Sunday, December 18, 2022

 

67. எப்படி தொழுகையை நிறைவேற்றுவது 

ன்று முஃமின்களுக்கு விதியாக்கப் பட்டுள்ளது

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்: நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது (4:103).

இப்னு அப்பாஸ் (ரஜி) கூறுகிறார்: "தொழுகை ஹஜ்ஜை போலவே குறித்த நேரத்தில் தொழ கடமை ஆக்கப்பட்டுள்ளது"  இதையே பலரும் வலியுறுத்தி உள்ளனர். அப்துல்லா பின் மஸுத் (ரஜி) கூறியதாக புகாரி (496) & முஸ்லிம் (122) பதிவு செய்துள்ளது: "நான் நபி மிடம் கேட்டேன்: எந்த காரியம்  அல்லாஹ்விற்கு மிக்க விருப்பமானது என்று? அதற்கு அவர் "குறித்த நேரத்தில் தொழுவது" அதன் பிறகு எது?  என்று கேட்டதற்கு: "பெற்றோரை மரியாதையுடன் நடத்துவது" என்றார். "அதன் பின்?" என்று கேட்டதற்கு, "அல்லாஹ்விற்காக ஜிஹாத் செய்வது." என்று பதில் கூறினார். ஆகையால் குறித்த நேரத்தில் தொழுது விடுங்கள்.

அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறியுள்ளான்:

 "இன்னும், (கவனமற்ற) தொழுகையாளி களுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக (வும், அசிரத்தையாக) வும் இருப்போர்." (அல் மாவூன், 4 & 5).

 "மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடை யோருக்கு ன்றி மற்றவர் களுக்குப் பெரும் பாரமாகவே இருக்கும்."(2:45)

 "தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறு கிறான். மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்." (அல் ஆலா, 107:14 & 15)

 "ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையயோர்  என்றால் தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்." (அல் மூமினூன், 1 & 2).

தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கும் தொழுகையாளிகள்  (அல் மா ரிஜ், 22&23) எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின் றார்களோ அவர்கள் (ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப்படுத்தப்பட்டவர் களாக இருப்பார்கள். (அல் மாரிஜ், 34 & 35).

 "இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடான வற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சய மாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்" (29:45).

 "என்னையே வணங்கிவீராக! என்னை தியானிக் கும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்து வீராக". (தாஹா, 20:14)

 "தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழு கையை பேணிக் கொள்ளுங்கள்! (தொழுகையின் போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள் அச்சத்துடன் நில்லுங்கள்!" (2:238).

பிரார்த்திப்போமாக:

தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியில் உள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!" (இப்ராஹிம், 14: 40).

رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ

الحمدلله

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...