Tuesday, August 11, 2026

 

10. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ


 

فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَٱعْتَصِمُوا۟ بِٱللَّهِ هُوَ مَوْلَىٰكُمْ ۖ  فَنِعْمَ ٱلْمَوْلَىٰ وَنِعْمَ ٱلنَّصِيرُ

நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன். [22:78]

இது  ஸூரதுல் ஹஜ்ஜின் கடைசி வசனம், ஸஜ்தா வசனம். உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்ததாகக் கூறப்படுகிறது, “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஸூரதுல் ஹஜ் இரண்டு ஸஜ்தாக்களைக் கொண்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, எவர் அவ்விரண்டையும் செய்யவில்லையோ அவர் அந்த வசனங்களை ஓத வேண்டாம்.ஜாமிஉத் திர்மிதீ, 578]

அல்லாஹ் உங்களை மற்ற எல்லா சமுதாயங்களை விடவும் தேர்ந்தெடுத்துள்ளான்; மேலும் உன்னதமான தூதரையும் மகத்தான சட்டங்களையும் கொண்டு உங்களை மேன்மைப்படுத்தி, ஆசீர்வதித்து, கண்ணியப் படுத்தியுள்ளான். அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அவனுக்கு அஞ்சுங்கள்.

உங்களால் தாங்க முடியாத எதையும் உங்கள் மீது அல்லாஹ் சுமத்தவில்லை. உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எதையும் அவன் கடமையாக்க வில்லை; அதிலிருந்து வெளியேற ஒரு வழியை அவன் உங்களுக்கு ஏற்படுத்தித் தந்தாலே தவிர. மிக முக்கியமான கடமைகளான தொழுகையை முறையாக நிலைநாட்டுவதும் ஜகாத் வழங்குவதும் ஆகும்.

தொழுகை (ஸலாஹ்), ஒருவர் ஊரில் இருக்கும் போது நான்கு ரக்அத்களாகக் கடமையாக்கப் பட்டுள்ளது; ஆனால் பயணத்தின்போது இது இரண்டு ரக்அத்களாகச் சுருக்கப்படுகிறது. அச்சமான நேரங்களில் ஒரு ரக்அத் மட்டுமே கடமையாகும். ஒருவர் நடக்கும்போதோ அல்லது சவாரி செய்யும்போதோ, கிப்லாவை நோக்கியோ அல்லது வேறு திசையிலோ தொழலாம். பயணத் தின்போது உபரியான (சுன்னத்) தொழுகை களைத் தொழும்போது, கிப்லாவை நோக்கியோ அல்லது நோக்காமலோ தொழலாம். ஒரு நோயாளி தொழுகையின் போது நிற்க வேண்டிய கட்டாயமில்லை; அவர் உட்கார்ந்து தொழலாம், அதையும் செய்ய முடியாவிட்டால் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு தொழலாம். கடமையான தொழுகைகள் மற்றும் பிற கடமைகளில் இது போன்ற இன்னும் பல விதிவிலக்குகளும் சலுகைகளும் உள்ளன.

எனவே தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் எளிமையான ஹனீஃபிய்யா மார்க்கத்துடன் அனுப்பப்பட்டுள் ளேன். மேலும், நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரழி) மற்றும் அபூ மூஸா (ரழி) ஆகியோரை யமனுக்கு ஆளுநர்களாக அனுப்பியபோது அவர்களிடம் கூறினார்கள்: நற்செய்தி கூறுங்கள், மக்களை விரட்டியடிக் காதீர்கள். எளிதாக்குங்கள், கடினமாக்காதீர்கள்.

ஜகாத் என்பது அல்லாஹ்வின் படைப்புகளுக்குச் செய்யும் ஒரு பேருதவியாகும். ஏழைகளுக்கும் பலவீனமானவர்களுக்கும் உதவுவதற்காக செல்வந்தர்கள் தங்கள் செல்வத்திலிருந்து ஒரு சிறு பகுதியை ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். ஜகாத் என்னும் தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப் படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர் களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் [9:60]

அல்லாஹ்வின் உதவியையும் ஆதரவையும் தேடுங்கள், அவன் மீது முழு நம்பிக்கை வையுங் கள், அவனிடமிருந்து வலிமையைப் பெறுங்கள். அவன் உங்கள் பாதுகாவலன் மற்றும் உதவியா ளன்; உங்கள் எதிரிகளுக்கு எதிராக உங்களை வெற்றிபெறச் செய்பவன் அவனே.

الحمدلله

 

No comments:

Post a Comment

  10. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்: السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ   فَأَقِي...