19. "அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங் களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக
அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத் தாருக்கும் பளுவாக இருந்தன.” கீழே
கொடுக்கப்பட்டவர்களிலில் இருந்து அது யார் என்று கூறுக.
1. ஃபிர்அவுன்
2. ஹாமான்
3. காரூன்
4. ஸாமிரி
5.
நம்ரூத்
பதில்: 3. காரூன்.
காரூன்
என்பவன் மூஸா (அலை) மின் தந்தையின் சகோதரர் மகன். அவன் இஸ்ராயிலின் சந்ததியைச்
சேர்ந்தவன். கதாதா கூறுகிறார்: "காரூன் தன் மிக இனிமையான குரலில் தவ்ராத்
வேதத்தை வாசித்தவன். ஆனால் அவன் தன் நயவஞ்சகத்தால் மூஸா (அலை) மை நிராகரித் ததுடன்
அவருக்கு கீழ்படிய மறுத்தான். தனக்கு கொடுக்கப்பட்ட அளவிலா செல்வத்தால் வரம்பு
மீறி நடந்து, தன்னை தானே அழித்துக்கொண்டான்."
அவன்
தன் இனத்தாரிடம் மிகவும் கர்வத்தோடு நடந்து கொண்டான். ஷஹ்ர் இப்னு ஹௌஷாப் என்பவர் அவனைப்பற்றி குறிப்பிடுகையில்: "அவன் தன் ஆடையை தரைமேல் படிய இழுத்தபடி மிகவும்
கர்வத்துடனும் ஆணவத்துடனும் நடந்து
செல்வான்" என்று கூறினார் .
அல்லாஹ்
திருக்குர்ஆனில் கஸஸ் என்ற சூராவில்
இவனைப்பற்றி இவ்வாறு விவரித்துள்ளான்: "நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக
இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம்
செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக்
கொடுத்தி ருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும்
பளுவாக இருந்தன; “நீ
(இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக
(அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்." (28:76)
அப்பொழுதுள்ள
சிலர் “மேலும், அல்லாஹ்
உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு
விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப்
போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக
அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்று உபதேசம் கூறினார்கள்). (28:77).
அதற்கு
அவன் கூறினான்: “எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான்
கொடுக்கப்பட்டிருக்கிறேன்!” இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும்,
இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ)
தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக் கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்)
கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள். (28:78).
அப்பால்,
அவன் ஒரு நாள் (கர்வத்துடனும், உலக)
அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது)
இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: “ஆ! காரூனுக்கு
கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக,
அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்று கூறினார்கள். (28:79).
கல்வி
ஞானம் பெற்றவர்களோ; “உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு,
நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட
மேன்மையானது; எனினும், அதைப்
பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்” என்று
கூறினார்கள். (28:80).
அவன் தன் சமூகத்தாரிடம் மிகுந்த குழப்பத்தை உண்டு பண்ணினான். காரூன் ஒரு பெண்ணை பணம் கொடுத்து மூஸா (அலை)மை எல்லோர் முன்னிலையிலும் அவதூறு கூறுமாறு ஏற்பாடு செய்தான். அவளும் அதை அடிக்கடி எல்லோர் முன்னிலையிலும் கூறலானாள். மூஸா (அலை) அல்லாஹ்விடம் உதவி கோரி பிரார்த்தித்தார். அல்லாஹ் அவருக்கு அறிவித்த பிரகாரம் அவளை எல்லோர் முன்னிலையிலும், "உன்னை பணம் கொடுத்து இப்படி கூறச்சொன்னது யார்?" என்று கேட்க, அவள் பயந்து உண்மையை கூறினாள். அதாவது காரூன் தன்னை அப்படி கூறுமாறு பணம் தந்ததாக ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்க மூஸா (அலை) அவளை மன்னித்தார். பின்னர் மூஸா (அலை) அவனையும் அவனது செல்வத்தை அழிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்.
"ஆகவே,
நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்;
அல்லாஹ்வை யன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை;
இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை."
(28:81).
முன்
தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், “ஆச்சரியம்
தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப்
பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்)
அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள்
வெற்றியடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள். (28:82).
ஆகையால்
அல்லாஹ் கூறினான்: "அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில்
(தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை
உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு
உண்டு." (28:83).
கதாதா:
"அவனும் அவனுடைய சொத்துக்கள் அனைத்தும் மறுமை நாள் வரை பூமிக்குள் புதைந்துக்
கொண்டே இருக்கும்" என்று. இப்னு அப்பாஸ் (ரஜி) : "அவனும் அவனுடைய
சொத்துக்களும் பூமியின் அடி ஆழத்தில் புதைந்து போயின" என கூறினார்.
No comments:
Post a Comment