3. உங்களுக்கு தெரியுமா சூரா கஹஃப்பின் ஒரு கதை அறிவுறுத்தும் படிப்பினை என்ன என்று?
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
ஸுரா காஃப் கூறும் ஒரு கதையின் படிப்பினை, போதனை:
[18:32] (நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக! அவ்விருவரில், ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப் பட்டவைகளாக ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.
[18:33] அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை - எப்பொருளையும் குறையாது
கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும்
ஒலித்தோடச் செய்தோம்.
[18:34] இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன அப்பொழுது அவன் தன்
தோழனிடம் வீண்வாதம் செய்தவனாக "நான் உன்மை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும்
நான் (உன்னை) மிகைத்தவன்" என்று கூறினான்.
[18:35] (பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன்
தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், "இந்த(த்
தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை" என்றும்
கூறிக் கொண்டான்.
[18:36] (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை.
(அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக
இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்" என்றும் கூறினான்.
[18:37] அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக "உன்னை
மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத் துளியிலுருந்தும் படைத்து, பின்பு
உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?" என்று
அவனிடம் கேட்டான்.
[18:38]
"ஆனால், (நான்
உறுதி கூறுகின்றேன்;) அல்லாஹ் - அவன்தான் என் இறைவனாவான்; என்
இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன் –
[18:39].
"மேலும், நீ
உன் தோட்டத்தில் நுழைந்த போது 'மாஷா அல்லாஹு; லா
குவ்வத்த இல்லா பில்லாஹ்'
- அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து
சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை - என்று கூறியிருக்க வேண்டாமா? செல்வத்திலும், பிள்ளையிலும்
நான் உன்னை விடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்ட போதிலும் -
[18:40]."உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன்
தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் வெறும் திடலாக
ஆக்கி விடவும் போதும்.
[18:41]."அல்லது அதன் நீர் முழுதும் உறிஞ்சப் பட்டதாகி - அதை நீ தேடிக்கண்டு
பிடிக்க முடியாதபடியும் ஆகிவிடலாம்" என்று கூறினான்.
[18:42] அவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக்
குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான்.
அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் "என்
இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே!" என்று
கூறினான்.
[18:43] மேலும், அல்லாஹ்வையன்றி, அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார்
எவரும் அவனுக்கு இருக்கவில்லை ஆகவே, அவன் (இவ்வுலகில்) எவராலும் உதவி
செய்யப்பட்டவனாக இல்லை.
கற்க வேண்டிய பாடம்:
★ [18:44] அங்கே உதவிசெய்தல் உண்மையான அல்லாஹ்வுக்கே உரியது, அவன் கூலி வழங்கு வதிலும் மிக்க சிறந்தவன்; முடிவெடுப்பதிலும் மிக்க மேலானவன்.
★ [18:45] மேலும், இவ்வுலக
வாழ்க்கைக்கு ஓர் உதாரணம்,
அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக!
"அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது பூமியிலுள்ள
தாவரங்கள் அதனுடன் கலந்து செழித்து பின் அவை காய்ந்து, பதராகி
அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது - மேலும், எல்லாப்
பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
★ [18:46] செல்வமும், பிள்ளைகளும்
இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய
நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மை தருபவையாகவும், (அவனிடத்தில்)
நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத் தக்கவை யாகவும் இருக்கின்றன.
★ [18:47] நபியே!) ஒரு நாள் நாம் மலைகளை
(அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை
நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்)
நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.
★ [18:48] அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின்
சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள் நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே.
திட்டமாக இப்பொழுது நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால்
நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று
நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்" (என்று சொல்லப்படும்).
★ [18:49] இன்னும் தங்கள் செயற்புத்தகம் (அவர்கள்
முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக்
காண்பீர்; மேலும் அவர்கள், "எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன
(நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்க
வில்லையே!" என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்
செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால்
உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.
★ அல்லாஹுதாலா தாம் விரும்பியவர்களுக்கே
செல்வத்தையும், சந்ததியையும் தருகின்றான்.
★ ஏழைகளை, சந்ததி
இல்லாதவர்களை தாழ்ந்தவர்களாக நினைக்காதீர்கள்!
★ அல்லாஹ்விற்கு இணை வைக்காதீர்கள். அது
பெரும் பாவம்.
★ அல்லாஹ் எப்பொழுது வேண்டுமானாலும்
நம்மை தண்டிக்கலாம் அல்லது வெகுமதி அளிக்கலாம்.
★ மறுமையை நம்புங்கள்!
மற்றும் இறைவனுக்கு அஞ்சுங்கள்!
★ உங்கள் செல்வத்தைக் கண்டு
ஆணவப் படாதீர்கள். அச்செல்வம் உங்களுடையது அல்ல. அது அல்லாஹ்வுடையது. அது
உங்களுக்கு ஓர் அருளாகவும்,
சோதிக்கவுமே கொடுக்கப்பட்டது.
★ அந்த செல்வத்தை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், தேவையு
டையோருக்கும் வழங்கி மறுமையில் பயனடையுங்கள்.
★ இல்லாவிடில் அச்செல்வம் மறுமையில்
உங்கள் கழுத்தில் விலங்காக
மாட்டப்படும்.
★ அல்லாஹ் அளித்த அருள் வளங்களுக்கு
நன்றி செலுத்துங்கள்.
★ அழியப்போகும் இவ்வுலக பொருட்களுக்கு அடைவதற்கு பதிலாக மறுமையில் நன்மை பயக்கும் காரியங்களை செய்ய நேரத்தை செலவிடுங்கள்.
★ ஒரு நல்ல முஸ்லிமாக அல்லாஹ்விடம்
முழுமையாக குடும்பத்தோடு இறைவனிடம் சரணடையுங்கள்!
அல்லாஹீதாலா நம்மை தேர்ந்தெடுத்து ஆசிர்வாதம் வழங்குவானாக, வழி நடத்துவானாக! ஆமீன்!
لحمدلله
No comments:
Post a Comment