2. இந்த படத்திற்கு பொருத்தமான குர்ஆன் வசனத்தை
கூறவும்:
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
பதில்: சூரா கா'ஃபிர், வசனம் 67. (40:67).
[هُوَ الَّذِىْ
خَلَقَكُمْ
مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ يُخْر ِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ثُمَّ لِتَكُوْنُوْا شُيُوْخًا ؕ
وَمِنْكُمْ
مَّنْ يُّتَوَفّٰى مِنْ قَبْل ُ وَلِتَبْلُغُوْۤا اَجَلً ا مُّسَمًّى وَّلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ [40:67]
"அவன் தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்தில் இருந்தும் பின் அலக் என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக
வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர் - இன்னும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட
தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்).” (40:67).
இதே போல் மற்ற ஒரு வசனம்: "நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத்
துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத்
துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கிறீர்கள். பிறகு, கியாமத் நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.”
(23:12-16)
நபி (ஸல்) கூறியதாக, அப்துல்லா அவர்கள் விவரித்தார்: "உங்கள் படைப்பைப் பொறுத்த வரை, நீங்கள் ஒவ்வொருவரும்
முதல் நாற்பது நாட்களுக்குத் தாயின் வயிற்றில் தோற்றுவிக்கப் படுகிறீர்கள், பின்னர் அடுத்த நாற்பது நாட்களுக்கு ஒரு இரத்தக்கட்டி ஆகிறீர்கள், பின்னர் அடுத்த நாற்பது நாட்களுக்கு ஒரு மாமிச துண்டு போல் வளர்கிறீர். பிறகு உங்களைப்பற்றி நான்கு வார்த்தைகளை
எழுத அல்லாஹ் ஒரு தேவதையை அனுப்புகிறான். அவர் உங்களது செயல்கள், இறக்கும் நேரம், வாழ்வாதாரம் மற்றும் வழிமுறைகள், நீங்கள் நல்லவரா கெட்டவரா என எழுதுகிறார். ஆன்மா உங்களது உடலில் செலுத்தப் படுகிறது.
ஒரு மனிதன் (நரக) நெருப்பிற்குச் செல்லும் செயல்களை செய்யலாம், அதனால் அவனுக்கும்
அதற்கும் இடையே ஒரு முழ தூரம் மட்டுமே இருக்கும் போது, அந்த தேவதை எவரை நல்லவர் என்று எழுதினாரோ அவர் அதை மிஞ்சுகிறார், பின் அவர் தன் எஞ்சிய வாழ்நாளில், சொர்க்க மக்களின் நற்செயல்களை செய்யத் தொடங்கி சுவர்க்கம் புகுவார். ஒருவர் கெட்டவர் என்று எழுதியிருந்தால் அவர் நல்ல செயல்களை செய்து, அவருக்கும் சுவர்க்கத்திற்கு இடையே ஒரு முழ தூரம் மட்டுமே உள்ளபோது, அந்த தேவதையால் கெட்டவர் என்று எழுதப்பட்டதை
மிஞ்சுகிறார். அத்தகையவர் தன் பிந்தைய வாழ்நாளில் (நரக) மக்களின் செயல்களைச்
செய்யத் தொடங்கி நரகத்தில் நுழைவார்." அதாவது அவரைப்பற்றி தாயின் வயிற்றில் என்ன எழுதப்பட்டதோ அதன் பிரகாரமே அவர் வாழ்க்கை அமையும்!
لحمدلله
No comments:
Post a Comment