16.
கீழ் காணும் பெண்களில் ஒரு முஸ்லிம் ஆண்
திருமணம் செய்ய எந்த பெண்கள் ஆகுமாகப்பட்டுள்ளனர்?
1.
தந்தையின் சகோதரர் மகள்
2.
தந்தையின் சகோதரி
3.
தந்தையின் சகோதரி மகள்
4.
தாயின் சகோதரி
5.
தாயின் சகோதரர் மகள்
6.
சகோதரர் மகள்
7.
சகோதரி மகள்
8.
பால் குடி தாய்
9.
பால் குடி சகோதரி
10.
மனைவியின் தாய்
11.
வளர்ப்பு மகள்
12.
மகனின் மனைவி
13.
மனைவி உயிரோடு இருக்கும் போது மனை வியின்
சகோதரி
14.
யூதப் பெண்மணி
15.
கிறிஸ்துவப்பெண் மணி.
16.
முஸ்லிம் இல்லாத பெண்மணி
17.
விதவை.
18.
விவாகரத்து ஆன பெண்மணி
19.
இரண்டுவிட்ட சகோதரி ( second cousin)
20.
அனாதைப்பெண்
21.
தாயின் சகோதரி மகள்.
பதில்:
✓1.
தந்தையின் சகோதரர் மகள்
✓3.
தந்தையின் சகோதரி மகள்
✓5.
தாயின் சகோதரர் மகள்
✓14.
யூதப் பெண்மணி
✓15.
கிறிஸ்துவப்பெண் மணி.
✓17.
விதவை.
✓18.
விவாகரத்து ஆன பெண்மணி
✓19.
இரண்டுவிட்ட சகோதரி ( second cousin)
✓20.
அனாதைப்பெண்
✓21.
தாயின் சகோதரி மகள்
குர்ஆன்
கூறுகின்றது:
"உங்களுக்கு
(மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்; உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள்
தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும்,
உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப்
பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி
சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும்
ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள்
ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும்
மகளை நீங்கள் கல்யாணம் செய்யக் கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர்,
அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய
கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை.
உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து
கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது
விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து
விட்டமையால்), நிச்சயமாக
அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக
இருக்கின்றான்." (4:23)
"முன்னால்
நடந்து போனதைத் தவிர, (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக்
கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக இது
மானக்கேடானதும், வெறுக்கக்கூடியதும், தீமையான வழியுமாகும். (4:22)
''இன்னும்
(போரில் பிடி பட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண் களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.
(இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல்,
அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத்
(திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே
இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம்
அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்) தொகையைக்கடமையாக கொடுத்து
விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதனை (க் கூட்டவோ அல்லது குறைக்கவோ)
இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ்
நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்." (4:24).
"முஃமின்களான
கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம்
அளிக்கப்பட்டவர் களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய
மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு
அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும், எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில
நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார். (5:5).
"நம்பிக்கை
கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள்
பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை
அவர்கள் செய் தாலொழிய, பெண்களுக்கு நீங்கள்
கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத்
(துன்பம் கொடுத்து) தடுத்து வைக் காதீர்கள். இன்னும், அவர்களுடன்
கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை
ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை
ஏற்படுத்தி விடலாம். (4:19)
"நீங்கள்
(மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு
(கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள்
உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன்
புசியுங்கள். (4:4).
No comments:
Post a Comment