முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம் நாள் மற்றும் பத்தாம் நாள் ஆஷூரா நோன்பு
السلام عليكم
ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: "ஆஷூரா (எனும்) பத்தாவது நாளில் நோன்பு நோற்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்." அபூ ஈஸா (இமாம் திர்மிதி) கூறுகிறார்: இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் இந்த ஹதீஸ் 'ஹஸன் ஸஹீஹ்' (தரமுடையது) ஆகும். ஆஷூரா நாள் குறித்து அறிஞர்களிடத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. அவர்களில் சிலர் அது (முஹர்ரம் மாதத்தின்) ஒன்பதாம் நாள் என்றும், வேறு சிலர் அது பத்தாம் நாள் என்றும் கூறியுள்ளனர். மேலும், "ஒன்பதாம் நாளிலும் பத்தாம் நாளிலும் நோன்பு நோருங்கள்; யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்" என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இமாம் ஷாஃபிஈ, அஹ்மத் மற்றும் இஸ்ஹாக் ஆகியோர் இக்கருத்தையே (அதாவது, ஒன்பதாம் மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பதையே) கூறுகின்றனர்.
ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு); [ஜாமிஉத் திர்மிதீ : 755]
الحمدلله
No comments:
Post a Comment