Monday, August 17, 2026

 

11. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ


 

وَيَدْعُ ٱلْإِنسَـٰنُ بِٱلشَّرِّ دُعَآءَهُۥ بِٱلْخَيْرِ ۖ وَكَانَ ٱلْإِنسَـٰنُ عَجُولًۭا

மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த் திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக் காரனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 17:11)

எல்லாம் வல்ல அல்லாஹ் எப்போதும் அனைவரின் பிரார்த்தனை களையும் செவியுறுகின்றான், ஆனால் அவனிடம் செய்யப்படும் பிரார்த்த னைகளை அதிகமாக ஏற்றுக்கொள்ளும் சில நேரங்களை அவன் நிர்ணயித்துள்ளான். எனவே, ஒருவர் தன்னையோ, தன் பிள்ளைகளையோ, தன் தொழிலையோ சபிக்கக் கூடாது. ஏனெனில், அல்லாஹ்வால் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப் படும் நேரத்தில் அவ்வாறு செய்தால், ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் அதற்காக வருந்த நேரிடும்.

மனிதன் சில நேரங்களில் தனக்கு எதிராகவோ, தனது பிள்ளைகளுக்கு எதிராகவோ அல்லது தனது செல்வத்திற்கு எதிராகவோ தீமை வேண்டிப் பிரார்த்திக்கிறான். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேரிட வேண்டும் என்றோ, அவர்கள் இறந்துவிட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும் என்றோ அவன் சாபமிட்டுப் பிரார்த்திக்கிறான். அல்லாஹ் அவனது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டால், அதன் காரணமாக அவன் அழிக்கப் பட்டுவிடுவான்.

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களுக்கு எதிராகவோ, உங்கள் பிள்ளைக ளுக்கு எதிராகவோ, அல்லது உங்கள் செல்வங்க ளுக்கு எதிராகவோ (கேடு கேட்டுப்) பிரார்த்திக் காதீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் ஒரு நேரத்துடன் ஒத்துப்போய்விடாதீர்கள், அதில் (அவனிடம்) அருட்கொடைகள் கேட்கப்பட்டு (அவை) ஏற்றுக் கொள்ளப்படும். (அப்போது) அவன் உங்களுக்கும் (உங்கள் தீய பிரார்த்தனைக்கு) பதிலளித்துவிடக் கூடும்.” [ரியாதுஸ் ஸாலிஹீன், 1497

முஸ்லிமின் அறிவிப்பில் உள்ளதாவது: "ஒரு அடியான் பாவமான காரியத்திற்கோ அல்லது உறவுகளைத் துண்டிக்கும் காரியத்திற்கோ பிரார்த்தனை செய்யாமலும், அவன் அவசரப் படாமலும் இருக்கும் வரை அவனது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கொண்டே இருக்கும்." "அல்லாஹ்வின் தூதரே! அவசரப்படுதல் என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்: "(பிரார்த்தனை செய்பவர்) 'நான் பிரார்த்தனை செய்தேன், மீண்டும் பிரார்த்தனை செய்தேன்; ஆனால் எனக்குப் பதிலளிக்கப் பட்டதை நான் காணவில்லை' என்று கூறி, அந்த நிலையில் விரக்தியடைந்து பிரார்த்தனை செய்வதைக் கைவிடுவதாகும்." [ரியாதுஸ் ஸாலிஹீன், 1499] (தஃப்சீர் இப்னு கஸீர் : 17:11)

ஆதமின் மகனை இவ்வாறு செய்யத் தூண்டுவது அவனது பதற்றமும் அவசரமுமே ஆகும்  : மேலும் அல்லாஹ் கூறுகிறான், மனிதன் அவசரக்கார னாக இருக்கிறான்.

சல்மான் அல்-ஃபாரிஸி (ரழி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் ஆதம் (அலை) அவர்களின் வரலாற்றைக் குறிப்பிட்டுள்ளனர். ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டபோது, ஆதம் (அலை) அவர்களின் ஆன்மா கால்களை அடைவதற்கு முன்பே அவர்கள் எழுந்திருக்க முயன்றார்கள். அவர்களுக்குள் ஆன்மா ஊதப் பட்டபோது, அது தலையிலிருந்து கீழ்நோக்கி உடலுக்குள் நுழைந்தது. அது மூளையை எட்டிய போது அவர்கள் தும்மினார்கள்; பிறகு "அல்ஹம்து லில்லாஹ்" (புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே) என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ், "ஆதமே! உமது இறைவன் உமக்குக் கருணை புரிவானாக" என்று கூறினான். ஆன்மா கண்களை எட்டிய போது அவர்கள் சுவர்க்கத்தின் கனிகளைப் பார்த்தார்கள். அது வயிற்றை எட்டியபோது உணவை விரும்பினார்கள். ஆன்மா கால்களை அடைவதற்கு முன்பே அவர்கள் சுவர்க்கத்தின் கனிகளைப் பறிப்பதற்காக அவசரமாக எழுந் திருக்க முயன்றார்கள், ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையே அல்லாஹ், "மேலும், மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்" என்று கூறுகிறான்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நன்மைக்காக நாம் செய்யும் துஆக்களுக்குப் பதிலளிப்பது போல், தீமைக்காக நாம் செய்யும் துஆக்களுக்கு அல்லாஹ் பதிலளிப்பதில்லை என்பது அவனது கருணையே. ஏனெனில், அவ்வாறு செய்தால் நாம் அழிக்கப்படுவோம்.

الحمدلله


 

11. Quran verse and the related Ahadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


وَيَدْعُ ٱلْإِنسَـٰنُ بِٱلشَّرِّ دُعَآءَهُۥ بِٱلْخَيْرِ ۖ وَكَانَ ٱلْإِنسَـٰنُ عَجُولًۭا

And man supplicates for evil [when angry] as he supplicates for good, and man is ever hasty. (Al Quran, 17:11)

Almighty Allah always listens to everyone's prayer but He has fixed certain times when He grants more prayers addressed to Him. Therefore, one should never curse oneself or one's own children or one's own business, etc., lest this is done at the time when prayers are accepted by Allah and then one has to regret it all his life.

Allah tells us about how he sometimes prays against himself or his children or his wealth, praying for something bad to happen for them, or for them to die or be destroyed, invoking curses, etc. If Allah were to answer his prayer, he would be destroyed because of  it.

Jabir (RA) narrated that the Messenger of Allah (SAW) said, “Do not supplicate against yourselves, do not supplicate against your children, and do not supplicate against your property, lest it coincides with an hour in which Allah is asked for something and He answers you.” [Riyad as-Salihin, 1497]

The narration of Muslim is: "The supplication of a slave continues to be granted as long as he does not supplicate for a sinful thing or for something that would cut off the ties of kinship and he does not grow impatient." It was said: "O Messenger of Allah! What does growing impatient mean?" He (SAW) said, "It is one's saying: 'I supplicated again and again but I do not think that my prayer will be answered.' Then he becomes frustrated (in such circumstances) and gives up supplication altogether." [Riyad as-Salihin, 1499]

What makes the son of Adam do that is his anxiety and haste. Allah says: “Man is ever hasty”.

Salman Al-Farisi and Ibn `Abbas mentioned the story of Adam, when he wanted to get up before his soul reached his feet. When his soul was breathed into him, it entered his body from his head downwards. When it reached his brain he sneezed, and said, "Al-Hamdu Lillah" (praise be to Allah), and Allah said, "May your Lord have mercy on you, O Adam." When it reached his eyes, he opened them, and when it reached his body and limbs he started to stare at them in wonder. He wanted to get up before it reached his feet, but he could not. He said, "O Lord, make it happen before night comes."

Ibn Abbas said that it is a mercy from Allah that He does not answer our du’as for evil as He does our du’as for good, because otherwise we would be destroyed.

الحمدلله

Tuesday, August 11, 2026

 

10. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ


 

فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَٱعْتَصِمُوا۟ بِٱللَّهِ هُوَ مَوْلَىٰكُمْ ۖ  فَنِعْمَ ٱلْمَوْلَىٰ وَنِعْمَ ٱلنَّصِيرُ

நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன். [22:78]

இது  ஸூரதுல் ஹஜ்ஜின் கடைசி வசனம், ஸஜ்தா வசனம். உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்ததாகக் கூறப்படுகிறது, “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஸூரதுல் ஹஜ் இரண்டு ஸஜ்தாக்களைக் கொண்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, எவர் அவ்விரண்டையும் செய்யவில்லையோ அவர் அந்த வசனங்களை ஓத வேண்டாம்.ஜாமிஉத் திர்மிதீ, 578]

அல்லாஹ் உங்களை மற்ற எல்லா சமுதாயங்களை விடவும் தேர்ந்தெடுத்துள்ளான்; மேலும் உன்னதமான தூதரையும் மகத்தான சட்டங்களையும் கொண்டு உங்களை மேன்மைப்படுத்தி, ஆசீர்வதித்து, கண்ணியப் படுத்தியுள்ளான். அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அவனுக்கு அஞ்சுங்கள்.

உங்களால் தாங்க முடியாத எதையும் உங்கள் மீது அல்லாஹ் சுமத்தவில்லை. உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எதையும் அவன் கடமையாக்க வில்லை; அதிலிருந்து வெளியேற ஒரு வழியை அவன் உங்களுக்கு ஏற்படுத்தித் தந்தாலே தவிர. மிக முக்கியமான கடமைகளான தொழுகையை முறையாக நிலைநாட்டுவதும் ஜகாத் வழங்குவதும் ஆகும்.

தொழுகை (ஸலாஹ்), ஒருவர் ஊரில் இருக்கும் போது நான்கு ரக்அத்களாகக் கடமையாக்கப் பட்டுள்ளது; ஆனால் பயணத்தின்போது இது இரண்டு ரக்அத்களாகச் சுருக்கப்படுகிறது. அச்சமான நேரங்களில் ஒரு ரக்அத் மட்டுமே கடமையாகும். ஒருவர் நடக்கும்போதோ அல்லது சவாரி செய்யும்போதோ, கிப்லாவை நோக்கியோ அல்லது வேறு திசையிலோ தொழலாம். பயணத் தின்போது உபரியான (சுன்னத்) தொழுகை களைத் தொழும்போது, கிப்லாவை நோக்கியோ அல்லது நோக்காமலோ தொழலாம். ஒரு நோயாளி தொழுகையின் போது நிற்க வேண்டிய கட்டாயமில்லை; அவர் உட்கார்ந்து தொழலாம், அதையும் செய்ய முடியாவிட்டால் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு தொழலாம். கடமையான தொழுகைகள் மற்றும் பிற கடமைகளில் இது போன்ற இன்னும் பல விதிவிலக்குகளும் சலுகைகளும் உள்ளன.

எனவே தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் எளிமையான ஹனீஃபிய்யா மார்க்கத்துடன் அனுப்பப்பட்டுள் ளேன். மேலும், நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரழி) மற்றும் அபூ மூஸா (ரழி) ஆகியோரை யமனுக்கு ஆளுநர்களாக அனுப்பியபோது அவர்களிடம் கூறினார்கள்: நற்செய்தி கூறுங்கள், மக்களை விரட்டியடிக் காதீர்கள். எளிதாக்குங்கள், கடினமாக்காதீர்கள்.

ஜகாத் என்பது அல்லாஹ்வின் படைப்புகளுக்குச் செய்யும் ஒரு பேருதவியாகும். ஏழைகளுக்கும் பலவீனமானவர்களுக்கும் உதவுவதற்காக செல்வந்தர்கள் தங்கள் செல்வத்திலிருந்து ஒரு சிறு பகுதியை ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். ஜகாத் என்னும் தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப் படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர் களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் [9:60]

அல்லாஹ்வின் உதவியையும் ஆதரவையும் தேடுங்கள், அவன் மீது முழு நம்பிக்கை வையுங் கள், அவனிடமிருந்து வலிமையைப் பெறுங்கள். அவன் உங்கள் பாதுகாவலன் மற்றும் உதவியா ளன்; உங்கள் எதிரிகளுக்கு எதிராக உங்களை வெற்றிபெறச் செய்பவன் அவனே.

الحمدلله

 

 

10. Quran verse and the related Ahadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

  


فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَٱعْتَصِمُوا۟ بِٱللَّهِ هُوَ مَوْلَىٰكُمْ ۖ فَنِعْمَ ٱلْمَوْلَىٰ وَنِعْمَ ٱلنَّصِيرُ

So establish prayer and give zakāh and hold fast to Allāh. He is your protector; and excellent is the protector, and excellent is the helper. (22:78)                                                                  

This ayath is the last ayath of Surathul Hajj. It was reported from `Uqbah bin `Amir (RA) that the Prophet (SAW) said: ‘Surat Al-Hajj has been blessed with two Sajdahs, so whoever does not prostrate them should not read them’.[ Jami` at-Tirmidhi 578]

Allah says, `O Ummah of Islam, Allah has selected you and chosen you over all other nations, and has favored you and blessed you and honored you with the noblest of Messengers and the noblest of Laws.'

Allahuthala has not laid upon you in religion any hardship. He has not given you more than you can bear and He has not obliged you to do anything that will cause you difficulty except that He has created for you a way out. So fear Allah, in the way He deserves. The Salah, which is the most important pillar of Islam after the two testimonies of faith, is obligatory, four Rak`ahs when one is settled, which are shortened to two Rak`ah when one is traveling. According to some Imams, only one Rak`ahs is obligatory at times of fear, as was recorded in the Hadith. A person may pray while walking or riding, facing the Qiblah or otherwise. When praying optional prayers while traveling, one may face the Qiblah or not. A person is not obliged to stand during the prayer if he is sick; the sick person may pray sitting down, and if he is not able to do that then he may pray lying on his side. And there are other exemptions and dispensations which may apply to the obligatory prayers and other duties. So the Prophet said: “I have been sent with the easy Hanifi way. And he said to Mu`adh (RA) and Abu Musa (RA) when he sent them as governors to Yemen: “Give good news and do not repel them. Make things easy for the people and do not make the things difficult for them’

Zakath is a form of beneficence towards Allah's creatures, whereby He has enjoined upon the rich to give a little of their wealth to the poor each year, to help the weak and needy. Zakāth expenditures are only for the poor and for the needy and for those employed for it1 and for bringing hearts together [for Islām] and for freeing captives [or slaves] and for those in debt and for the cause of Allāh and for the [stranded] traveler - an obligation [imposed] by Allāh [9:60]

Seek the help and support of Allah and put your trust in Him, and get strength from Him. He is your Protector and your Helper, He is the One Who will cause you to prevail against your enemies.

الحمدلله

Monday, August 10, 2026

 

9. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான  விளக்கம் :

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ


وَكَمْ أَهْلَكْنَا مِنَ ٱلْقُرُونِ مِنۢ بَعْدِ نُوحٍۢ ۗ وَكَفَىٰ بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًۢا بَصِيرًۭا 

நூஹுக்குப்பின் எத்தனை தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்? இன்னும், தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிபவனாகவும், பார்ப்பவனாகவும் உமது இறைவன் போதுமானவன்

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "ஆதம் (அலை) அவர்களுக்கும் நூஹ் (அலை) அவர்களுக்கும் இடையே பத்து தலைமுறைகள் இருந்தன. அந்த எல்லாக் காலத்திலும் மனிதர்கள் இஸ்லாத்தையே பின்பற்றினார்கள்." " நிராகரிப்பாளர்(குறைஷி)களே! நீங்கள் அவர்களை விட அல்லாஹ்வுக்கு அதிகப் பிரியமானவர்கள் அல்ல. மேலும் நீங்கள் தூதர்களிலேயே மிகவும் கண்ணியமான வரையும், படைப்புகளிலேயே மிகச் சிறந்தவரையும் நிராகரித்து விட்டீர்கள். எனவே, நீங்கள் தண்டனைக்கு மிகவும் தகுதியானவர்கள்" என்பதே (இந்த வசனத்தின்) பொருளாகும்.

الحمدلله

 

9. Quran verse and the related information:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

 


وَكَمْ أَهْلَكْنَا مِنَ ٱلْقُرُونِ مِنۢ بَعْدِ نُوحٍۢ ۗ وَكَفَىٰ بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًۢا  بَصِيرًۭا                                                   

Imagine˺ how many peoples We have destroyed after Noah! And sufficient is your Lord as All-Aware and All-Seeing of the sins of His servants.    

Warning the disbelievers of the Quraysh for rejecting His Messenger Muhammad ﷺ, Allah says that He destroyed other nations who rejected the Messengers after Nuh. This indicates that during the centuries between Adam and Nuh, humans were following Islam, as Ibn `Abbas said: "Between Adam and Nuh there were ten generations, during all of which humans were following Islam." The meaning (of the Ayah) is: "You disbelievers are not more dear to Allah than they were, and you have rejected the most noble of the Messengers and the best of creation, so you are more deserving of punishment."

الحمدلله                            

 

8 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ ي                                 

ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கி றோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் - திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள் வான். “நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதி காரியாக இருக்கப் போதும்” (என்று அப்போது நாம் கூறுவோம்) (17: 13 & 14). 

மனிதனுடைய செயல்கள் பதிவு செய்யப் படுகின்றன:

நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப் பவனாகவே இருக்கின்றான்.  [4:1]

நிச்சயமாக, உங்கள் மீது பாதுகாவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். [كِرَامًۭا كَـٰتِبِينَ] நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.” (82:10 -12).

 அவர்களுடைய இரகசியத்தையும், அவர்கள் தனித்திருந்து கூடிப் பேசுவதையும் நாம் கேட்கவில்லையென்று எண்ணிக் கொண்டார் களா? அல்ல: மேலும் அவர்களிடமுள்ள நம் தூதர்கள் (எல்லாவற்றையும்) எழுதிக் கொள் கிறார்கள்” (43:80).

நிச்சயமாக நீங்கள் சூழ்ச்சி செய்து திட்டமிடு வதை யெல்லாம் எம் தூதர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.” (10:21).

 ஒவ்வொரு ஆத்மாவுக்கும் ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை” (86:4).

“(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெ ழுதும் போது- கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை” (50:17-18).

அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது. சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) பதிவு செய்யப்பட்டிருக்கும்”. (54: 52 & 53).

நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்” [45:29]

ஆதமின் புதல்வர்களின் செயல்கள், அவை பெரியவையாக இருந்தாலும் சரி சிறியவையாக இருந்தாலும் சரி, இரவும் பகலும், காலையும் மாலையும் பதிவு செய்யப்பட்டு ஒரு புத்தக வடிவில் பாதுகாக்கப்படுகின்றன.

பதிவு செய்யும் வானவர்களின் பெயர்கள் ‘ரக்கீப்’ மற்றும் ‘அதீத்’ ஆகும். இப்னு கதிர் கூறுகிறார், அஹ்னஃப் இப்னு கைஸின் அறிவிப்பின்படி, வலதுபுறத்தில் அமர்ந்திருக்கும் வானவர் நற் செயல்களைப் பதிவு செய்கிறார், மேலும் அவர் இடதுபுறத்தில் உள்ள வானவருக்கு மேற்பார்வை யாளராகவும் இருக்கிறார். ஒரு நபர் பாவம் செய் தால், வலதுபுறத்தில் உள்ள வானவர் இடதுபுறத் தில் உள்ளவரிடம், "இதை இப்போது எழுத வேண்டாம்; அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்; ஒருவேளை அவர் மனம் திருந்தலாம்; அவர் அவ்வாறு செய்தால், அதை விட்டுவிடுங்கள்; இல்லையெனில் அதை உங்கள் நற்செயல் பதிவேட்டில் பதிவு செய்யுங்கள்" என்று கூறுகிறார்.

மாமர் கூறியதாக: அல்-ஹஸன் பதிவு செய் கிறார், ஆதமின் மகனே, உனக்காக உன் புத்தகம் திறக்கப்பட்டுள்ளது. மேலும், உன்னுடன் இரண்டு கண்ணியமிக்க வானவர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர்; ஒருவர் உன் வலப்புறத்திலும், மற்றொருவர் உன் இடப்புறத்திலும். உன் வலப்புறத்தில் இருப்ப வர் உன் நற்செயல்களைப் பதிவு செய்கிறார், உன் இடப்புறத்தில் இருப்பவர் உன் தீய செயல்களைப் பதிவு செய்கிறார். எனவே, நீ மரணிக்கும் வரை, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ, நீ விரும்பியதைச் செய். பின்னர், நான் உன் புத்தகத்தை மடித்து, உன் மண்ணறையில் உன்னுடன் சேர்த்து உன் கழுத்தில் கட்டுவேன். மறுமை நாளில் நீ வெளி வரும் போது, அந்த புத்தகம் விரிந்து திறந்திருப்பதைக் காண்பாய். எனவே, உன் புத்தகத்தைக் காண். அல்லாஹ்வின் மீது ஆணையாக, உனது செயல்களுக்கு உன்னையே பொறுப்பாக்குபவன் முற்றிலும் நீதியுள்ளவனாக இருக்கிறான்.” {இப்னு கதிர், வசனம் 51:17-இன் தஃப்ஸீரில்}

மறுமை நாளில் புத்தகத்தைப் பெறுதல்:

மறுமை நாளில் அல்லாஹ் கூறுவான்: “இது உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்மு டைய புத்தகம்; [45:29]. “நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னு டைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்” (17:14)

இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், “எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே!” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான் [18:49].

 அவன் பாக்கியவான்களில் ஒருவனாக இருந்தால் அவனுக்கு புத்தகம் அவனது வலது கையிலும், அவன் கேவலமானவர்களில் ஒருவனாக இருந்தால் அவனது இடது கையிலும் வழங்கப்படும்.

வலக்கையில் கொடுக்கப்படுபவர்கள்:

எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), “இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்” எனக் கூறுவார். “நிச்சயமாக, நான் என்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந் தேன்.” ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கை யில் - உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார். (69:19-22). அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (17:71), ஆகவே எவனுடைய பட்டோலை அவனு டைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ, அவன் சுலபமான விசாரணையாக விசாரிக் கப்படுவான். இன்னும், தன்னைச் சார்ந்தோரி டமும் மகிழ்வுடன் திரும்புவான். (84:7-9).

இடக்கையில் கொடுக்கப்படுபவர்கள்:

எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப் படாமல் இருந்திருக்க வேண்டுமே! “அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? “என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! “என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்). (அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.” “பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள். பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” (என்று உத்தரவிடப்படும்).  (69:25 - 32).

முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுபவர்கள்:

ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-அவன் (தனக்குக்) “கேடு” தான் எனக் கூவியவ னாக- நரகத்தில் புகுவான். நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான். நிச்சயமாக, தான் (இறைவன் பால்) “மீளவே மாட்டேன்” என்று எண்ணியிருந்தான். அப்படியல்ல; நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்” (84:10 - 15).

ஆஹதீஸ்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:  நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நேரடியாகக் கிடைத்த செய்தியாக) அறிவித்துக் கூறினார்கள்: "நிச்சயமாக அல்லாஹ் நற்செயல் களையும் தீயசெயல்களையும் எழுதினான். (அவற்றின் கூலிகளையும் தண்டனைகளையும் விதித்தான்); பிறகு அதைத் தெளிவுபடுத்தினான். ஆகவே, ஒருவர் ஒரு நற்செயலைச் செய்ய எண்ணி, அதை அவர் செய்யாவிட்டால், அல்லாஹ் அதைத் தன்னிடம் ஒரு முழுமையான நற்செய லாகப் பதிவு செய்வான். அவர் அதைச் செய்ய எண்ணி, அதனைச் செய்துவிட்டால், அல்லாஹ் அதைத் தன்னிடம் பத்து நற்செயல்கள் முதல் எழுநூறு மடங்குகள் வரையிலும், இன்னும் பன்மடங்கு அதிகமாகவும் பதிவு செய்வான். மேலும், ஒருவர் ஒரு தீயசெயலைச் செய்ய எண்ணி, அதை அவர் செய்யாவிட்டால் (அல்லாஹ் வின் பயத்தினால் அல்லது அதிலிருந்து விலகிய தால்), அல்லாஹ் அதைத் தன்னிடம் ஒரு முழுமை யான நற்செயலாகப் பதிவு செய்வான். அவர் அதைச் செய்ய எண்ணி, அதனைச் செய்து விட்டால், அல்லாஹ் அதை ஒரேயொரு தீய செயலாகப் பதிவு செய்வான்."  [ஸஹீஹுல் புகாரி, 6491 & ரியாதுஸ் ஸாலிஹீன் 11]

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள், "அல்லாஹ் கூறுகிறான், 'என் அடியான் ஒரு தீய காரியத்தைச் செய்ய நாடினால், (வானவர் களே!) அவன் அதைச் செய்யாத வரை நீங்கள் அதைப் பதிவு செய்யாதீர்கள்; அவன் அதைச் செய்துவிட்டால், பிறகு அதை உள்ளபடியே (ஒரு தீமையாகவே) பதிவு செய்யுங்கள். ஆனால் அவன் எனக்காக அதைச் செய்வதிலிருந்து விலகிக் கொண்டால், பிறகு அதை (அவனுடைய கணக் கில்) ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். (மாறாக) அவன் ஒரு நற்செயலைச் செய்ய நாடி, ஆனால் அதைச் செய்யவில்லை என்றால், பிறகு (அவனுடைய கணக்கில்) ஒரு நன்மையை எழுதுங்கள். மேலும் அவன் அதைச் செய்தால், பிறகு அதை அவனுக்காக (அவனுடைய கணக்கில்) பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு மடங்கு வரை எழுதுங்கள்” [ஸஹீஹுல் புகாரி,  7501 & ஸஹீஹ் முஸ்லிம்,128a]

மனிதனின் செயல்கள் அல்லாஹ்வின் முன் வைக்கப்படுகின்றன:

தினமும்:

அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார் கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பகலிலோ இரவிலோ இரு பாதுகாவலர்கள் (பதிவு செய்யும் வானவர்கள்) தாம் பதிவு செய்தவற்றை அல்லாஹ்விடம் உயர்த்தும் போது, அந்த ஏட்டின் ஆரம்பத்திலும் அதன் முடிவிலும் அல்லாஹ் நன்மையைக் கண்டால், உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுவான்: ‘அந்த ஏட்டின் இரு முனைகளுக்கும் இடைப்பட்டவற்றை என் அடியானுக்கு நான் மன்னித்துவிட்டேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்.’ ”[ஜாமிஉத் திர்மிதீ, 981]

வாரம் இரு முறை: 

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "திங்கள் மற்றும் வியாழக் கிழமை களில் செயல்கள் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக் கப்படுகின்றன. மேலும், நான் நோன்பு நோற்றி ருக்கும் நிலையில் எனது செயல்கள் சமர்ப்பிக்கப் படுவதை நான் விரும்புகிறேன்."  [ஜாமிஉத் திர்மிதீ, 747]

நியாயத்தீர்ப்பு நாளில்:

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர் புன்னகைத்தார். அவர் கூறினார்: “நான் ஏன் புன்னகைக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா?” நாங்கள் கூறினோம்: அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவார்கள். அவர் கூறினார்: “ஒரு அடியான் தன் இறைவனுடன் நடத்தும் உரையாடலின் காரணமாகவே. அவன் கூறுவான்: ‘இறைவா! அநீதியிலிருந்து எனக்குப் பாதுகாப்பு அளிப்பதாக நீ எனக்கு வாக்குறுதி அளிக்கவில் லையா?’ அவன் கூறுவான்: ‘ஆம்.’ அவன் கூறு வான்: ‘எனக்கு எதிராக என்னைத்தவிர வேறு எந்த சாட்சியையும் நான் ஏற்கமாட்டேன்.’ அவன் கூறுவான்: ‘இன்று உனக்கு எதிராக நீயே சாட்சி யாகப் போதுமானவன், மேலும் பதிவுசெய்யும் இரு வானவர்களின் சாட்சியும் போதுமானதே.’ பிறகு அவனது வாயில் ஒரு முத்திரை இடப்பட்டு, அவனது அங்கங்களிடம் ‘பேசு’ என்று கூறப்படும். அவை அவனது செயல்களைப் பற்றிப் பேசும். பிறகு அவன் பேச அனுமதிக்கப்படுவான். அவன் கூறுவான்: ‘தொலைந்து போங்கள்! உங்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! உங்கள் சார்பாகவே நான் வாதாடினேன்.’ [ஸஹீஹ் முஸ்லிம் 2969]

ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அல்-மாஸினி அவர்கள் கூறினார்கள்: நான் இப்னு உமர் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து கொண்டி ருந்தபோது, ஒரு மனிதர் எதிரில் வந்து, "அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து 'அந்-நஜ்வா' (இரகசிய சம்பாஷணை) பற்றி நீங்கள் என்ன செவியுற்றுள்ளீர்கள்?" என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன்: 'அல்லாஹ் (மறுமையில்) இறைநம்பிக்கையாளரைத் தன் அருகில் நெருக்கிக் கொண்டு, அவர் மீது தனது திரையைப் போட்டு அவரை மறைத்துக் கொள்வான். பிறகு அவரிடம், 'இந்த பாவத்தை நீ அறிவாயா? இந்த பாவத்தை நீ அறிவாயா?' என்று கேட்பான். அதற்கு அவர், 'ஆம், என் இறைவா!' என்பார். அவர் (தம் பாவங்களை ஒவ்வொன்றாக) ஒப்புக்கொள்ளும் வரை, தான் அழிந்துவிட்டதாகத் தனக்குள்ளே எண்ணிக்கொள்ளும் வேளையில், அல்லாஹ் கூறுவான்: 'உலகில் உனது பாவங்களை நான் மறைத்து வைத்திருந்தேன்; இன்று உனக்காக அவற்றை மன்னிக்கிறேன்'. பிறகு அவனது நற்செயல்களின் ஏடு அவனிடம் வழங்கப்படும். ஆனால் காஃபிர்கள் மற்றும் நயவஞ்சகர்களைப் பொறுத்தவரை, சாட்சிகள் கூறுவார்கள்: 'ஹாவூலாயி அல்லதீன கஃதபூ அலா ரப்பிஹிம், அலா லஃனத்துல்லாஹி அலழ்-ழாலிமீன்' (இவர்கள் தான் தங்கள் இறைவனுக்கு எதிராகப் பொய் சொன்னவர்கள். அறிந்து கொள்ளுங்கள்! அநியா யக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டா கட்டும்!)" [ஸஹீஹுல் புகாரி, 2441]

நற்செயல்களுக்கும் தீய செயல்களுக்கும் இடையில் சமநிலைப்படுத்துவது:

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள்: “நெருப்பு விறகை எரிப்பது போல பொறாமை நற்செயல்களை எரித்துவிடும், தண்ணீர் நெருப்பை அணைப்பது போல தர்மம் தீய செயல்களை அணைத்துவிடும். தொழுகை முஃமினின் ஒளியாகும், நோன்பு நரக நெருப்பி லிருந்து காக்கும் கேடயமாகும்.” [ஸுனன் இப்னு மாஜா 4210]

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹும்ம ஜஅல்னி மினல்-லதீன இதா அஹ்ஸனு இஸ்தப் ஷரு, வ இதா அஸஉ இஸ்தக்ஃபரு (யா அல்லாஹ், நற்செயல்கள் செய்தால் மகிழ்வோராகவும், தீய செயல்கள் செய்தால் மன்னிப்புக் கோருவோ ராகவும் என்னை ஆக்குவாயாக).” [சுனன் இப்னு மாஜா 3820]

அபூ தர் மற்றும் முஆத் பின் ஜபல் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள், "நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; தீய செயல்களைச் செய்த பிறகு நல்ல செயல்களைச் செய்யுங்கள்; முந்தையது பிந்தையதை அழித்துவிடும்; மேலும் மக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்". [ரியாத் அஸ்-ஸாலிஹீன் 61]

புத்தகத்தின் இயல்பு:

புத்தகத்தின் உண்மையான இயல்பு அல்லாஹ் வுக்கு மட்டுமே தெரியும். எழுத்தறிவற்றவரும் எழுத்தறிவு பெற்றவரும் அதைப் படிக்கத் தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.அந்த புத்தகம் அல்லது செயல்களின் பதிவேடு சாதாரண காகிதத்தால் செய்யப்பட்டிருக்காது; அது எவ்வாறு மண்ணறையில் அவருடன் சென்று, மறுமை நாள் வரை அவருடன் அங்கேயே இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வது கடினம்.

நன்மைகள்  எழுதப்படவும், பாவங்கள் அழிக்கப் படவும் கூறப்படும் திக்ர்:

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவர் 'லா இலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர்' என்று ஒரு நாளில் நூறு முறை கூறுகிறாரோ, அவருக்குப் பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமான (நன்மை) கிடைக்கும். மேலும், அவருக்காக நூறு நன்மைகள் எழுதப் படும்; அவரிடமிருந்து நூறு பாவங்கள் அழிக்கப் படும். அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (அவரைப் பாதுகாக்க) அது ஒரு அரணாக இருக்கும். இவரை விட அதிகமாக (இதே திக்ரை அல்லது வேறு திக்ர்களை) செய்த ஒருவரைத் தவிர, வேறு யாரும் இவர் கொண்டு வந்ததை விடச் சிறந்த ஒன்றை (மறுமையில் அல்லாஹ்விடம்) கொண்டு வர முடியாது." [ஸஹீஹுல் புகாரி, 6403]

الحمدلله


  11. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்: السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ   وَيَدْع...