Saturday, July 5, 2025

 

                                                        அஷூரா நாள்

 السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

 அல்லாஹீதாலாவின் அற்புதத்தால் மூஸா (அலை) அவர்களும் இஸ்ரவேல் சந்ததியினரும் செங்கடல் பிளந்த பாதையில் கடந்து  ஃபிர்அவ்னிடமிருந்து தப்பித்ததை ஆஷுரா நினைவுகூர்கிறது. அக்கொடுங்கோலனும் அவனது படையுடன் அதே பிளந்த பாதையில் செல்ல அல்லாஹுதலாவால் மூழ்கடிக்கப்பட்டான்.

கர்பலா போரின் போது நபி (ஸல்) அவர்களின் பேரன் இமாம் ஹுசைன் மற்றும் அவரது தோழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு  துக்கம் அனுசரிக்கும் நேரமாகவும் இது கருதப்படுகிறது

ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும்: “நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக ஆக்கி அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!” என்று வஹீ அறிவித்தோம். (10:87)

இன்னும்: “எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்” என்று மூஸா கூறினார். (10:88)

இறைவன் கூறினான்: “உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது; எனவே நீங்கள் உறுதியாக இருங்கள். அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் வழியை நீங்கள் இருவரும் (ஒருபோதும்) பின் பற்றாதீர்கள்” என்று. (10:89)

பின், "உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸா (அலை)மிற்கு வஹீ அறிவித்தோம். (கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது. (26: 63)

மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான். (10:90)

இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய். (10:91)

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது).(10:92)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு குடிபெயர்ந்தபோது, யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்பதைக் கவனித்தார். முஸ்லிம்களும் நோன்பு நோற்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். வேதத்தின் மக்களிடமிருந்து வேறுபடுவதற்கு, இரண்டு நாட்கள் அதாவது முஹர்ரம் 9 & 10 அல்லது 10 அல்லது 11 நோன்பு நோற்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

சில கருத்துக்களின் படி ஆஷுரா நாளில் :

ஆதம் (அலை) அவர்கள் மனந்திரும்பி மன்னிக்கப்பட்டார் என்றும்

நூஹ் (அலை) அவர்களின் கப்பல் ஜூதி மலையில் தரையிறங்கியது என்றும்

யூனுஸ் (அலை) அவர்கள் திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து தூக்கி எறியப்பட்டு மன்னிக்கப் பட்டார் என்றும் கருதப்பட்டது

           இதை அல்லாஹ் தான் நன்கறிவான்.

لحمدللهl

 

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...