Friday, March 15, 2024

5. ரம்ஜான் கேள்வி-பதில்

السلام عليكم ورحمة الله وبركاتة   

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

5. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்குப்பின் ஒருவராக வந்த அல்லது ஒரே காலத்தில் வாழ்ந்த ஆறு நபிமார்களின் பெயர்களை கூறுக.

பதில்: இப்ராஹிம் (அலை), லூத் (அலை), இஸ்மாயில் (அலை), இஸ்ஹாஃக் (அலை), யாகூப் (அலை), யூசுஃப் (அலை).

லூத் (அலை), இப்ராஹிம் (அலை)மின் ஒன்று விட்ட சகோதரர்.

இஸ்மாயில் (அலை) மற்றும் இஸ்ஹாஃக் (அலை), இப்ராஹிம் (அலை) மின் மக்கள்.

யாகூப் (அலை), இஸ்ஹாஃக் (அலை)மின் மகன்.

யூசுஃப் (அலை) யாகூப் (அலை) மின் மகன்.

இப்ராஹிம் (அலை)ம் [லூத் (அலை) மோடும் தன் மனைவி பீபி சாராவுடன்] பாபிலோன் மக்களை விட்டு வேறு நாட்டிற்கு சென்றார்  என்று அல்குர்ஆன் என்று கூறுகிறது.

(இதன் பின்னரும்) லூத் (அலை) (மட்டுமே) அவர் மீது ஈமான் கொண்டார்; (அவரிடம் இப்ராஹீம் [அலை]): “நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” என்று கூறினார். (29:26)

இப்ராஹீம் [அலை] பிரார்த்தனை:

தனக்கு வெகு காலம் சந்ததி இல்லாததால் தனக்கு ஒரு ஒழுக்கமுள்ள மகன் வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார். 

அல்லாஹீதாலாவும் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து இஸ்மாயில் (அலை) என்ற ஸாலிஹான மகனை அருளினான்.

(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்) இப்ராஹீம் [அலை] மை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக (த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி (உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான். (2:124).

இப்ராஹீமும், இஸ்மாயீலும் அல்லாஹ்வின் வீட்டின் (காபா) அடித்தளத்தை உயர்த்தி பிரார்த்தித்த போது:

எங்கள் இறைவனே! இவ்வூர் மக்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப் படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” (2:129).

அல்லாஹீதாலா தன் நண்பன் இப்ராஹீம் (அலை) மின் இந்த பிரார்த்தனையை அங்கீகரித்து இஸ்மாயிலின் சந்ததியிலிருந்து முஹம்மது நபி யையும், அவருக்கு குர்ஆனையும் இறக்கி தன் அருளை நிறைவேற்றினான்.

பின்னர் அல்லாஹீதாலா வானவர்களை அனுப்பி அவருக்கு பிபீ சாரா மூலமாக ஒரு மகன் பிறக்கப் போகும் நற்செய்தியை அனுப்பினான்:

அதற்கு அவர்கள், “பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள். (15:53)

இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார் களாக்கினோம். (21:72)

மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார். (29:27)

 இஸ்ஹாக்கின் சந்ததியிலிருந்து மூஸா (அலை) மையும், ஈஸா (அலை) மையும் தூதரைகளாக்கி. அவர்களுக்கு தவ்ராத் மற்றும் இன்ஜிலை இறக்கி வைத்தான்.

காண்பீர்! எப்படி அல்லாஹீதாலா இப்ராஹிம் (அலை) மின் பிரார்த்தனையை அங்கீகரித்து அவரின் சந்ததியிலிருநது தூதர்களை அனுப்பி, வேதங்களை இறக்கி அவருக்கு நிலையான சுவனபதிகளை சொந்தமாக்கினான் என்று. 

الحمدلله 

 

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...