6. பலி கொடுக்கப்படும் பிராணிகள்
السلام عليكم ورحمة الله وبركاتة
ِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
அல்லாஹ், சங்கை பொருந்திய வீடாகிய கஃபாவை மனிதர்களுக்கு (நன்மைகள் அருளும்) நிலையான தலமாக்கியிருக்கிறான்; இன்னும் சங்கையான மாதங்களையும், (குர்பானி கொடுக்கும்) பிராணிகளையும், (குர்பானிக்காக) அடையாளம் பெற்ற பிராணிகளையும் (அபயம் பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்;) அல்லாஹ் இவ்வாறு செய்தது, நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றையெல்லாம் நன்கறிவான் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவேயாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் நன்கறிபவன். (5:97)
அல்லாஹ் கட்டளையிடுகின்றான்: "ஹஜ் மற்றும் உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்" (2:196)
குர்பானிக்கு என்று நிர்ணயிக்கப்பெற்ற) பிராணிகளில் ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் உங்களுக்கு பலனடைய (அனுமதி) உண்டு. அதன் பின்னர் (உரிய காலம் வந்ததும்) அவற்றின் (குர்பானிக்கான) இடம் அந்தப் புராதன ஆலயத்தின் பால் இருக்கிறது. (22:33)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: "இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றுக்கான என்ன உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்." (22:36)
மேலும்,"குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!" (22:37)
நஹ்ர் (துல் ஹஜ் 10-ம்) நாளில் முஸ்லிம்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் ஒட்டகமோ பிற கால்நடையயோ பலி கொடுப்பது சம்பிரதாயம். நபி இப்ராஹிம் (அலை) தனது மகன் இஸ்மாயிலை (அலை) அல்லாஹ்விற்காக பலியிட விரும்பியதை நினைவுகூரும் வகையில் இச்செயல் மேற்கொள்ளப்படுகிறது.
(யாத்ரீகர்கள் தனக்காக ஒரே ஒரு பிராணியை பலியிட வேண்டும்மற்றும் யாத்ரீகர்கள் அல்லாதவர்கள் தன் குடும்பத்திற்காக ஒரு விலங்கின் பலிகொடுத்தால் போதும்.
இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப்படுத்துகிறாரோ அது அவருக்கு, அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்; இன்னும் நாற்கால் பிராணிகளில் உங்களுக்கு (ஆகாதவையென) ஓதப்பட்டதைத் தவிர (மற்றவை) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன; ஆகவே அசுத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். (22:30)
பலி கொடுக்கப்படும் பிராணிகள்:
இப்னு அப்பாஸ் கூறினார்: "ஹாதியில் எட்டு வகையான (ஆண் மற்றும் பெண் உட்பட) விலங்குகள் அடங்கும். அவை ஒட்டகம், மாடு, ஆடு மற்றும் செம்மறி ஆடு.''
ஒரு செம்மறியாடு அல்லது ஆடு பலியிடலாம். அதற்கு மாற்றாக ஒரு ஒட்டகமாகவோ அல்லது ஒரு மாடாகவோ இருந்தால், ஏழு பேர் கூட்டு சேர்ந்து பலியிடலாம். ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு அல்லது பெரிய விலங்குகளில் ஏழில் ஒரு பங்கோ போதுமானது.
அப்துர்-ரஸ்ஸாக் கூறினார்: "ஒருவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுக்கலாம்" என்று அல்-அவ்ஃபி கூறினார்: "ஒருவரால் வாங்க முடிந்தால், ஒட்டகங்கள், இல்லையெனில் விலையைப் பொறுத்து மாடுகள் அல்லது ஆடுகள்."
பலி கொடுக்கப்படும் பிராணிகள் நிலை:
பலியிடும் விலங்கு ஆரோக்கியமாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும். உடல் நலம் குன்றியதாகவும், காயப்பட்ட, உடைந்த கொம்புகள் அல்லது பற்கள் கொண்ட விலங்குகள் தவிர்க்கப்பட வேண்டும்.
பிராணியை பலி கொடுத்தல் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான செயல்:
ஆயிஷா (ரஜி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மனிதன் நஹ்ர் நாளில் செய்யும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான இரத்தம் சிந்தும் செயலை விட எந்தச் சிறந்த செயலையும் செய்வதில்லை. கியாமத் நாளில் அது கொம்புகள், முடிகள், குளம்புகளுடன் வெளிப்படும், மேலும் அந்த இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்பே அது எங்கிருந்து பெறப்படுகிறதோ அந்த இரத்தம் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும், எனவே உங்கள் இதயம் அதில் மகிழ்ச்சியடையட்டும். [சுனன் அல்-திர்மிதி, 1493]
பலி கொடுக்கப்பட வேண்டிய நாள் மற்றும் நேரம்:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “பெருநாள் தொழுகைக்கு முன் பலி கொடுத்தவர், அதை தனக்காகவே அறுத்தார், மேலும் தொழுகைக்குப் பிறகு அதை அறுத்தவர், அதை சரியான நேரத்தில் அறுத்து முஸ்லிம்களின் பாரம்பரியத்தைப் பின்பற்றினார்.” (புகாரி, 68/454)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தனர்: நபி (ஸல்) அவர்கள் நஹ்ர் நாளில் கூறினார்கள், “தொழுகைக்கு முன் தனது பலி பிர்ணியை அறுத்தவர், அதை மீண்டும் செய்ய வேண்டும் .” (புகாரி, 68)
அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தனர்: “நபி (ஸல்) அவர்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடாக்களை பலியிட்டார்கள். அவர் அவற்றைத் தம் கைகளால் அறுத்து, அல்லாஹ்வின் பெயரை அவற்றின் மீது கூறி, தக்பீர் சொல்லி, அவற்றின் பக்கவாட்டில் தனது காலை வைத்தார்.” (புகாரி, எதாஹி:7)
நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (73:20)
لحمدلله
No comments:
Post a Comment