3. எந்த திருக்குர்ஆனின் வசனங்கள் இந்த படத்திற்கு பொருந்தும்:
السلام عليكم ورحمة الله وبركاتة
ِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
பதில்:
وَأَوْحَىٰ
رَبُّكَ إِلَى ٱلنَّحْلِ أَنِ ٱتَّخِذِى مِنَ ٱلْجِبَالِ بُيُوتًۭا وَمِنَ
ٱلشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ O ثُمَّ
كُلِى مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ فَٱسْلُكِى سُبُلَ رَبِّكِ ذُلُلًۭا ۚ يَخْرُجُ مِنۢ
بُطُونِهَا شَرَابٌۭ مُّخْتَلِفٌ أَلْوَٰنُهُۥ فِيهِ شِفَآءٌۭ لِّلنَّاسِ ۗ إِنَّ
فِى ذَٰلِكَ لَـَٔايَةًۭ لِّقَوْمٍۢ يَتَفَكَّرُونَ O
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை
அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள் (என்றும்),
“பின், நீ
எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்)
எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி
உண்டாக்கினான்). அதன் வயிற்றி லிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்)
வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க
வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சய மாக இதிலும் சிந்தித்துணரும்
மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (16:68 & 69)
அல்லாஹ் குர்ஆனில் தேனீக்களுக்கு ஒரு அத்தியாயத்தை (சூரா அந்-நஹ்ல்
-"தேனீ") ஒதுக்கியுள்ளான், ஏனெனில் அவை:
• ஒரு அற்புதமான மற்றும் விந்தையான படைப்பு.• அல்லாஹ்வின் சக்தி, ஞானம் மற்றும் கருணைக்கான ஒரு அத்தாட்சி (ஆயத்).• தன்னலமற்ற சேவை, உறவினை காப்பது, தியாகம் மற்றும் கடினமான சிறந்த உழைப்புக்கான ஒரு முன் மாதிரி.
• கீழ்ப்படிதல், சமநிலை வாழ்க்கை மற்றும் நன்றியுணர்வின் சின்னம்.
• கடின உழைப்புடனும், ரீங்காரத்துடனும் மற்றும் நடனத்துடன் வாழ்க்கையை அழகாக அனுபவிக்கும் அர்ப்பணிக்கும் ஓர் உயிரினம்.
• காட்டு தாவரங்கள், விவசாயப் பயிர்களின் மகரந்த சேர்க்கையில்
ஈடுபடும் ஓர் உயிரினம்.
• நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கு தேனீயின் மகரந்தச் சேர்க்கையால் பெறப்படுகிறது.
• ஒரு ஒற்றை தேனீ உணவு தேடும் பயணத்தின் போது அது ஒரே இனத்தின் பூக்கள் மீது கவனம் செலுத்துகிறது. அவைகளின் கால்களில் "மகரந்த கூடைகளில்" அதிக அளவு மகரந்தத்தை கொண்டு செல்கிறது.
தேன் கூடு:
• தேன் கூட்டில் -காலனி வளர்ச்சி, பராமரிப்பு, பாதுகாத்தல் மற்றும் தேன் தயாரிப்பு ஆகிய வேலைகளில் ஈடுபடும் இனப்பெருக்கம் செய்யாத பல வேலைக்கார தேனீக்களும், சில ஆண் தேனீக்களும் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் ஒரு ராணியும் இருக்கும்.
• அவை ஒருங்கிணைந்து தம் தம் வேலைகளை ஒழுங்குற செய்து
காலனியாக செயல்படுகின்றன.
• கூட்டிற்குள் இருக்கும் வேலைக்கார தேனீக்கள், தங்களுக்கு பிறக்காத சிறியவைகளை பராமரிக்கின்றன
உணவு:
வேலைக்கார தேனீயாக, மற்றும் ஆண் தேனீயாகமாறும் புழுக்களுக்கு முதல் மூன்று நாட்கள் அரசஜெல்லி (வேலைக்கார தேனீயின் தலையில் காணப்படும் சுரப்பியால் சுரக்கப்படும் பால் போன்ற பொருள்) உணவளிக்கப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு மகரந்த ரொட்டி ஊட்டப்படுகிறது. ராணி தேனீயாக மாறும் புழுக்களுக்கு அதன் வாழ்நாள் முழுவதும் அரச ஜெல்லி உணவளிக்கப்படுகின்றது.
ராணி தேனீக்கள்:
• ஒரு கன்னி ராணி கூட்டிலிருந்து பல முறை பறந்து, பல ஆண் தேனீகளுடன் இணைகிறது. இனச்சேர்க்கைக்குப் பிறகு சிறிது நேரத்தில் ஆண் தேனீ இறந்துவிடும்). பின் ஒரு ராணி தேனீ மற்ற ராணி தேனீக்களை சண்டையிட்டு நீக்கி, கூட்டில் தங்கி முட்டையிடும் இயந்திரம் போல வேலை செய்கிறது.
• ராணி ஒரு நாளைக்கு 2,000 முதல் 3,000 முட்டைகள் வரை இடும். அதன் தனித்துவமான வாசனை (பெரோமோன்கள்) எல்லோரையும் ஒருங்கினைத்து கூட்டைப் பராமரிக்கின்றது.
வேலைக்கார தேனீக்கள்:
• வேலைக்கார தேனீக்கள் சுமார் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை வாழ்கின்றன.
• முதலில் அவை தேன்கூட்டு செல்களை தூசி, முடிகள் மற்றும் பூச்சிகளிலிருந்து சுத்தம் செய்து முட்டைகள் அல்லது உணவு சேமிப்பதற்கு தயார்படுத்தி 24/7 கணக்கில் வேலை செய்கின்றன.
• பின்னர் கழிவுகளை அகற்றுதல், தேன் பதப்படுத்துதல் மற்றும் புழுக்களூக்கும், ராணிக்கும் உணவளிக்கின்றன.
• வயது வந்த தேனீக்கள் இரண்டாவது வாரத்தில் அவற்றின் மெழுகு சுரப்பி செயல்படும்போது, அவை கூட்டை உருவாக்கி சீர் செய்கின்றன.
• இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை, அவை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்கின்றன.
• மூன்று வாரங்களுக்குப் பிறகு, அவற்றின் மெழுகு சுரப்பிகள் சுருங்கி, கூட்டிலிருந்து வெளியேறி, மற்ற உறுப்பினற்கு உணவு மற்றும் தண்ணீர் கொண்டுவர தங்கள் வாழ்நாள் முழுவதும் செலவிடுகின்றன.
• வயதான தேனீக்கள் திறம்பட மீண்டும் கூட்டு வேலைகளுக்கு திரும்புகின்றன.
• தேனீக்கள் தங்கள் இறக்கைகளால் விசிறி விடுவதன் மூலம் கூட்டின் வெப்பநிலையை 92-93 F பராமரிக்கின்றன!
• ஒரு முறை உணவு தேடும் பயணத்தில், ஒரு வேலைக்கார தேனீ 50 முதல் 100 பூக்களில் இருந்து தேன் குடிக்கும்.
• தேனீக்கள் சூரியனை ஒரு திசைகாட்டியாகப் பயன்படுத்தி பறக்கின்றன. துருவப் படுத்தப்பட்ட ஒளி மற்றும் புற ஊதா ஒளியில் அவற்றால் கண்டு கொள்ள முடியும். பூமியின் காந்தத்தன்மைக்கு உணர்திறன் கொண்டவை.
• உணவு தேடிச் செல்லும்போது, வேலைக்காரத் தேனீக்கள் மணிக்கு 20 மைல்கள் வரை பறக்கும். இதை அடைய, அவை வினாடிக்கு 200 முறை இறக்கைகளை அடிக்கின்றன. இதுவே தேனீயின் "ரீங்கார" ஒலிக்கு காரணமாகிறது.
• ஒரு நாளில் வேலைக்காரத் தேனீக்கள் 30 பயணங்களை மேற்கொள்ளும். பொதுவாக அதன் கூட்டிலிருந்து இரண்டு மைல் சுற்றளவிலும், உணவு பற்றாக்குறை இருக்கும்போது 5-6 மைல்கள் வரை தொடர்ந்து பறக்கக்கூடும்.
• தேன் கொண்ட பூக்கள், கூட்டிற்கு அருகில் இருந்தால் அவை வட்ட நடனமாடி மற்ற தேனீக்களுக்கு அறிவிக்கின்றன.
• உணவு 100 மைல்கள் தொலைவில் இருந்தால், உணவு மூலத்தின் இடம், தூரம் மற்றும் அளவைக் குறிக்கும் வகையில் அவை வாகிள் நடனம் ஆடி தெரிவிக்கின்றன.
• அதன் 6-8 வார வாழ்க்கையில் ஒற்றை வேலைக்காரத் தேனீ பூமியின் சுற்றளவை விட சுமார் 1.5 மடங்கு உணவு தேடிச் செல்லும் தூரத்தை கடக்கிறது.
தேனீக்கள் தூக்கம்:
• எவ்வளவு ஆழமாக, எவ்வளவு நேரம் தூங்குகின்றன என்பது அவற்றின் வயது மற்றும் செய்யும் வேலையைப் பொறுத்து மாறுபடும்.
தேன் தயாரித்தல்:
• உணவு தேடும் தேனீக்கள் தேனை உறிஞ்சி, "தேன் வயிற்றில்" சேகரித்து, கூட்டிற்கு வந்து வாய் வழியாக வீட்டுத் தேனீக்களுக்கு ஊட்டுகிறது. அவை நொதி மூலம் எளிய சர்க்கரையாக மாற்றி, பின்னர் தேன்கூடு செல்களில் சேமித்து, நீர் ஆவியாகும் வரை விசிறி, அடர்த்தியான தேனை உருவாக்கி, இறுதியாக மெழுகால் அதை மூடுகிறது.
தேன் கூடு:
• அறுகோண மெழுகு செல்களால் ஆனது கூடு. அவை 1) தேனை சேமிக்க; 2) மகரந்தத்தை
தேனீ ரொட்டியாக மாற்ற; மற்றும் 3) புதிய தேனீக்களை வளர்க்க உபயோகப் படுத்தப் படுகிறது.
தேனைப் பிரித்தெடுத்த பிறகு, இத்தேன் கூடு மெழுகுவர்த்தி, அழகுசாதனப் பொருட்கள், மருந்து மற்றும் வாசனை திரவியத் தொழிற்களில் பயன்படுத்தப்படுகிறது. ஷூ பாலிஷ், பசைகள், சூயிங் கம்கள் மற்றும் மைகள் போன்றவற்றை தயாரிக்க பயன்படுத்தப் படுகிறது.
தேன்:
• தேன் பாக்டீரியா எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை எதிர்ப்பு திறன் கொண்டது; காயங்களுக்கு சிகிச்சையளிக்கவும் இது பயன்படுகிறது. தேன் ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டி மற்றும் மென்மையாக்கும் பொருள்.
தேனீ விஷம்:
வீக்கம் மற்றும் மூட்டு வலிக்கு சிகிச்சையளிக்க தேனீ விஷம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படுகிறது.
لحمدلله
No comments:
Post a Comment