பாவமன்னிப்பு துவா
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ.
"யா அல்லாஹ்! என் தவறையும், என் அறியாமையையும், என் காரியத்தில் நான் வரம்பு மீறியதையும், என்னைவிட நீ எதை நன்கறிந்துள்ளாயோ அதையும் எனக்கு மன்னிப்பாயாக. யா அல்லாஹ்! நான் சிரத்தையுடன் (செய்த பாவங்களையும்), விளையாட்டாக (செய்த பாவங்களையும்), தவறுதலாக (செய்த பாவங்களையும்), வேண்டுமென்றே (செய்த பாவங்களையும்) எனக்கு மன்னிப்பாயாக.
இவை அனைத்தும் (இந்தக் குறைகள் அனைத்தும்) என்னிடமே உள்ளன. யா அல்லாஹ்! நான் முற்படுத்திய (பாவங்களையும்), பிற்படுத்திய (பாவங்களையும்), இரகசியமாகச் செய்த (பாவங்களையும்), பகிரங்கமாகச் செய்த (பாவங்களையும்), மேலும் என்னைவிட நீ எதை நன்கறிந்துள்ளாயோ அதையும் எனக்கு மன்னிப்பாயாக! முற்படுத்துபவனும் நீயே! பிற்படுத்துபவனும் நீயே! நீயே அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்." [ஸஹீஹ் முஸ்லிம் : 2719 a]
الحمدلله
No comments:
Post a Comment