Monday, June 2, 2025

 

4. ஹஜ் செய்ய அழைப்பு விடுதல்

السلام عليكم ورحمة الله وبركاتة

ِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

நாம் இப்ராஹீமுக்கு ....... புனித  ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக” என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக).(22:26)

ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்). (22:27)

இப்னு காதிரின் விளக்க உரைப்படி அல்லாஹீதாலா இப்ராஹிம் (அலை) மை கட்டிய அந்த வீட்டிற்கு ஹஜ்ஜை செய்ய  மனிதர்களுக்கு அழைப்பு விடுமாறு கட்டளையிட்டார்

இப்ராஹீம் (அலை) கேட்டார்கள்: "ஓ இறைவா, என் குரல் அவர்களை அடையாதபோது இதை நான் எவ்வாறு மக்களுக்கு அறிவிக்க முடியும்" அவருக்கு பதிலளிக்கப்பட்டது: "அவர்களை அழைக்கவும், நாங்கள் அதை அறிவிப்போம்."

எனவே இப்ராஹீம் (அலை) எழுந்து நின்று, "ஓ மனிதர்களே! உங்கள் இறைவன் ஒரு வீட்டை நிறுவியுள்ளான், எனவே அதற்கு ஹஜ்ஜை செய்ய வாருங்கள்" என்று கூறினார்கள்.

பூமியின் அனைத்து பகுதிகளையும் அவரது குரல் சென்றடையும் வகையில் மலைகள் தங்களைத் தாழ்த்திக் கொண்டன என்றும், அவர்களின் தாய்மார்களின் வயிற்றில் இருந்தவர்களும் அவர்களின் தந்தையர்களின் இடுப்புகளும் அழைப்பைக் கேட்டன என்றும் கூறப்படுகிறது.

நகரங்கள், பாலைவனங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைவரிடமிருந்தும் பதில் வந்தது, மேலும் அல்லாஹ் கட்டளையிட்டவர்கள் மறுமை நாள் வரை ஹஜ்ஜை செய்வார்கள்: "ஓ அல்லாஹ், உமது சேவையில்." [ ஆதாரம்: இப்னு அப்பாஸ், முஜாஹித், இக்ரிமா, சயீத் பின் ஜுபைர் மற்றும் சலஃப்களில் உள்ள மற்றவர்கள்]

அல்லாஹ்வே நன்கு அறிவான்.

الحمدلله


No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...