Tuesday, March 10, 2026

 

                                      லைலத்துல் ஃகதர் ஹதீஸ்

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ2.

அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழானின் நடுப் பத்து நாட்களில் (பள்ளிவா சலில்) இஃதிகாஃப் இருப்பார்கள். இருபது இரவுகள் கடந்து, இருபத்தொன்றாம் இரவு வரும்போது, அவர்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தவர்களும் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பு வார்கள். (ஒரு முறை) அவர்கள் இஃதிகாஃப் இருந்த மாதமொன்றில், அவர்கள் வழக்கமாகத் திரும்பும் அந்த இரவிலும் (பள்ளியிலேயே) தங்கினார்கள்.

பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில் அல்லாஹ் நாடியவற்றை அவர்களுக்குக் கட்டளையிட் டார்கள். பிறகு கூறினார்கள்: "நான் இந்த (நடுப்) பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தேன். பிறகு, இந்தக் கடைசிப் பத்து நாட்களிலும் நான் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தெளிவாக்கப்பட்டது (அல்லது வெளிப்படுத்தப்பட்டது). எனவே, என்னுடன் இஃதிகாஃப் இருந்தவர் தமது இஃதிகாஃப் இடத்திலேயே தங்கட்டும். அந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்குக் காட்டப்பட்டது; பிறகு அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே, அதை (கடைசிப்) பத்து நாட்களில் தேடுங்கள்; ஒவ்வொரு ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள். மேலும், (ஈரம் கலந்த) மண்ணிலும் தண்ணீரிலும் நான் ஸஜ்தா செய்வதைப் போன்று (கனவில்) கண்டேன்." அந்த இரவில் வானம் மழையைப் பொழிந்தது. இருபத்தொன்றாம் இரவில் நபி (ஸல்) அவர்கள் தொழுமிடத்தில் பள்ளிவாசலின் கூரை ஒழுகியது. நபி (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பிய போது என் கண்கள் அவர்களைப் பார்த்தன; அவர்களின் திருமுகம் சேறும் நீருமாக நிறைந்திருந்தது. 

[ஸஹீஹுல் புகாரி : 2018]

الحمدلله


No comments:

Post a Comment

  Good (righteous) deeds السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ Narrated Ibn `Umar (RA): Allah...