Wednesday, February 4, 2026


6. குர்ஆன் ஹதீஸ்:  குர்ஆன் மறுமை நாளில் நமக்காக பரிந்துரைக்கும்

 


السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

இஸ்லாத்தில் பரிந்துரை (ஷஃபா'அத்) என்பது மறுமை நாளில் ஒரு மனிதனுக்காக அல்லாஹு தாலாவிடம் கருணை, மன்னிப்பு மற்றும் உயர்ந்த பதவிக்காக மன்றாடுவதைக் குறிக்கிறது. அல்லாஹ் குர்ஆனைப் படிக்கவும், ஓதவும், நினை வில் கொள்ளவும், நினைவூட்டவும், அதன்படி செயல்படவும் குர்ஆனை இறக்கியருளியுள்ளான். அல்லாஹ் ஒருவனுக்கே பரிந்துரையை அனுமதிக்க அதிகாரம் உண்டு என குர்ஆன் வசனங்கள் ஆணித்தரமாக வலியுறுத்துகின்றன.

அவை:

அவனது அனுமதியின்றி அவனிடம் பரிந்துரை செய்யக்கூடியவர் யார்? [2:255]

அந்நாளில் அர்ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய பரிந்துரையும் பலனளிக்காது. [20:109]

பரிந்துரையை முழுமையாக [அனுமதிக் கும் உரிமை] அல்லாஹ் விற்கே உரியது. [39:44]

எந்த பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படாத, அந்த நாளிற்கு அஞ்சி, உங்களை காப்பாற்றிக் கொள்வீராக! [2:48 & 123]

அவனுடைய அனும திக்குப் பின்னரே அன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை.  நீங்கள் சிந்திக்க வேண்டாமா? [10:3]

எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அ(த் தகைய)வருக்கன்றி - அவர்கள் பரிந்து பேச மாட்டார்கள். [21:28]

அவனையன்றி உங்களுக்கு உதவியா ளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை.  நீங்கள் இதை சிந்திக்க வேண்டாமா? [32:4]

அவன் அனுமதித்த வரைத் தவிர வேறு எவருக்கும் பரிந்துரை பயனளிக்காது. (34:23).

ஹதீஸ்கள்:

"குர்ஆனை ஓதுங்கள், ஏனெனில் மறுமை நாளில் அது ஓதுபவர்களுக்கு பரிந்துரை செய்பவராக வரும். இரண்டு பிரகாசமான குர்ஆனின் சூராக்களை ஓதுங்கள், அல்-பகரா மற்றும் சூரா அல்-இம்ரான், ஏனெனில் மறுமை நாளில் அவை இரண்டு மேகங்கள்/நிழல்கள்/பறவைகளின் கூட்டம் போன்று வரிசையாக வந்து, அவற்றை ஓதியவர்களுக்காக மன்றாடும். [ரியாத் அஸ்-சாலிஹின் 991; சாஹிஹ் முஸ்லிம், 804 அ]

அப்துல்லாஹ் இப்னு அம்ர்  நபி (ஸல்) அவர்கள் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்: "நோன்பும் குர்ஆனும் மறுமை நாளில் ஒருவருக்கு பரிந்துரை செய்யும்........... மேலும் குர்ஆன் கூறும்: 'நான் இரவில் அவரது தூக்கத்தைப் பறித்தேன், எனவே நான் அவருக்காக பரிந்துரை செய்கின்றேன்.' ." [சஹீஹ் அல்-ஜாமி’, எண். 3882; முஸ்னத் அஹ்மத் 6626]

ஜாபிர் (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “குர்ஆன் ஒரு பரிந்துரையாளர் மற்றும் உண்மையுள்ள வழக்குரைனர். யார் அதைத் தனக்கு முன்னால் வைக்கிறாரோ, அது அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். "யார் அதைத் தன் முதுகுக்குப் பின்னால் எறிகிறாறோ, அது அவனை நரக நெருப்பில் தள்ளும்." [ஸஹீஹ் இப்னு ஹிப்பான், 124]

இப்னு புரைதாவிடமிருந்து அறிவிக்கப்பட்டது: நபி (ஸல்) கூறினார்கள்: "குர்ஆன் மறுமை நாளில் வெளிறிய மனிதனைப் போல வரும், மேலும் 'நான்தான் உங்களை இரவில் விழித்திருக்கச் செய்தேன், பகலில் தாகத்தைத் தூண்டினேன்' என்று கூறும்" என அவரது தந்தை கூறியதாக அறிவிக்கப்பட்டது. [சுனன் இப்னு மாஜா 3781]

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபு மாலிக் அஷ்அரி அறிவித்தார்:  சுத்தம் என்பது நம்பிக்கையின் பாதி, அல்ஹம்துலில்லாஹ் கூறுவது தராசை நிரப்பும், மேலும் சுப்ஹானல் லாஹ் மற்றும் அல்ஹம்துலில்லாஹ் இரண்டும் வானங்களுக்கும் பூமிக்கும் இடையில் உள்ளதை நிரப்புகின்றன, தொழுகை ஒரு ஒளி, தர்மம் (நம்பிக்கையின்) சான்றாகும், சகிப்புத்தன்மை ஒரு பிரகாசம், புனித குர்ஆன் உங்கள் சார்பாக வோ அல்லது உங்களுக்கு எதிராகவோ நிற்கும் ஒரு சான்றாகும். [ஸஹிஹ் முஸ்லிம், 223]

     ஆகையால் குர்ஆனை தினமும் தவறாமல்                                      ஓதுங்கள்!

 الحمدلله


No comments:

Post a Comment

  Narrated Abu Huraira  (RA): I heard Allah's Messenger (SAW) saying." By Allah! I ask for forgiveness from Allah and turn to Him ...