வி- 9
ரமலான் வினா - விடை
السلام عليكم
ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
9. அவர்கள் புறக்கணித்தார்கள்; ஆகவே, அல்
அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், (34:16) எந்த இன மக்களுக்கு இந்த தண்டனை இறக்கப்பட்டது?
விடை: ஸபா மக்கள்
ஸபா என்பது கடந்த காலத்தில் வாழ்ந்த
ஏமன் மன்னர்களையும் மக்களையும் குறிக்கிறது. அவர்களின் பண்டைய மன்னர்கள் துப்பா
என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் ஒரு பெரிய, வலுவான அணை யைக்
கட்டினார்கள், அதனால் இரண்டு மலைகளுக்கு இடையில் நீர் உயர்ந்த மட்டத்தை எட்டியது.
அல்லாஹ் அவர்களைப் பற்றி கூறுகிறான்: "நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள்
வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும்
இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன; “உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்தி லிருந்து
புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது) வளமான நகரம்; இன்னும் (அவன்)
மன்னிப்பளிக்கும் இறைவன்” (34:15)
அவர்கள் ஆடம்பரமாக வாழ்ந்தனர். ஏராளமான
உணவுகள், பயிர்கள்
மற்றும் பழங்கள் அவர் களுக்கு கிடைத்தன. வானிலை நன்றாக இருந்ததன் காரணமாக அவர்களின்
நிலத்தில் ஈக்கள், கொசுக்கள் அல்லது எந்த வகையான பூச்சிகளின் தொல்லை இல்லை. மக்கள்
ஆரோக்கியமாக இருந்தனர், மேலும் அல்லாஹ் அவர்களை நன்கு கவனித்துக் கொண்டான்.
அல்லாஹ் தூதர்களையும் அவர்களிடம்
அனுப்பினான். அல்லாஹ் நாடியவர்கள் அதைப் பின்பற்றினார்கள். ஆனால் பலர் (இப்போதனையைப்)
புறக்கணித்தார்கள்; அவர்கள் அல்லாஹ்வை விட்டு சூரியனை வணங்கத் தொடங்கினர். ஆகவே, அல் அரிம்
(என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை
மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய
மரங்களும், சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம். (34:16).
அல்லாஹுதாலா அவ்விடத்தில் பெரிய பெரிய எலிகளை பெருகச்
செய்தான். அவற்றைக் கட்டுப் படுத்த அவர்கள் பூனைகளை கொண்டு வந்தனர். இருப்பினும்
எலிகள் அதிகமாக வளர்ந்து அணையில் துளைகளை உருவாக்கியதால் அணை இடிந்து விழுந்தது.
பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் தண்ணீர்
பாய்ந்து அவற்றின் பாதையில் உள்ள அனைத்தையும் அழித்தது. மலைகளில் வலது மற்றும்
இடதுபுற மரங்களிலிருந்து தண்ணீர் வடிந்ததால், அந்த மரங்கள் காய்ந்து அழிந்து போயின. அந்த
அழகான, பழம்தரும்
மரங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒன்றைக் கொண்டு மாற்றப்பட்டன, மேலும்
அவர்களின் இரண்டு தோட்டங்களையும் கசப்பான கெட்ட பழங்களை உற்பத்தி செய்யும்
தோட்டங்களாக மாற்றினோம்.
குர்ஆனின் பிறிதொரு இடத்தில், சுலைமான் (அலை)
அவர்களின் பறவை ஹுத்ஹுத் வந்து கூறிற்று: “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான
செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.” “நிச்சயமாக அவர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை
நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப் பட்டுள்ளது; மகத்தான ஓர்
அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது. “அவளும், அவளுடைய சமூகத்தார் களும், சூரியனுக்கு
ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக்
காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள்
நேர்வழி பெறவில்லை. (27:22 - 24)
அவர்கள் நன்றி கெட்டதன் காரணமாக
அவர்களுக்கு இக்கூலியை, நாம் கொடுத்தோம். வேறெவருக்கும்
நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா? (34:17).
இன்னும், அவர்களுக்கிடை யிலும், நாம்
பரக்கத்து செய்திருக்கிறோமே அந்த
ஊர்களுக்கிடையிலும் தெரியும் பல ஊர்களையும் நாம் உண்டாக்கி அவற்றில் (பாதை களையு)ம் அமைத்தோம்; “அவற்றில்
இரவுகளிலும், பகல்களி லும் அச்சமற்ற வர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்” (என்று
கூறினோம்) (34:18)
ஆனால், அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுடைய பிரயாண(ம்
செய்யும் இட)ங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை அதிகமாக்குவாயாக!” என்று வேண்டித்
தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்;
எனினும் அவர்கள் மீது அவனுக்கு யாதோர்
அதிகாரமுமில்லை - ஆயினும் மறுமையை நம்புகிறவர்களை அதனைப்பற்றி சந்தேகத்தி லிருப்போரை
விட்டும் நாம் அறி(வித்திடு)வற்காகவே (இது நடந்தது); மேலும் உம்முடைய இறைவன் அனைத்துப்
பொருட்களையும் பாது காப்போனாக இருக்கின்றான். (34:20 & 21)
எனவே, அவர்கள்
வெள்ளத்தால் சிதறடிக்கப்பட்டு ஸபாவைச் சுற்றியுள்ள நாடுகளில்
குடியேறினர்.
الحمدلله