Tuesday, August 4, 2026

6 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ

                                

‏وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَيٰوةِ الدُّنْيَا ۙ لِنَفْتِنَهُمْ فِيْهِ‌  وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَّاَبْقٰى

இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனு பவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவை யெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற் காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமை யில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலை யானதும் ஆகும். (அல்குர்ஆன் : 20:131)

 

இப்னு காதிர் தன் விளக்க உரையில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை ஹதீஸ்களிலிருந்து உதாரணமாக எழுதியுள்ளார்:

உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவியரி டமிருந்து விலகி இருப்பதாகச் சத்தியம் செய்து விட்டுத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டி ருந்த ஒரு சிறிய அறைக்குள் நுழைந்தார்கள். அவர் உள்ளே சென்றபோது, நபி (ஸல்) அவர்கள் கரடுமுரடான ஒரு பாயின் மீது படுத்திருப்பதைப் பார்த்தார். அந்த அறையில் ஒரு குவியல் கருவேல மரக் காய்களையும், தொங்கிக்கொண்டிருந்த சில தோல் பைகளையும் தவிர வேறெதுவும் இருக்க வில்லை. இதைக் கண்ட உமர் (ரழி) அவர்களின் கண்கள் கண்ணீரால் பெருகின. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் கேட்டார்கள்: 'உமரே! நீர் ஏன் அழுகிறீர்?' அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! பாரசீக மன்னன் கிஸ்ராவும் ரோமானிய மன்னன் சீசரும் சகல ஆடம்பர வசதிகளுடன் வாழ்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் தனது படைப்புகளிலேயே தேர்ந் தெடுத்த உற்ற நண்பரான தாங்களோ இத்தகைய நிலையில் இருக்கிறீர்களே!" என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்  கூறினார்கள்: "கத்தாபின் மகனே! உமக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறதா? அவர்கள் தங்க ளுக்குரிய நல்லவைகளை இவ்வுலக வாழ்க்கை யிலேயே அவசரமாகப் பெற்றுக் கொண்ட சமூகத் தினர் ஆவர்."

இவ்வாறாக, உலக சுகபோகங்களை அடையும் ஆற்றல் இருந்த போதிலும், இவ்வுலக ஆடம்பரங் கள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் மிகவும் பற்றற்றவர்களாகவே இருந்தார்கள். உலகச் செல் வங்களில் ஏதேனும் கிடைத்தால் கூட, அதனை அல்லாஹ்வின் அடியார்களுக்காக இங்கும் அங்குமாகச் செலவிட்டு விடுவார்கள். மறுநாளுக் காக எதனையும் தமக்கெனச் சேமித்து வைக்க மாட்டார்கள்.

الحمدلله

  

 

6. Quran verse and the related Hadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ 


وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَيٰوةِ الدُّنْيَا ۙ لِنَفْتِنَهُمْ فِيْهِ‌  وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَّاَبْقٰى

And do not extend your eyes toward that by which We have given enjoyment to [some] categories of them, [its being but] the splendor of worldly life by which We test them. And the provision of your Lord is better and more enduring.  [20:131]

Ibn Khathir in his thafsir writes this hadlth as an example from the life of Prophet (SAW):

Umar bin Al-Khattab (RA) entered upon the Messenger of Allah (SAW) while he was in the small room in which he had separated himself from his wives after he had vowed to stay away from them. When he came in, he saw the Prophet (SAW) lying down upon a sandy straw mat.

There was nothing in the room except a pile of sant tree pods and some hanging equipment. `Umar's eyes filled with tears (upon seeing this), so the Messenger of Allah (SAW) asked t him, 'What makes you cry, O Umar?'. He replied, "O Messenger of Allah (SAW), verily Kisra and Caesar are living in their luxurious conditions, yet you are the chosen Friend of Allah amongst His creation" The Prophet said, "Do you have doubt, O son of Al-Khattab - Those people have had their good hastened for them in the life of this world." (Sahih Muslin 1496a)

Further he writes: If the  Prophet (SAW) acquired anything of worldly treasures he would spend it on this and that for the servants of Allah. He would never save anything for himself for the next day.

الحمدلله

Sunday, August 2, 2026

 

5 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ

உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக!   மேலும், அதன் மேல் உறுதியும் கொண்டிருப்பீராக! (அல்குர்ஆன் : 20:132)

அப்துல்லாஹ் பின் புரைதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நமக்கும் (முஸ்லிம்களுக் கும்) அவர்களுக்கும் (நிராகரிப்பாளர்களுக்கும்) இடையேயுள்ள உடன்படிக்கை தொழுகையாகும். எனவே, எவர் அதனை விட்டுவிடுகிறாரோ, அவர் (நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து) நிராக ரித்துவிட்டார்.'” ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ் ஸலாம் பதிப்பு) [சுனன் இப்னுமாஜா : 1079]

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக தமீம் தாரி (ரழி) பதிவு செய்துள்ளார்: மறுமை நாளில் ஓர் அடியான் கணக்குக் கேட்கப்படும் செயல்களில் முதன்மையானது அவனது தொழு கையாகும். அவன் அதை முழுமையாக நிறை வேற்றியிருந்தால், (அவனுடைய உபரியான தொழுகைகள்) அவனுக்கு உபரியாகவே (நஃபிலாகவே)ப் பதிவு செய்யப்படும். அவன் அதை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றால், அல்லாஹ் தன் வானவர்களிடம், ‘என் அடியானுக்கு ஏதேனும் உபரியான (நஃபில்) தொழுகை உள்ளதா எனப் பாருங்கள்?’ என்று கூறுவான். (அப்படி இருந்தால்), ‘அவன் கடமை யான தொழுகையில் குறை வைத்ததை, இதைக் கொண்டு பூர்த்தி செய்யுங்கள்’ என்று கூறுவான். பிறகு மற்ற செயல்களும் இவ்வாறே கணிக்கப் படும்.” ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு) [சுனன் இப்னுமாஜா : 1426]

الحمدلله


 5. Quran verse and the related Ahadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِمٌ


Instruct your people to   establish Salah, and be steady in performing  it.  [20:132]

‘Abdullah bin Buraidah (RA) narrated that his father said: “The Messenger of Allah (SAW) said: ‘The covenant that distinguishes between us and them is prayer (Salah); so whoever leaves it, he has committed Kufr. ’” [Sunan Ibn Majah, 1079]

It was narrated from Tamim Dari  (RA) that the Prophet (SAW) said: “The first thing for which a person will be brought to account on the Day of Resurrection will be his prayer. If it is complete, then the voluntary (prayers) will also be recorded for him (as an increase). If it is not complete then Allah will say to His angels: ‘Look and see whether you find any voluntary prayers for My slave, and take them to make up what is lacking from his obligatory prayers.’ Then all his deeds will be reckoned in like manner.” [Sunan Ibn Majah, 1426]

الحمدلله 


Thursday, July 30, 2026

 

4 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ


وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَا اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْم

நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 64:11)

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள்: "பலவீனமான இறைநம்பிக்கையாளரை விட வலிமையான இறைநம்பிக்கையாளர் (ஈமானி லும், உடலிலும், நற்செயல் களிலும்) சிறந்தவரும், அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானவரும் ஆவார். எனினும், இருவரிடமும் நன்மை இருக்கிறது. உங்களுக்குப் பயனளிப்பதில் (இம்மைக்கும் மறுமைக்கும்) முயற்சி செய்யுங்கள், அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள், மேலும் (எந்த ஒரு நற்செயலிலும்) தளர்ச்சி அடை யாதீர்கள். உங்களுக்கு ஏதேனும் (துன்பமோ, இழப்போ) ஏற்பட்டால், "நான் அப்படிச் செய்தி ருந்தால் (இது நடந்தி ருக்காதே)..." என்று கூறாதீர்கள், மாறாக "கத்(த்)தரல்லாஹு வமா ஷாஅ ஃபஅல (அல்லாஹ் விதித்துவிட்டான், அவன் நாடியதைச் செய்தான்)" என்று கூறுங்கள். ஏனெனில், '...இருந்தால்' என்ற சொல் ஷைத்தா னின் செயல்களுக்கு (வருத்தம், மனக்குறை, அல்லாஹ்வின் விதியை மறுத்தல் போன்ற வற்றுக்கு) வழி திறக்கிறது." [சுனன் இப்னுமாஜா : 79]

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சோதனையின் கடுமையிலிருந்தும், துர்பாக்கியம் (நம்மை) வந்தடைவதிலிருந்தும், விதியின் கெடுதியி லிருந்தும், எதிரிகள் (நம் துன்பத்தைக் கண்டு) மகிழ்வதிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்."[ஹதீஸ் தரம் : ஸஹீஹ்; ஸஹீஹுல் புகாரி : 6616]

الحمدلله

 

 


4. Quran verse and the related Ahadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

      

                      

وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَا اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ

No calamity befalls anyone except by Allah’s Will. And whoever has faith in Allah, He will rightly guide their hearts through adversity. And Allah has perfect knowledge of all things [64:11]

Related Ahadith:

Suhaib (RA) reported that Allah's Messenger (SAW) sai "Strange are the ways of a believer for there is good in every affair of his and this is not the case with anyone else except in the case of a believer for if he has an occasion to feel delight, he thanks (Allah), thus there is a good for him in it, and if he gets into trouble and shows resignation (and endures it patiently), there is a good for him in it. [Sahih Muslim, 2999]

It was narrated that Abu Hurairah said: "The Prophet (SAW)) said: 'The strong believer is better and more beloved to Allah than the weak believer, although both are good. Strive for that which will benefit you, seek the help of Allah, and do not feel helpless. If anything befalls you, do not say, "if only I had done such and such" rather say "Qaddara Allahu wa ma sha'a fa'ala (Allah has decreed and whatever he wills, He does)." For (saying) 'If' opens (the door) to the deeds of Shaithan.'" [Sunan Ibn Majah, 79]

Narrated Abu Huraira: The Prophet (SAW) said, "Take refuge with Allah from the difficulties of severe calamities, from having an evil end and a bad fate and from the malicious joy of your enemies." [Sahih al-Bukhari 6616]

الحمدلله

Friday, July 24, 2026

 

3. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ


 

وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَا اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ

அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பார்க்க முயற்சித்தால், அவற்றை உங்களால் எண்ண முடியாது. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன். (அல் குர்ஆன், 16:18).

அல்லாஹுதாலா பூமியில் உள்ள கடல்கள், மலை கள், ஆறுகள், சாலைகள், வானங்கள், நட்சத்தி ரங்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற சக உயிரினங்கள் மூலமாக  மனிதகுலத்திற்கு எண்ணற்ற, கணக்கிலடங்கா அருட்கொடை களை வழங்கியுள்ளான். ஆனால் மனிதன் 

அவற்றை அருட்கொடைகளாகக் கருதத் தவறுகிறான்,

தனது புத்திசாலித்தனத்தாலும் கடின உழைப் பாலும் அந்த அருட்கொடைகள் கிடைத்ததாக நினைக்கிறான்,

அவற்றைச் சாதாரணமாக எடுத்துக் கொள் கிறான்,

  அந்த அருட்கொடைகளுக்கு நன்றி சொல்லா மலும் இருக்கிறான்,

அல்லாஹ்வையே மறந்து, மேலும் பெற, பேராசை கொள்கிறான்,

கர்வம், அதிகாரம் மற்றும் ஆணவம் கொள்கிறான்,

அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை,

கஞ்சனாகவும், நம்பிக்கையற்றவனாகவும், கலகக்காரனாகவும் மாறுகிறான். 

அல்லாஹுதாலா அவனை உடனடியாகத் தண்டிப் பதில்லை, மாறாக அவனுக்கு அவகாசம் அளிக்கிறான். ஏனெனில் அவன் மன்னிப்பவ னாகவும் கருணையாளனாகவும் இருக்கிறான். 

ஆனால் ஒருவன் மனம் திருந்தி, அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்து அவனிடம் திரும்பி, அவனுக்குப் பிரியமானதைச் செய்ய முயன்றால், அவன் மனிதன் மீது கருணையாளனாக இருக்கிறான்.  அத்தகைய  மனிதனை அல்லாஹ் தண்டிப்பது  

இல்லை 

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:

உயர்ந்தவனும் மகத்துவமிக்கவனுமான அல்லாஹ் கூறினான்: "நான் என் அடியானின் எண்ணத்தில் வாழ்கிறேன், அவன் என்னை நினைக்கும் போதெல்லாம் நான் அவனுடன் இருக்கிறேன். (புனித நபி [ஸல்] அவர்கள்] மேலும் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக, வறண்ட பாலைவனத்தில் காணாமல் போன ஒட்டகத்தைக் கண்டால் உங்களில் ஒருவர் செய்யும் செயலை விட, அல்லாஹ் தன் அடியானின் மனந்திரும்பு தலில் அதிக மகிழ்ச்சி அடைகிறான். அவன் தன் கையளவு என்னை நெருங்கும்போது, நான் ஒரு முழம் நீளத்திற்கு அவனை நெருங்குகிறேன், அவன் ஒரு முழம் நீளத்திற்கு என்னை நெருங்கும் போது. நான் ஒரு பாகைத் தொலைவுக்கு அவனை நெருங்குகிறேன்; அவன் நடந்து என்னை நெருங் கும் போது, நான் அவசரமாக அவனை நெருங்கிச் செல்கிறேன். [ஸஹீஹ் முஸ்லிம் 2675 ஹிஜ்ரி]

الحمدلله

 

6 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்: السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ                  ...