வி- 18
ரமலான் வினா - விடை
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
18. சுவனம் செல்ல என்னென்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹீ தாலா திருக்குர்ஆனில் பட்டியலிட்டு கூறியிருக்கின்றான்? அப்பட்டியல் என்ன?
இப்பட்டியலை கொண்டு சுவனம் செல்ல உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். அர்-ரஹ்மானுடைய நல்லடியார்கள் (யாரென்றால்):
★ [25:63] “அவர்கள் தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசிட முற்பட்டால் "ஸலாம்" சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.”
★ [25:64] “இன்னும்,
அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர் களாகவும்,
நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவில்
இருப்பார்களே அவர்கள்".
★ [25:65] “எங்கள்
இறைவனே! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத்
திருப்புவாயாக! நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும் என்று கூறுவார்கள்.”
★ [25:67] இன்னும்,
அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்ய
மாட்டார்கள்; உலோபித் தனமாகக் குறைக்கவும்
மாட்டார்கள் எனினும், இரண்டிற்கும் மத்திய நிலையில்
இருப்பார்கள்.
★ [25:68] “அன்றியும்,
அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்க
மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால்
விலக்கப்பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்ல மாட்டார்கள், விபசா
ரமும் செய்யமாட்டார்கள். ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர்
தண்டனை அடைய நேரிடும்.
★ [25:69] “கியாமத்
நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும்
அதில் இழிவாக் கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.”
★ [25:70] “ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான செய்கை கள் செய்கிறார்களோ (நற்) – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றி விடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப் போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.”
★ [25:71] “இன்னும்,
எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள்
செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம்
பாவ மன்னிப் புத் தேடியவர் ஆவார்.”
★ [25:72] “அன்றியும்,
அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய (ம்
நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார் களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்)
சென்றுவிடுவார்கள்.”
★ [25:73] “இன்னும்
அவர்கள், தங்கள் இறைவ னுடைய வசனங்களைக் கொண்டு
நினைவூட் டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்த னையுடன்
செவி சாய்ப்பார்கள்).”
மேலும் அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பர்கள்:
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். (25:74).
பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர் களுக்கு(ச் சுவனபதியில்) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர் கொண்டழைக் கப்படுவார்கள். (25:75). அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்; அது வாழ்வ தற்கும், வசிப்பதற்கும் அழகிய இடமாகும். (25:76).
இந்த பட்டியல், சுவர்க்கம் செல்ல ஆசைப்படு வோர்க்கு நல்ல பட்டியல் அல்லவா?
الحمدلله
No comments:
Post a Comment