Thursday, June 25, 2026

 

ஆஷூரா நாளில் நோன்பு

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றிருப்பதை கண்டார்கள். அப்போது, "இது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இது ஒரு நல்ல நாள். இந்நாளில் தான் அல்லாஹ் பனீ இஸ்ராயீலரை அவர்களின் எதிரிகளிடமிருந்து காப்பாற்றினான்.  எனவே, மூஸா (அலை) அவர்கள் இந்நாளில் நோன்பு நோற்றார்கள்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "உங்களை விட மூஸா (அலை) அவர்கள் மீது எனக்கு அதிக உரிமை உண்டு (அவரைப் பின்பற்றுவதற்கும், இந்நாளைக் கொண்டாடு வதற்கும்)" என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றார்கள்; மேலும் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்; ஸஹீஹுல் புகாரி : 2004

الحمدلله

No comments:

Post a Comment

  8. Quran verse and the related Ahadith: السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ   We have bound ev...