்துகிறான் (17:27); அவர்களுக்கு அவன் வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை (17:64 & 4:120); (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று) பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; (2:268); அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாக (6:43 & 8:48) காண்பித்து அவர்களை நேர்வழியில் (போக விடாது) தடுத்து விடுவான். (29:38). 

அலங்காரமான  பேச்சால் இரகசியமாக ஏமாற்றுவான் (6:112); அவன் உறவினர்களிடை யே பகைமையைத் தூண்டுகிறான் (12:100);

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் மக்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் தடுத்து விடத்தான்; (5:91) அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் அவர்கள் இருப்பதற்காகவேதான். (35:6).

அல்லாஹ் அவனை சபிக்கப்பட்டவனாக வெளியேற்றினான்:

ஆதமுக்கு சிரம்பணிய அல்லாஹ் கட்டளையிட, அவன்  மறுத்தான். (7:11) அதற்கு இறைவன், “இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; நீ நிந்திக் கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் ெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந் தோரில் ஒருவனாகி விட்டாய்” (7:13.)  உன் சகாக்கள் யாவரையும், உன்னைப் பின்பற்று வோரையும், கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று அல்லாஹ் கூறினான். (7:18)

அல்லாஹ்விடம் அவன் அவகாசம் கொடுக்க வேண்டினான்:

(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” (7;14) என இப்லீஸ் வேண்டினான். (]அதற்கு அல்லாஹ்) “நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்” என்று கூறினான். (7:15)

அவன் அல்லாஹ்விடம் சவால் விடுத்தான்:

அதற்கு இப்லீஸ் “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக நீ என்னை வழிதவறச் செய்ததால், நிச்சயமாக நான் உனது நேரான பாதையில் ஆதமுடைய சந்ததிகளுக்கு எதிராகக் காத்திருப்பேன். அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன். பின்னர் நான் அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும், அவர்களின் வலப்புறத்திலிருந்தும் இடப்புறத்திலிருந்தும் வருவேன். அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துபவர்களாக இருப்பதை நீ காணமாட்டாய்.” (7:16 &17) “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நான் நிச்சயமாக எடுத்துக் கொள்வேன், நீ தேர்ந்தெடுத்த அடியார்களைத் தவிர” (38:82 & 83) என்றும், இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; (4: 118 & 119)

நியாயத்தீர்ப்பு நாளில் அவன் தன்னை பின்பற்றுபவர்களைக் கைவிடுவான்:

மனிதர்களுக்கு இடையேயான விஷயங்கள் தீர்க்கப்படும்போது, அவன் தன்னை பின்பற்றுபவர்களிடம் கூறுவான், “நான் உங்களுக்கு வாக்குறுதி அளித்தேன், ஆனால் நான் உங்களுக்குத் துரோகம் செய்துவிட்டேன். ஆனால் நான் உங்களை அழைத்ததைத் தவிர, உங்கள் மீது எனக்கு வேறு அதிகாரம் இல்லை, நீங்கள் எனக்குப் பதிலளித்தீர்கள். எனவே என் மீது பழி சுமத்தாதீர்கள்; உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்.” நான் உங்களுக்கு உதவ அழைக்கப்பட முடியாது, நீங்களும் எனக்கு உதவ அழைக்கப்பட முடியாது. நிச்சயமாக, நீங்கள் என்னை [அல்லாஹ்வுடன்] இணைத்ததை நான் மறுக்கிறேன். நிச்சயமாக, அநியாயம் செய்பவர்களுக்கு வேதனையான தண்டனை உண்டு." (14:22). மேலும் அவன் கூறுவான், "நான் உங்களை விட்டு விலகிவிட்டேன். நிச்சயமாக, அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கு நான் அஞ்சுகிறேன்." (59:16)

நியாயத்தீர்ப்பு நாளில் அவன் அல்லாஹ்விடம் கூறுவான்:  "நான் அவர்களை வரம்பு மீறச் செய்யவில்லை - மாறாக, அவர்கள் தாங்களாகவே வெகுதூரம் வழிதவறிச் சென்றனர்." (50:27) ஆதலால் அல்லாஹ் ஆதமின் சந்ததியினருக்கு எச்சரிக்கை விடுக்கிறான்:

அல்லாஹ் "ஆதமின் சந்ததியினரே!" என்று நம்மை அழைத்து, கூறுகிறான்.

“ஷைத்தான் உங்களைச் சோதிக்காதிருக்கட்டும் (7:27); அவனை வணங்காதீர்கள் (36:60); அவன் உங்களைத் தடுக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள் (43:62); அவனது சூழ்ச்சி பலவீனமானது (4:76); எனவே அவனது அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள் (2:168; 6:142; 24:21); ஏனெனில் அவன் ஒழுக்கக்கேட்டையும் அநியாயத்தையும் ஏவுகிறான் (24:21); அவர்களுக்கு ஆசைக் காட்டி, நீடித்த நம்பிக்கையை அளிக்கிறான் (47:25).

அவனது தூண்டுதலிலிருந்து விடுபடுவது எப்படி?

ஷைத்தானிடமிருந்து ஒரு தீய எண்ணம் வந்தால், அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள் (7:200). ஷைத்தானிடமிருந்து ஒரு தூண்டுதல் ஏற்படும்போது, அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறவர்கள் அவனை நினைவு கூர்கிறார்கள், உடனடியாக அவர்களுக்குப் புரிதல் ஏற்படுகிறது. (7:201). மேலும் குர்ஆன் ஓதும்போது, [முதலில்] அல்லாஹ்விடம் (16:98), "என் இறைவா, ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்." (23:97) என கூறுங்கள்.

முடிவாக அல்லாஹ் சுப்ஹானஹுதாலா கூறுகிறான்: "அல்லாஹ்வின் அருளும் அவனது கருணையும் இல்லாவிட்டால், ஒரு சிலரைத் தவிர, மனிதன் ஷைத்தானைப் பின்பற்றியிருப்பான்." (4:83). அவன் நம்பிக்கை கொண்டவர்களைத் துன்புறுத்தலாம், ஆனால் அல்லாஹ்வின் அனுமதி யின்றி அவன் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டான். (58:10). ஷைத்தானின் செல்வாக்குகளிலிருந்து அல்லாஹுதாலா நம் அனைவரையும் பாதுகாத்து அரவணைப்பானாக!.

ஆஹதீஸ்

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆதமுடைய மக்களில் (மனிதர்களில்) எவர் பிறக்கும்போதும், ஷைத்தான் அவனது இரு விலாப்புறங்களிலும் தனது விரலால் குத்துகிறான்; மர்யமின் குமாரர் ஈஸா (அலை) அவர்களைத் தவிர. (ஷைத்தான்) அவர்களைக் குத்தச் சென்றான்; ஆனால் (தடுப்புத்) திரையிலேயே குத்தினான்.” ஸஹீஹுல் புகாரி : 3286

ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ".......நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குள் இரத்தம் ஓடுவதைப் போன்று ஓடுகிறான். உங்கள்  உள்ளங்களிலும் அவன் ஏதேனும் தீய எண்ணத்தை -  போட்டு விடுவானோ என்று நான் அஞ்சினேன்" என்று கூறினார்கள். [ஸஹீஹுல் புகாரி : 3281]

இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: உமர் (ரழி) அவர்கள் 'அல்-ஜாபியா'வில் எங்களுக்கு மத்தியில் உரை நிகழ்த்தினார்கள்: ………..ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்; (அவ்வாறு தனித்திருந்தால்) அவர்களில் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான். நீங்கள் ஜமாஅத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்; பிரிவினை யிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் தனித்திருப்பவனுடன் இருக்கிறான்; இருவரை விட்டும் அவன் வெகு தொலைவில் இருக்கிறான்………’  [ஜாமிஉத் திர்மிதீ : 2165]

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:"நிச்சயமாக இப்லீஸ் தனது சிம்மாசனத்தை நீரின் (கடலின்) மீது அமைக்கிறான். பின்னர் மனிதர்களைச் சோதிப்பதற்காகத் தனது படைகளை அனுப்பு கிறான். அவனிடம் பதவியில் மிக நெருக்க மானவன், குழப்பத்தை (பித்னாவை) மிகப்பெரிய அளவில் ஏற்படுத்துபவனே ஆவான்.அவற்றுள் ஒருவன் வந்து, 'நான் இன்னின்ன காரியங்களைச் செய்தேன்' என்று கூறுவான். அதற்கு இப்லீஸ், 'நீ ஒன்றும் செய்யவில்லை' என்பான். பிறகு மற்றொருவன் வந்து, 'இன்ன மனிதனை நான் விடவில்லை; அவனுக்கும் அவனது மனைவிக்கு மிடையில் பிரிவினையை ஏற்படுத்திவிட்டேன்' என்று கூறுவான். உடனே இப்லீஸ் அவனைத் தமக்கருகில் அழைத்து, 'நீ மிக நல்லவன்' என்று பாராட்டுவான்."(அறிவிப்பாளர் அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) இப்லீஸ் அவனைக் கட்டியணைத்துக் கொள்வான். [Translated from Sahih Muslim, 2813 b]

الحمدلله

                                 

 

7. Quran verse and the related Ahadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

 

لِيَحْزُنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَلَيْسَ بِضَآرِّهِمْ شَيْـًٔا إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ


Shaithan cannot harm the believers whatsoever except by Allah’s Will. So in Allah let the believers put their trust. [58:10].

Allahuthala says in Quran about Shaithan:

Shaithan is a mocker (2:14); arrogant (2:34); rebellious (4:117); ungrateful (17:27), disobedient to the command of his Lord (19:44 &18:50); the expelled one [from His mercy] (16:98); debased (7:13); pursuer and the deviator (7:175); a deserter (25:29) an evil companion (4:60) and a clear enemy (2:168, 6:142, 12:5; 17:53 28:15) to mankind.  

His deeds:

He makes people to forget (6:68; 12:42 & 16:63); frightens them (3:175); induces dissensions (17:53) in them; promises them delusion (17:64); threatens with poverty and orders to immorality (2: 268); made their deeds attractive (6:43) and pleasing to them (8:48 & 29:38).  Shaithan promises them and arouses desire in them (4:120]. He inspires with decorative speech leading to delusion (6:112); he induces enmity between relatives (12:100); he wants to cause between men animosity and hatred through intoxicants and gambling and avert from the remembrance of Allah and from prayer. (5:91) He only invites his party to be among the companions of the Fire (35:6)

Allah cursed him and expelled him:

He was commanded by Allah to Prostrate Adam (AS) but he refused to do so (7:11). Allah said “Then get down from Paradise! It is not for you to be arrogant here. So get out! You are truly one of the disgraced.” (7:13.)  “You are disgraced and rejected! I will certainly fill up Hell with you and your followers all together.” (7:18).

He appealed to Allah to give some time:

He appealed, “Then delay my end until the Day of their resurrection.” “You are delayed until the appointed Day.” (7: 14 & 15).

He challenges Allah:

Satan said, “By Your Glory! I will certainly mislead them all, except Your chosen servants among them.” (38:82 & 83). said: “Because You have sent me astray, surely I will sit in wait against them (human beings) on Your Straight Path. Then I will come to them from before them and behind them, from their right and from their left, and You will not find most of them as thankful ones.” (7:16 &17). He further said “I will surely take hold of a certain number of Your servants. I will certainly mislead them and delude them with empty hopes. Also, I will order them and they will slit the ears of cattle and alter Allah’s creation.”  (4: 118 & 119)

On the day of Judgement he deserts his followers

When matter between men are settled he will say to his worshippers, “I promised you, but I betrayed you. But I had no authority over you except that I invited you, and you responded to me. So do not blame me; but blame yourselves. I cannot be called to your aid, nor can you be called to my aid. Indeed, I deny your association of me [with Allah] before. Indeed, for the wrongdoers is a painful punishment." (14:22). He also says, "I am disassociated from you. Indeed, I fear Allah, Lord of the worlds." (59:16)

On the Day of Judgement, he will say to Allah, “I did not make them transgress - rather, they were far astray on their own.” (50:27)

Allah warns to the children of Adam:

Allah call upon us saying: "O children of Adam! He warns us saying, "Let not Shaithan tempt you (7:27); do not worship him (36:60) never let him avert you (43:62); his plot is weak (4:76) so do not follow his footsteps (2:168; 6:142; 24:21); because he enjoins immorality and wrongdoing (24:21); tempt them and give prolonged hope for them. (47:25)".

How to get rid of his influence?

If an evil suggestion comes from Shaithan, seek refuge in Allah (7:200). - when an impulse touch from Shaithan, those who fear Allah, remember [Him] and at once they have insight. (7:201) and during Qur’an recitation, [first] seek refuge in Allah from Shaithan (16:98) say, "My Lord, I seek refuge in You from the incitements of the devils, (23:97)

Conclusively Allah Subhanahuthala says: "If not for the favor of Allah and His mercy, man would have followed Shaithan, except for a few." (4:83). He may grieve those who have believed, but he will not harm them at all except by permission of Allah. (58:10). May Allahuthala protect and shield us all from the influences of Shaithan.

Ahadith:

Narrated Abu Huraira (RA): The Prophet (SAW) said, "When any human being is born. Shaithan touches him at both sides of the body with his two fingers, except Isa (AS), the son of Mary, whom Shaithan tried to touch but failed, for he touched the placenta-cover instead." [Sahih al-Bukhari, 3286]

Narrated Safiya bint Huyay (RA): While Allah's Messenger (SAW) said, ".........Shaithan circulates in the human mind as blood circulates in it, and I was afraid that Shaithan might throw an evil thought (or something) into your hearts." [Sahih al-Bukhari 3281].

Ibn 'Umar (RA) narrated: 'Umar (RA) delivered a Khutbah to us at Al-Jabiyah. He said: ....."A man is not alone with a woman but the third of them is Ash-Shaitan. Adhere to the Jama'ah, beware of separation, for indeed Ash-Shaitan is with one, and he is further away from two. Whoever wants the best place in Paradise, then let him stick to the Jama'ah".......' [ Jami` at-Tirmidhi 2165]

Jabir reported that Allah's Messenger (SAW) said: Iblis places his throne upon water; he then sends detachments (for creating dissension) ; the nearer to him in rank are those who are most notorious in creating dissension. One of them comes and says: "I did so and so." And he says: "You have done nothing." Then one amongst them comes and says: "I did not spare so and so until I sowed the seed of discord between a husband and a wife." The Shaithan goes near him and says: "You have done well." A'mash said: He then embraces him. [Sahih Muslim, 2813 b]

الحمدلله

Tuesday, August 4, 2026

6 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ

                                

‏وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَيٰوةِ الدُّنْيَا ۙ لِنَفْتِنَهُمْ فِيْهِ‌  وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَّاَبْقٰى

இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனு பவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவை யெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற் காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமை யில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலை யானதும் ஆகும். (அல்குர்ஆன் : 20:131)

 

இப்னு காதிர் தன் விளக்க உரையில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை ஹதீஸ்களிலிருந்து உதாரணமாக எழுதியுள்ளார்:

உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவியரி டமிருந்து விலகி இருப்பதாகச் சத்தியம் செய்து விட்டுத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டி ருந்த ஒரு சிறிய அறைக்குள் நுழைந்தார்கள். அவர் உள்ளே சென்றபோது, நபி (ஸல்) அவர்கள் கரடுமுரடான ஒரு பாயின் மீது படுத்திருப்பதைப் பார்த்தார். அந்த அறையில் ஒரு குவியல் கருவேல மரக் காய்களையும், தொங்கிக்கொண்டிருந்த சில தோல் பைகளையும் தவிர வேறெதுவும் இருக்க வில்லை. இதைக் கண்ட உமர் (ரழி) அவர்களின் கண்கள் கண்ணீரால் பெருகின. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் கேட்டார்கள்: 'உமரே! நீர் ஏன் அழுகிறீர்?' அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! பாரசீக மன்னன் கிஸ்ராவும் ரோமானிய மன்னன் சீசரும் சகல ஆடம்பர வசதிகளுடன் வாழ்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் தனது படைப்புகளிலேயே தேர்ந் தெடுத்த உற்ற நண்பரான தாங்களோ இத்தகைய நிலையில் இருக்கிறீர்களே!" என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்  கூறினார்கள்: "கத்தாபின் மகனே! உமக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறதா? அவர்கள் தங்க ளுக்குரிய நல்லவைகளை இவ்வுலக வாழ்க்கை யிலேயே அவசரமாகப் பெற்றுக் கொண்ட சமூகத் தினர் ஆவர்."

இவ்வாறாக, உலக சுகபோகங்களை அடையும் ஆற்றல் இருந்த போதிலும், இவ்வுலக ஆடம்பரங் கள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் மிகவும் பற்றற்றவர்களாகவே இருந்தார்கள். உலகச் செல் வங்களில் ஏதேனும் கிடைத்தால் கூட, அதனை அல்லாஹ்வின் அடியார்களுக்காக இங்கும் அங்குமாகச் செலவிட்டு விடுவார்கள். மறுநாளுக் காக எதனையும் தமக்கெனச் சேமித்து வைக்க மாட்டார்கள்.

الحمدلله

  

 

6. Quran verse and the related Hadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ 


وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَيٰوةِ الدُّنْيَا ۙ لِنَفْتِنَهُمْ فِيْهِ‌  وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَّاَبْقٰى

And do not extend your eyes toward that by which We have given enjoyment to [some] categories of them, [its being but] the splendor of worldly life by which We test them. And the provision of your Lord is better and more enduring.  [20:131]

Ibn Khathir in his thafsir writes this hadlth as an example from the life of Prophet (SAW):

Umar bin Al-Khattab (RA) entered upon the Messenger of Allah (SAW) while he was in the small room in which he had separated himself from his wives after he had vowed to stay away from them. When he came in, he saw the Prophet (SAW) lying down upon a sandy straw mat.

There was nothing in the room except a pile of sant tree pods and some hanging equipment. `Umar's eyes filled with tears (upon seeing this), so the Messenger of Allah (SAW) asked t him, 'What makes you cry, O Umar?'. He replied, "O Messenger of Allah (SAW), verily Kisra and Caesar are living in their luxurious conditions, yet you are the chosen Friend of Allah amongst His creation" The Prophet said, "Do you have doubt, O son of Al-Khattab - Those people have had their good hastened for them in the life of this world." (Sahih Muslin 1496a)

Further he writes: If the  Prophet (SAW) acquired anything of worldly treasures he would spend it on this and that for the servants of Allah. He would never save anything for himself for the next day.

الحمدلله

Sunday, August 2, 2026

 

5 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ

உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக!   மேலும், அதன் மேல் உறுதியும் கொண்டிருப்பீராக! (அல்குர்ஆன் : 20:132)

அப்துல்லாஹ் பின் புரைதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நமக்கும் (முஸ்லிம்களுக் கும்) அவர்களுக்கும் (நிராகரிப்பாளர்களுக்கும்) இடையேயுள்ள உடன்படிக்கை தொழுகையாகும். எனவே, எவர் அதனை விட்டுவிடுகிறாரோ, அவர் (நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து) நிராக ரித்துவிட்டார்.'” ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ் ஸலாம் பதிப்பு) [சுனன் இப்னுமாஜா : 1079]

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக தமீம் தாரி (ரழி) பதிவு செய்துள்ளார்: மறுமை நாளில் ஓர் அடியான் கணக்குக் கேட்கப்படும் செயல்களில் முதன்மையானது அவனது தொழு கையாகும். அவன் அதை முழுமையாக நிறை வேற்றியிருந்தால், (அவனுடைய உபரியான தொழுகைகள்) அவனுக்கு உபரியாகவே (நஃபிலாகவே)ப் பதிவு செய்யப்படும். அவன் அதை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றால், அல்லாஹ் தன் வானவர்களிடம், ‘என் அடியானுக்கு ஏதேனும் உபரியான (நஃபில்) தொழுகை உள்ளதா எனப் பாருங்கள்?’ என்று கூறுவான். (அப்படி இருந்தால்), ‘அவன் கடமை யான தொழுகையில் குறை வைத்ததை, இதைக் கொண்டு பூர்த்தி செய்யுங்கள்’ என்று கூறுவான். பிறகு மற்ற செயல்களும் இவ்வாறே கணிக்கப் படும்.” ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு) [சுனன் இப்னுமாஜா : 1426]

الحمدلله


 5. Quran verse and the related Ahadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِمٌ


Instruct your people to   establish Salah, and be steady in performing  it.  [20:132]

‘Abdullah bin Buraidah (RA) narrated that his father said: “The Messenger of Allah (SAW) said: ‘The covenant that distinguishes between us and them is prayer (Salah); so whoever leaves it, he has committed Kufr. ’” [Sunan Ibn Majah, 1079]

It was narrated from Tamim Dari  (RA) that the Prophet (SAW) said: “The first thing for which a person will be brought to account on the Day of Resurrection will be his prayer. If it is complete, then the voluntary (prayers) will also be recorded for him (as an increase). If it is not complete then Allah will say to His angels: ‘Look and see whether you find any voluntary prayers for My slave, and take them to make up what is lacking from his obligatory prayers.’ Then all his deeds will be reckoned in like manner.” [Sunan Ibn Majah, 1426]

الحمدلله 


Thursday, July 30, 2026

 

4 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ


وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَا اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْم

நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 64:11)

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள்: "பலவீனமான இறைநம்பிக்கையாளரை விட வலிமையான இறைநம்பிக்கையாளர் (ஈமானி லும், உடலிலும், நற்செயல் களிலும்) சிறந்தவரும், அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானவரும் ஆவார். எனினும், இருவரிடமும் நன்மை இருக்கிறது. உங்களுக்குப் பயனளிப்பதில் (இம்மைக்கும் மறுமைக்கும்) முயற்சி செய்யுங்கள், அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள், மேலும் (எந்த ஒரு நற்செயலிலும்) தளர்ச்சி அடை யாதீர்கள். உங்களுக்கு ஏதேனும் (துன்பமோ, இழப்போ) ஏற்பட்டால், "நான் அப்படிச் செய்தி ருந்தால் (இது நடந்தி ருக்காதே)..." என்று கூறாதீர்கள், மாறாக "கத்(த்)தரல்லாஹு வமா ஷாஅ ஃபஅல (அல்லாஹ் விதித்துவிட்டான், அவன் நாடியதைச் செய்தான்)" என்று கூறுங்கள். ஏனெனில், '...இருந்தால்' என்ற சொல் ஷைத்தா னின் செயல்களுக்கு (வருத்தம், மனக்குறை, அல்லாஹ்வின் விதியை மறுத்தல் போன்ற வற்றுக்கு) வழி திறக்கிறது." [சுனன் இப்னுமாஜா : 79]

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சோதனையின் கடுமையிலிருந்தும், துர்பாக்கியம் (நம்மை) வந்தடைவதிலிருந்தும், விதியின் கெடுதியி லிருந்தும், எதிரிகள் (நம் துன்பத்தைக் கண்டு) மகிழ்வதிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்."[ஹதீஸ் தரம் : ஸஹீஹ்; ஸஹீஹுல் புகாரி : 6616]

الحمدلله

 

  7 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்: السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ   ‏ ٱلَّذِي...